02 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-15

"என்ன அக்ரம் ராத்திரித் தூங்கலயா? கண் சிவந்து இருக்கு!

 என்று நான் கேட்டதும் பதில் சொல்லாமல் புண்பட்ட
நெஞ்சை புகைவிட்டு ஆற்றிக்கொண்டிருந்தான்.

 .இவனுடன் பழகிய காலங்களில் அவன் உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் நேரத்தில் இந்த புகைவிடும் பழக்கம் அதிகம் என்பதை  கண்டுகொண்டேன்!

"என்ன பாய்.  ஏன் டென்ஸன் ?விற்பனை அளவைத் தாண்டலையோ?

"என்னால் யாரையும்  நம்ப முடியல !யாரும் இப்படி நம்பிக்கையை சீரலிப்பார்கள் என்று  கனவு காணவில்லை.

" எனக்கு வார ஆத்திரத்துக்கு ஏதாவது செய்யனும் போல இருக்கு.!

"என்னடா சம்மந்தம் இல்லாமல் பேசுகின்றாய் .

வெளியில் வா போய் கோப்பி குடித்துக் கொண்டு கதைப்பம் என்று நாங்கள் வெளியேறி எதிரே இருக்கும் காப்பிக் கடை மேசையில் உட்காந்திருந்தோம்..

 வழமையாக நாங்கள் என்ன கேட்போம் என்பதை அறிந்த கடைக்காரர் எனக்கு பால் கோப்பியும் ,அக்ரமுக்கு பால் தேத்தண்ணியும் பரிமாறினார்.

".இப்ப சொல்லு பாய் என்ன பிரச்சனை. "

உனக்கு ஒன்றும் தெரியாதா ?

"என்ன கேட்க வார"

 புதிர்போட்டால் எனக்கு எப்படித் தெரியும் !

நேரா தீர்வுத்திட்டத்திற்கு வராமல் வட்டமேசையில் இருந்து எழும்பினால் எப்படி பாய்!


வெளிப்படையாக பேசு.

" இல்ல நேற்று நீ எங்க வேலை செய்தாய் ?

நான் சிதம்பரபுரம்!

" அங்கிருந்து  வரும்போது  கல்வாரியில் யாரையாவது  ஜோடியாக பார்த்தியா? உண்மையைச் சொல்லு.."


"என்ன எனக்கு உதா வேலை."

 யார், யார் ஜோடியா டூயட் பாடுறாங்களா, ஜாலியா கடலை போடுறாங்களா ,என்று விடுப்புப் பார்க்க!

"உன் நண்பன் நான் என்றால் விளையாடமல் சொல்லு"

 பாய் கடுப்பேத்தாத .

"சொல்லு சொல்லு என்று பாட்டுப்பாடவா படப் பாட்டைப் பாடச் சொல்லுறியா ?


" சும்மா கோபப்படாமல் புகை ஊதாத. என் சேட்டிலும் மணக்கும்.

" நேற்று நீ யாரையும் பார்க்க வில்லையா? சாலிக்காவுடன் அந்தளவுக்கு கைபேசியில் பிஸியோ !

"பாய் கடிதாங்க முடியல "

"நேற்று வாகணத்தில் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தேன். வரும் போது அதனால் யாரையும் கவனிக்க வில்லை.

" நீ யாரைப் பார்த்த விசயத்தைச் சொல்லு"

  நேற்று சின்னமதினியை ஒரு பையனுடன் கல்வாரியில் பார்த்தேன்!

" நீ என்ன சொல்லுறாய் அகர்ம் ?

பார்த்திமா அப்படிச் செய்யமாட்டாள்!

 நீ வீனாக சந்தேகப்பாடாத.

" இல்ல தனிமரம். நான் அவங்க இரண்டு பேரையும் தொடர்ந்து கவனிக்கின்றன்

 ".ஒன்றா படிப்பதால் ஏதாவது சந்தேகம் தீர்க்க போய் இருப்பாங்க.

" நானும் அவங்கள் ஒன்றாக படிப்பதால் தான் முக்கியத்துவம்  கொடுக்காமல் இருந்தன்.

 ஆனால் நேற்று அவர்கள் கல்வாரியில் இருந்த காட்சியை என்னால் அசட்டையாக இருக்க முடியாது!

 மொயூத்  வாப்பா கிட்ட இதை எப்படிச் சொல்லுறது என்று தெரியல .

பானுக்கிட்டையும் இன்னும் வாய்திறக்கல .

"நேற்று இரவு இதுதான் ஜோசனை
அதனால ஒழுங்கா நித்திரை கொள்ள முடியல "

மற்ற மதினிக்கு நிக்கா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சூரியகதிர் நடவடிக்கையா??

 மன்னாரில் இருந்து படிக்க இங்க வந்தவள் இப்படி திசைமாறுவதா தனிமரம்!


பாய் அப்படி இருக்காது அவள் படிப்பை சீர்குழைக்கக் கூடாது.

 முதலில் அமைதியாக இரு அக்ரம்.

 நான் பேசிப்பார்க்கின்றன் பார்திமாவிடம்..


"ஆமா யாரு பையன்"

 உங்க தோஸ்த்து தான் தனிமரம்.

 யாருடா நம்ம கூட நிறைய பசங்க நட்பு "

நீயாரைச் சொல்லுறாய்?

 அதுதான் கோவில் குளத்தில் இருக்கிறானே.

 நீ போனகிழமை சாலிக்காவுடன் பேசும் போது அருகில் இருந்தானே.

 பார்த்தால் நல்ல பெண்டா சோடா கலரில் இருப்பானே.

 ஓ ரவியா!


 அவன் பெயர் ரவியா தனிமரம்.

 இதை ஒரு வழி பண்ணனும்!
"சரி நான் பார்க்கின்றன்.
 நீ வேலையைப் பாரு பாய்."

உரலுக்கு ஒரு பக்கம் இடி உலக்கைக்கு இரண்டு பக்கம் இடி என்பது போல் நான் இரண்டு பக்கமும் பொய் சொல்ல வேண்டிய நிலையை கடவுள் தந்து விட்டானே !

பார்த்த காட்சியைக் கூட நட்பின் நிமித்தம் வெளிக்காட்டிக்க முடியவில்லை.

 இந்த பாதை எங்கு போய் முடியுமோ! ஊரில் உள்ள தெய்வங்கள் எல்லாம் என் சிந்தனையில் !

பார்த்திமாவிடம் கதைப்பம் என்று அன்று மாலையில் அவர்கள் வீட்டுக்குப் போனேன். அங்கே பார்த்திமா இந்தப்பாடலை


பொதிகை அலைவரிசையில் பார்த்துக் கொண்டிருந்தால் என் வரவை கவனியாது!

01 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-14

இந்தப் பகுதியில் அரசியல் பார்வை தவிர்த்து சாதாரண குடிமகனாக எண்ணிப்பாருங்கள் என் பதிவின் ஆதங்கம் புரியும். கருத்து உடன் பாடு இல்லை எனில் விவாதிக்கத் தயார்!//

------//://////////://
குடும்பத்தில் தலைமகன் நல்ல தேர் ஓட்டியாக இருக்காமல் போனால் குடும்பம் என்ற தேர் சந்தி சிரிக்கும்.

 இடப்பெயர்வும்,யுத்தமும் நம் தேசத்தில் ஆண்களை காவு கொண்டது. ஒரு புறம் என்றால்!

 வீட்டில் இருந்து கொண்டு பாதுகாப்புப் படையினை குறை சொல்லிக் கொண்டு உழைக்காத தறுதலை குடும்பத்தலைவன்கள் பலர்!

 சோம்போறிகளாக இருக்கும் இன்னொரு முகத்தினை ஈழம் முகாம்















என்ற போர்வையில் வழங்கிக் கொண்டு இதுக்கின்றது.

 1994 சந்திரிக்கா ஆட்சியின் சமாதான காலகட்டத்தில்.






















 தாயகத்தில் சாந்தியும் சமாதானமும் கிடைக்கும் என்ற ஆவலில் மண்டபம் முகாமில் இருந்த பலர்.

 குடும்பம் சகிதமாக  வவுனியாவிற்கு வந்த போது அரசு அவர்களை குடியேற்றிய முகாம்தான் சிதம்பரபுரம் முகாம்.


இந்தமுகாமில் தாயகத்தின் பல பகுதி மக்களும் இருந்தார்கள்.

 அருகில் விவசாயபூமி செழித்து இருந்த போதும் உடல் உழைப்பை விரும்பாமல் அரசு கொடுத்த நிவாரண உலர் உணவின் பெரும்பகுதியை நகரில் விற்றுவிட்டு தம் சுயதேவையை போக்கீனார்கள்.

 தன் குடும்பத்தை முன்னேற்ற சிலர் வெளியேறினார்கள்.


 சோம்போறிகள் சிலர் அரசினைக் குறை கூறிக்கொண்டு  அருகில் இருக்கும் மினிசினிமாவில் ஸ்கிலா படம் பார்த்துக் கொண்டும் ,
கசிப்புக் குடித்துக் கொண்டும், காட்ஸ் விளையாடிக்கொண்டும், இருந்த மன்னர்கள் மீது எனக்கு எப்போதும் நக்கீரன் பார்வைதான்.

 அரசு திட்டமிட்டே இவர்களை  சுதந்திர உணர்ச்சி அற்றவர்களாக இருக்க வேண்டும்!

 என்ற ஆவலில் அதிகமான கில்மா படங்களை தம் கைக்கூலிகள் மூலம் மினிசினிமாவில்  தங்கு தடையின்றி  ஒலி/ஒளி  காட்சிகளாக்கினார்கள்.

 முகாம் அருகில் தேனீர்க்கடை இருக்காது மூன்று மினிசினிமா ஹவுஸ்புல் காட்சியாக இருக்கும் .

 அருகில் இராணுவம் இவர்களுக்கு பாதுகாப்பு அரண்  அமைத்திருக்கும்.

 இந்த முகாம் வாழ்க்கையின் சீரலிவை வைத்து  என்னால்
பலபதிவுகள் போடமுடியும்!

 ஆனால் கலாச்சார நடுநிலையாளர்கள் என்னையும் ராஜபக்ஸயின் அன்னக்காவடி என்பார்கள்!

 இங்கு இருப்பதிலும் பார்க்க அவர்கள் அரசகட்டுப் பாடு இல்லாத பகுதியில் போய் இருந்தால் திருந்தி இருப்பார்கள் என்று என் நினைவுகள் !

.நண்பன் ஓட்டை வடை ஒரு நண்பனின் பின்னூட்டத்திற்கு  மறுமொழி போட்ட போது!
 அவர்கள் அப்படித்தான் அரசினையும் குறை சொல்வார்கள். மறுதரப்பினர்களையும் குறை சொல்லிக் கொண்டே ஓசியில் உடம்பு வளர்ப்பார் என்று உண்மையை போட்டு உடைத்தார்


.அது நிஜம் !

இவர்கள் தம் குடும்பம் சீரலிய அவர்கள் பராதம் போல் சீட்டு ஆடுவார்கள்!

" ஏய்யா வேலைக்குப் போகவில்லை என்றால் "

நான் மன்னர்குடி மைனர் மகன்  என்பார்கள்.

 கேட்பவர் கேணயன் என்ற தொனியில்!

.தங்கள் பிள்ளைகள் மனைவி எவ்வளவு துயர் கொள்கிறார்கள் என்று எண்ணமாட்டார்கள்!

 இவர்கள் வீட்டுப் பத்தினிகள் எல்லாம் பாமரமக்கள் என்பது இன்னொரு துயரம்.

 மனுசன் ஓடிப்போய் விடுவான் என்று இன்னொரு வம்சத்தை மட்டும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பெத்துப் போடுவார்கள். பூனை குட்டிபோட்டது போல்!

 ஒரு நிமிடம் ஜோசியுங்கள் !

மூத்தமகள் மணம் முடிக்கும் வயதில் இவர்கள் இன்னொரு வாரிசைத் தொட்டிலில் ஆடவிடுவார்கள் .

எத்தனை காமுகன் அருகில்! தங்கள் வாரிசுகள் நிம்மதியாக நித்திரை கொண்டார்களா?
 போதிய மனச்சந்தோஸத்துடன் இருக்கிறார்களா?

 அவர்கள் ஆசை. பாசம் என்ன என்று எண்ணாத இந்த மக்கள் மீது எனக்கு எப்போதும் .

மேட்டுக்குடி ஊடகம் போல் பாராமுகம் போல் இருக்க முடியாமல்  வவுனியாவிற்கு வந்து இவர்கள் கையேந்தும் நிலை பொறுக்காமல நாம்
சிலர் குழுவாக பாடசாலை செல்லும் வசதி செய்து கொடுத்தும் மறுநாள் இவர்கள் கையேந்திய நிலை கண்டு கைவிரல் கன்னத்தில் வைத்தவன்.

 தன்பிள்ளையை தான் தான் அனுப்பினேன் அவன்(ள்) தான் எங்களுக்கு வருமானம் ஈட்டும்  மூலதனம் என்ற போது மகாநதி படம் எல்லாம் ஒரு தூசு!

 இந்த முகாமில் இருந்து குலமாதுகள் விலைமாதுகள் ஆகி எந்த விடுதிகளில் எந்த அறையில் இருந்தார்கள் என்று என் குழுவுக்குத் தெரியும்!

 இது ஒன்றும் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் ஆணைக்குழு அல்ல!

 இதை இப்படிச் சொல்லக்கூடாது என் பிரதேசத்தின் உண்மையை ஹிட்சிக்கா வியாபாரம் ஆக்காதே! என்று முகம் தெரியாமல் தனிமெயிலில் வரும் நண்பனுடன் மோத தனிமரம் என்றும் தயார்!

 நானும் இந்தமண்ணில் வாழ்ந்த மைந்தன். நானும் வன்னியான் தான்!

.ஆனாலும் என் கோபம் தீராதநதி!

 .இந்த
முகாமிற்கு போவதே எனக்கு நாசி முகாமிற்குப் போகும் உணர்வு என்பதால் வியாபார
நிமித்தம் பணி முடிந்து திரும்பும் போது தான் ரவியையும் பார்த்திமா இருவரையும் அந்தக் காட்சியில் நான் இக்கரையில் கண்டேன்!

நல்ல பதிவுகளை ஊக்கிவித்து பின்னூட்டம் போட்டும், வாக்குப் போட்டு ஊக்கி விக்காத கும்மிப் பதிவாளர் போல்!  மறு கரையில் இந்தமுகாமுக்கு வியாபாரம் செய்ய போனபோதுதான் அக்ரம் அவர்களை அந்த காட்சியில் கண்டது .

பிரபல்ய கம்பனிகள் கைவிட்ட வியாபாரம் இங்கு இருப்பது நம் சில நண்பர்களுக்குத் தான் தெரியும்!

அக்ரம் கண்களில் கோபத் தீ! தன் மதினி செயல் இப்படி என்று எண்ணும் போது நல்ல ஒரு மருமகனுக்கு வரும் கோபம் இயல்பானதே!
/////////:

////////:

ராகதேவனின் ஜோடிப்புறா அம்மா ஜீவா  அவர்களின் பிரிவு வேதனையில் வாடும் குடும்ப உறவுகளிக்கு  ஒரு   ரசிகனின் கண்ணீர் அஞ்சலிகள்!