29 September 2016

காற்றில் வந்த கவிதைகள் -3

இணைய வானொலிகளின் நிகழ்ச்சிக்கு எழுதியவை வலையில் சேமிப்பாக! நன்றி லங்காசிறி எப்.எம், புரட்ச்சி எப்.எம் !
---------

நீ கடல்கடந்த போதும்! உன்
கருவிழிப்பார்வையில்
கலந்து, கரைந்து போன என் 
காதல்  !இன்னும் வாழ்க்கைக்
கரையைத்தேடும் பயணி போல
காத்து இருப்பதை  உன்
உயர்கல்வி என்றாவது
உணர்த்துமா ?என்ற 
காத்திருத்திருப்பில்
உருப்படாதவன் இவன்!
  (கற்பனையே)



----------------------------------------------
இழந்தவை எல்லாம்
இன்னும் பெரிதல்ல 
இருந்தாலும் !உன் துரோகம் தான்
இதயத்தை நெருடுகின்றது
இப்போதும் நேசிக்கும் நண்பனாக!
இதுவே உன்னிடம் 
இனிமையாக உறுதியுடன் கூறுவேன்!
இவன் தொலைத்தது 
இன்நாட்டு நாணயம் போல 
இதுவும் கடந்து 
இங்கிலாந்து நாணயம் எல்லாம்
இங்கு வீடு கட்டலாம் ஏய்த்த
இசைபோல என்றாலும்
இனிக்கும் என்றாலும் 
இவன் எழுந்துவிட்டான்
இனிய உதயம் என்பது போல
இதையும் காலம் 
இருத்தி வைக்கும் உன்
இருண்ட இதயத்தில்!



//////
பூக்களைத்தாங்கும் நார் போல
பூத்திருந்தேன்  !
பூங்குயிலே நீயோ உதிர்ந்துபோகும்
பூவாய் என்னி என்னை
புதைத்துவிட்டுச்சென்றாயே!
புரண்டு அழுகின்றேன்
பூத்த மலரிடம் இன்று!


--------------------------------------------------------------------------------------------------

விரும்பித்தான் உன்னைப்பிரிந்தேனடி!
விரும்பிய  செல்வம் ஈட்டி,
வீடு ,வாசல் ,விளைநிலம் எல்லாம் 
விலைக்கு வாங்கி .உன்னைச்சேர
விண்ணப்பித்துக் காத்திருந்தேன்!
விரும்பாத நீ நேசிக்கும் இன்றைய
விடுதலைக்காலத்தில் இவனோ
விட்டுவரமுடியாத! புலம்பெயர் தேசத்தில்
விழுந்துகிடக்கும் சருகு!
  (யாவும் கற்பனை)



--------------------------------------------

தினமும் கவிதை எழுதி
தினம் தினம் கொல்லும் உன்மேலான
தீராதக்காதலை திறந்தே காட்டும்
என் இருவிழிகளைக் காண !
திடீர் என்றாவது ஒருதடவை
தோன்றிடு திங்கள் போல
என் ஜீவனே!







26 September 2016

நெஞ்சிக்குள் உன்னை வைத்து!!!

இந்திய தமிழ் சினிமாவுக்கு மாற்றீடாக! ஈழத்தில் 83 இல் தொலைந்த தமிழ்ச்சினிமா  மீண்டும் புதிய வேகத்துடன் அரும்புகின்றது என்ற விளம்பரங்கள் பல ஊடகத்தில் காணும் போது கன்னி முயற்ச்சி வெற்றிவாகை சூடவேண்டும் என்று ஈழத்துப்படைப்பை நேசிக்கும் ஒருவனாக என்றும் நம்மவர் படைப்பை யாசிக்கின்றேன் !வாழ்த்துகின்றேன்.!!



ஆனால் படைப்புக்கள் எல்லாம் இந்திய அதே பழைய பாணியை பின் பற்றுவதை ஜிரனிக்க முடியவில்லை.இலங்கை தமிழ் சினிமாவின் கதை  எழுதிய தம்பி ஐயா தேவதாஸ்  நூலை கொஞ்சம் வாசித்து உள்வாங்கி.

http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_38_itc_9.php.
மூத்தவர்கள் ஈழப்படைப்பினை பார்த்து ரசித்து புதிய களத்தில் இருந்து புதிய வேகத்தில்  நம்மவர்கள்என்று  வெளி வருவார்களோ தெரியாது! ஆனாலும் நம்மவர் பாடலை நேசிக்குப்பலரில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்தப்பாடல் கவி ரசித்தேன் !



காட்சிகள் இந்திய  தமிழ் சினிமா/ஹிந்தி என தென்னக  வசீகரா முதல் /அயன் ,திருமலை இன்னும் பிரியமான தோழி முதல்  பலதை பின்னனிக்காட்சி பார்த்து ரசித்து, சகித்து ,தான்  வெட்டியாக இந்த சமூகத்தளத்தில்  தனிமரமும் இருக்கின்றேன் !நண்பா! தென்றல் சுடும்[[


 நமக்கான அடையாளம் இது அல்ல! உங்களின் முழுமையான படைப்பை திரையில் காணும் ஆவலுடன் இருக்கின்றேன்.அதன் விமர்சனமும் என் தளத்தில் நேரம் இருப்பின் எழுதுவேன்! https://www.youtube.com/watch?v=njQ30GYDfZw