08 April 2012

தலைக்கவசம் போகும் தருனத்தில்! நெஞ்சில்!!!

என் இலக்கியம் மீதான ஆர்வத்தை தூண்டியது என் பாடசாலையும் அதன் சூழலும் தான். அத்துடன் மலையகமும் என் ஆசிரியர்களும் தந்த ஊக்கமும் ஒரு காரணம். எழுத்து மீதான ஆர்வமும் வாசிப்பும் பள்ளி வாழ்கையுடன் முடிந்து போய் விட்டது என நினைத்திருந்த எனக்கு ஐபோனின் வரவும், அதில்  'செல்லினம்' அறிமுகமும் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது.

நாட்குறிப்பில் எழுதுவதோடு நிறுத்தியிருந்த என் உணர்வுகளை இப்போது பொதுவில் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். கூகுல் ஆண்டவரின் வரவிலும், நிரூபனின் தயவிலும் பதிவுலகில் தனிமரம் ஆகி உங்களுடன் பல பின்னூட்டங்களில் முகம் தெரியாது உறவாகிப் போனேன். அத்தோடு  இந்த தனிமரம் நேசனையும் பதிவுலகில் பலருக்கு அறிமுகம் செய்துவைத்து, நட்சத்திர வாரம் என்ற மகுடத்தில் ஏற்றி, பதிவுலகில் மூத்தவர்கள், பெரியவர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், முதுகலைமாமானிகள், போன்ற ஆசான்கள் ,ஆசிரியர்கள் இருந்த சபையில் என்னையும் ஒரு பதிவாளர் என்று உங்களிடம் கொண்டு வந்த தமிழ்மணம் நட்சத்திரவாரம் என்ற பதவியைத் தந்த நிர்வாகத்தினருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஏதோ ஓர் ஆர்வத்தில் வலையைத் திறந்து எப்படி பலரிடம் போய்ச் சேருவது என்று தள்ளாடிய போது, தூரத்து வானவில்லாக வந்து வழிநடத்தியதுடன் என்னையும் என் பதிவுகளையும் சீர்திருத்தி என் வலையையும் தன் தொழிநுட்பத்திறமையால் முதலில் வடிவமைத்த நண்பன் நாற்று நிரூபனுக்கு நன்றிகள். அவரிடம் இருந்து மீண்டும் சில மாற்றங்கள் நான் விரும்பிய வண்ணம் சீர் செய்து தந்த சகபதிவாளர் நிகழ்வுகள் கந்தசாமிக்கு என் இதயம் கனிந்த  நன்றிகள். இந்தவாரம் என்னைபலரும் பாராட்டுவதுதற்கு காரணம் அவர்தான். இலக்கணவழு வராத வண்ணம் என் பதிவுகளை எழுத்துப்பிழை திருத்தித் தந்தவர் அவரே. உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும் சேர்த்து அவருக்கு நன்றிகளை பூக்களாக சூட்டுகின்றேன். தொடர்ந்து இந்த வாரம் என்னோடு பலர் பின்னூட்டங்கள் மூலம்  ஊக்கப்படுத்தி இருந்தார்கள்.

முதலில் என்னை ஆதரித்த மதுரை சரவணன், பாரத்-பாரதி, மதிசுதா, ஹேமா, மைந்தன்சிவா, விக்கி, நாஞ்சில்மனோ, புலவர் இராமனுஜம், சென்னைப்பித்தன், இரத்தனவேல்நடராஜன், சண்முகவேல், ராஜி,மதுமதி ,ரியாஸ்,ஜீ,லோசன். கானாபிரபா. ராஜேஸ்,ராஜ நடராஜன்,விமலன், ரியாஸ், கனவரோ, மதுரன், தமிழ்வாசி-பிரகாஸ், வேடந்தாங்கல் கருண், கவிதைவீதி, வலைச்சரப்பணிக்கு இடையிலும் பாசம்மிக்க துரைடெனியல், இராஜராஜேஸ்வரி, அம்பாளடியாள், சென்பகம்-விடிவெள்ளி, ரெவெரி, பன்னிக்குட்டிராமசாமி, ஊர்க்காவலன், ரமணி ஐயா, சி.பி.செந்தில்குமார், அப்பு, சீனி, தங்கம் பழனி, சசிக்கலா, அதிரா, ரதி, வசந்தமண்டபத்தில் என்னையும் ஒருவனாக்கிய மகேந்திரன் அண்ணா, நடைவண்டியில் என்னையும் சுமக்கும் அண்ணன் கணேஸ்.. மற்றும் சொல்ல தவறிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்தவலையுலக இணைப்பால் என்னையும் என் பதிவுகளையும் அதிகம் பதிவாளருக்கு அறிமுகம் செய்த செங்கோவி ஐயா வழிநடத்திவிட்டு இடையில் பணிகள் காரமாக விலகி நிற்க,  இந்த வெற்றிடத்தை திறமையாக செய்யும் இன்னொரு ஐயா, என் தந்தையைப்போல என்னையும் வழிநடத்தும் யோகா ஐயா அவரோடு அம்பலத்தார் ஐயா, அக்காள் ஹேமா, தங்கை கருவாச்சி கலை, மூத்தவர் மகேந்திரன் அண்ணா, இடையில் ரெவெரி அண்ணா, எனக்குப் பெரியவர் கணேஸ் அண்ணா, என ஒரு பட்டாளம் இருக்கின்றது. இரவில் தனிமரத்தில்  நானும் வாரன் என்று சிட்டுக்குருவி, எஸ்தர்-சபி, தம்பிராஜ்(இவன் பதிவு போடாவிட்டாலும் என்னோடு அதிகம் பதிவுலகைத் தாண்டி பலதும் பேசுவான்).

துஷி முகநூலில் முண்டியடிப்பான் 'நேசண்ணா இது சரியில்லை, என்னை வம்புக்கு இழப்பதே உங்க பிழைப்பா போச்சு!' என்று பாசத்துடன்... இடையில் காட்டான் கடிப்பார் 'தனிமரம் வந்திட்டுது ஓடுங்கடா தப்பித்து,,!' என்று. 

எல்லாருக்கும் ஜாலியாக பின்னூட்டம் போட நினைத்தாலும் சில பதிவுகள் மனதை கனக்கச் செய்துவிடும். அந்த நேரத்தில் ஒதுங்குவதும், வேலைப்பளுவில் வாசிப்பதுடன் நின்றுவிடுவேன். பலர் பதிவுகளை எழுத ஊக்கிவிப்பதும், குறைநிறைகளைச் சொல்லித் தட்டிக்கொடுப்பதும் என்னை இன்னும் எழுத்தத் தூண்டுகின்றது. ஆனாலும் இந்த எழுத்துப்பிழை என் வேகத்திற்கு தடை போடுகின்றது. எனக்குப்பதிவுலகில் பலர் தரும் ஆதரவில் மணியின் பலபதிவுகள் மற்றும் நிரூபன்,செங்கோவி போன்றோரின் ஊக்கமும் தான் அதிகம் பலரிடம் போக உதவியது. ஆரம்பத்தில்  துஷி  பின் ராஜ் மூலமும்  தனிமரம் இன்னும் பலரைச் சென்றடைய உதவி இருக்கின்றார்கள். இவர்களுக்கும் என் நன்றியைத் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றாலும் மறக்கவில்ல இவர்களையும்.ஓசியா, ஒமர்,போதிதர்மன்,ஹாலிவூட் ரசிகன், ஆகுலன், காற்றில் என் கீதம், அமுதன், அமல்ராஜ், சின்னவன், மகேஸ், பாலாவின் பக்கம் பாலா,சாய்பிரசாத், மனசாட்சி, டாக்டர் முருகானந்தம், ஆகியோருடன் என்னை ஊக்கிவித்த அனைத்து பதிவர்களுக்கும்  என் சிரம்தாழ்த்திய நன்றிகள். இவர்களுடன் இந்தவாரம் என் பதிவுகள் வர ஊக்கம் தந்த என் தாய் அவருடன் மூத்த சகோதரி என் பதிவுகளை எட்டிப்பார்த்து சிரிக்கும் மச்சான் மற்றும் என் மனைவிக்கும் சிறப்பு நன்றி.

விடைபெறும் வேளையில், இந்த வாரம் இப்படி ஒரு அதீத ஏற்றம் கண்டது உங்களின் ஆதரவினால் தான்  என்பதில் மிகுந்த சந்தோசம்.

தொடர்ந்தும் தனிமரம் ஒரு தொடரோடு வந்து கொண்டு இருக்கின்றது; அது சொல்ல மறந்த சில மலையக உணர்வைத் தாங்கி வருகின்றது! அதில் வரும் பல விடயங்கள் பதிவுலகில் புதிதாக இருக்கும்; ஆனால் பலர் அறிய வேண்டும் என்பதே என் ஆர்வம். நண்பனின் தகவல் மூலம் தனிமரம் எழுதுகின்றது. அந்த தொடர் எழுத தோள் கொடுக்கும் நண்பன் டெனில்,மற்றும் காற்றில் என்கீத்ம் தோழிக்கு என் சிறப்பு நன்றிகள்.  அந்த தொடர் முடிய பிரெஞ்சுக் காதலியை கூட்டி வருவேன்!

எனக்கு முகம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும், என்னைப் பின் தொடரும் 102 உறவுகளுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். யாரையாவது பெயர் குறிப்பிட மறந்து இருந்தால் மீண்டும் அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றேன். பதிவை சற்று துரித கதியில் வலை ஏற்ற வேண்டியிருப்பதால் என்றும் உங்களின் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையுடன்...

இந்த வாரம் பல பதிவுகளுக்கு பின்னூட்டம் போட முடியாததற்க்கு காரணம்  நேரம் இன்மையே;  இனி வழமைபோல வருவேன் உறவுகளே!

ஒரு குட்டிக்கவிதை!
உறவு!!


 உறவுகள் சுமையாகிப்போனது உனக்கு
 காதல் போதையில் ! 
கூட்டுக்குடும்பத்தின் பெருமை தெரியாது!!
 பேதை கைபிடித்த போடியார் மகனுக்கு!
 போய்விடு இன்னொரு ஜென்மத்திலும்!
 இந்த அண்ணனுக்கு தங்கையாக பிறக்காதே! 
தந்தை தந்த குடும்ப காவடி சந்திசிரிக்குது!
 தலைகுனிந்து நிற்கின்றேன் !!
 வேருக்கு வென்நீர் ஊற்றினாலும் 
வீழ்ந்து போகமாட்டன் பற்றுக்கள்!
 துறந்தவன் பலகாலம்!!!


 (இதுவும் ஒரு பாமரன் குறுக்கியது)


 -//போடியார்-மட்டக்களப்பு வட்டாரச் சொல்! 




எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்! 


எல்லாருக்கும் நன்றி சொல்ல ஒரு பாடல் இதோ- 

68 comments :

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள் நேசன்

அம்பலத்தார் said...

ஒரு சிறு பின்னூட்டம் போட்டவர்களைக்கூட மறக்காமல் நினைவுகூர்ந்த உங்கள் இனிய பண்புதான் உங்களுக்கு இத்தனை நல்ல நட்புக்களை தந்திருக்கிறது. இந்த ஒருவாரமும் உங்களின் முன்னேற்றத்தின் மற்றும் ஒரு படிக்கல்தான் இதுவே முடிவல்ல நீங்கள் இன்னும் எவ்வளவோ சாதிக்கும் வல்லமைபடைத்தவர். நல்லதோர் சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்துடனான உங்கள் பயணத்தை தொடருங்கள். உங்களுடன் கைகோர்த்து பயணிக்க நாங்கள் இருக்கிறோம்

ஹாலிவுட்ரசிகன் said...

நான் சொல்ல நினைத்ததெல்லாம் அம்பலத்தார் சொல்லிவிட்டார். வாழ்த்துக்கள் நேசன். பயணங்கள் தொடரட்டும்.

பால கணேஷ் said...

தம்பி நேசன்! நேரமின்மை காரணமாக சில பதிவுகளில் கருத்திட இயலாது போவது எல்லோருக்கும் நேர்வதே. ஆனால் பதிலளித்து ஊக்கம் தரும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொண்டாடும் உங்கள் பண்பு பாராட்டுவதற்குரியது. என்னைப் பொறுத்த வரை எழுத்துப் பிழை என்பது பொறுத்துக் கொள்ளக் கூடியது. உங்களின் கருத்துக்கள் சரியாக இருத்தலே மகிழ்வுதரும் விஷயம் என்பேன். எனவே தொடர்ந்து உற்சாகமாக எங்களுக்காக எழுதுங்கள். எதிர்வரும் பிரெஞ்சுக்காதலியை ஆர்வமுடன் எதிர்கொண்டழைக்கக் காத்திருக்கிறேன் உங்கள் சகோதரன்!

Riyas said...

தொடர்ந்து கலக்குங்க நேசன்.. எழுத்துப்பிழை எனக்கும் வருவதுதான்.. கனேஷ சொன்னது போல் அதை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை..

அப்புறம் நன்றிக்கு நன்றி..

அந்த பாட்டுக்கும் நன்றிக்கும் என்ன சம்பந்தம் #டவுட்டு

Anonymous said...

தொடர்ந்து கலக்குங்க ree ree annaa ...

vaazththukkal annaa ....

தனிமரம் said...

வாங்க அம்பலத்தார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வாழ்த்துக்கு.

தனிமரம் said...

நன்றி அம்லத்தார் வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரியாஸ் வருகைக்கும்  கருத்துரைக்கும்..

தனிமரம் said...

அந்த பாட்டுக்கும் நன்றிக்கும் என்ன சம்பந்தம் #டவுட்டு //ஹீ தமிழ் மணம் நினைப்பில் மனைவிக்கு ஒதுக்கிய நேரங்களில் துண்டு விழுந்து விட்டது என்பதாகும் .ஹீ பாய் நிக்கா முடியுங்க புரியும்.ஹா ஹா!

தனிமரம் said...

நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

நேசன்!வெற்றிகரமாக உங்கள் பணி நிறைவடைந்தது சந்தோசம்,வாழ்த்துக்கள்!இந்தக் கிழவனையும்?நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.எழுத எழுதத் தான் ஊற்றாக வரும்.இடையில் நிறுத்திவிட்டால்,அவ்வளவு தான்!சரி,பிரெஞ்சுக் காதலி வருவாள்,வருவாள் என்று............................ அவ்வளவு?????ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா! 
யார் சொன்னது ஐயா கிழவன் என்று இந்த வயதிலும் சூப்பராக அரசியிடம் சபையில் பேசுகின்றார்.ஹீ ஹீ

துரைடேனியல் said...

என்னையும் குறிப்பிட்டிருக்கிற உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி சகோ. நான் கடந்த புதன் அன்று ஈரோட்டுக்குச் சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினேன். கடந்த நான்கு நாட்களாக வலைப்பக்கம் வரமுடிய வில்லை. அதனால்தான் தினந்தோறும் உங்கள் நட்சத்திர வாரத்தில் உங்களை சந்திக்க முடியாமல் போயிற்று. மன்னிக்கவும். ஆனாலும் என் பெயரைக் குறிப்பிட்டது உங்களது பெருந்தன்மையையும் பாசத்தையும் குறிக்கிறது. நன்றி சகோ.

தனிமரம் said...

சரி,பிரெஞ்சுக் காதலி வருவாள்,வருவாள் என்று............................ அவ்வளவு?????ஹ!ஹ!ஹா!!!!!!!!!!! 
//ஏன் தமிழ் திரையில் மட்டும் தான் இரண்டு வருடமாக ஒரு படத்திற்கு காத்திருங்கோ என்று விளம்பரம் செய்யனுமா ??ஹீ பிரெஞ்க்காதலி  கடந்துபோன கனவுத் தொடர் ஹீ ஹீ இரண்டு தொடர் ஒன்றாக பயனிக்க முடியாது ஐயாவுக்குத் தெரியாத விடயமா!
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிச்சம் சந்தோஸம் உங்கள் ஊக்கிவிப்பு வார்த்தைகள் கேட்டு.

தனிமரம் said...

அரச கருமத்தில் இருக்கும் உங்களுக்கு பல இடங்கள் போகவேண்டி வரும் அண்ணா .ஆனாலும் ஒரு பின்னூட்டம் போட மனசு வரனும் அந்த மனசு உங்களிடம் அதிகமே இருக்கு.நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் துரைடேனியல் அண்ணா.

Anonymous said...

hemaaaaaaa akkaa vai aaravathu paartheengalaaaaaaaaaaaaaaaaaaaaa.......................

Yoga.S. said...

நீங்கள் விளம்பரம் செய்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.அவ்வளவு இனிப்பாகவா இருந்தது என்ற பொருளில் தான்,அந்தச் சிரிப்பும்,நையாண்டியும்,ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S. said...

கலை said...

hemaaaaaaa akkaa vai aaravathu paartheengalaaaaaaaaaaaaaaaaaaaaa.......................///ஏம்மா?வூட்டுலதான் இருக்காங்க!

தனிமரம் said...

hemaaaaaaa akkaa vai aaravathu paartheengalaaaaaaaaaaaaaaaaaaaaa....................... //இன்று பிசியா இருப்பா ஆவ்வ்வ்வ்.

ஹேமா said...

வந்திட்டேஏஏஏஏஏஏஏஏன் !

ஹேமா said...

இரண்டு நாளா சரியா நித்திரையில்லை நேசன்.காலேல 6 மணிக்கு வேலை.5 மணிக்குத்தான் வீட்டை வந்தன் !

தனிமரம் said...

நீங்கள் விளம்பரம் செய்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.அவ்வளவு இனிப்பாகவா இருந்தது என்ற பொருளில் தான்,அந்தச் சிரிப்பும்,நையாண்டியும்,ஹி!ஹி!ஹி!!!!!

8 April 2012 11:09 //இனிப்பா இருந்தால் ஏன் ..மரம்ம்ம்ம் கொஞ்சம் பொறுங்கோ ராகுல் போகட்டும் .ஹீ பிரெஞ்சுக்காரி வருவா!

Yoga.S. said...

ராத்திரி சாப்பாடு மிச்சம்,மீதி இருக்கோ?(நாங்களும் "மிஞ்சினா"பிரிட்ஜுக்குள்ள வச்சுச் சாப்பிடுறது தான்,கொட்ட மனம் வராது வன்னிய நினைச்சு!)

தனிமரம் said...

கலை said...

hemaaaaaaa akkaa vai aaravathu paartheengalaaaaaaaaaaaaaaaaaaaaa.......................///ஏம்மா?வூட்டுலதான் இருக்காங்க!

8 April 2012 11:11 
//ஹீ பல வேலை இருக்கும் வீட்டில் இருந்தாலும்.

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா!

Yoga.S. said...

அந்தக் கேள்வி (சாப்பாடு)ஹேமாவுக்கு!எல்லாருக்கும் இரவு வணக்கம்!சொல்ல மறந்திட்டன்.

தனிமரம் said...

இரண்டு நாளா சரியா நித்திரையில்லை நேசன்.காலேல 6 மணிக்கு வேலை.5 மணிக்குத்தான் வீட்டை வந்தன் ! 
/-முதலில் நல்ல ஓய்வு கொடுங்கள் கண்களுகும் மனதிற்கும்.

Yoga.S. said...

தனிமரம் said...

நீங்கள் விளம்பரம் செய்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.அவ்வளவு இனிப்பாகவா இருந்தது என்ற பொருளில் தான்,அந்தச் சிரிப்பும்,நையாண்டியும்,ஹி!ஹி!ஹி!!!!!

8 April 2012 11:09 //இனிப்பா இருந்தால் ஏன் ..மரம்ம்ம்ம் கொஞ்சம் பொறுங்கோ ராகுல் போகட்டும் .ஹீ பிரெஞ்சுக்காரி வருவா!///வெயிட்டிங்!

தனிமரம் said...

நாங்களும் "மிஞ்சினா"பிரிட்ஜுக்குள்ள வச்சுச் சாப்பிடுறது தான்,கொட்ட மனம் வராது வன்னிய நினைச்சு!) 
//ம்ம்ம்

Anonymous said...

ஜாலி ஜாலி aaha ஹேமா அக்கா வந்துட்டங்கள் ...சந்தில் அக்காவை தேடிக் கொண்டு இருந்திணன் ...

இண்டு என்னோவூ மாறி இருக்கு ...

Anonymous said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ

தனிமரம் said...

8 April 2012 11:09 //இனிப்பா இருந்தால் ஏன் ..மரம்ம்ம்ம் கொஞ்சம் பொறுங்கோ ராகுல் போகட்டும் .ஹீ பிரெஞ்சுக்காரி வருவா!///வெயிட்டிங்!

8 April 2012 11:23 //5 வருசம் ம்ம்ம் அந்த ஆண் பாத்திரம் காத்து இருந்தது! நீங்களும் இருங்கோஓஓஓஒ

தனிமரம் said...

இண்டு என்னோவூ மாறி இருக்கு ...//ம்ம்ம்

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ

8 April 2012 11:27 // ம்ம்ம் தீவில் பிறந்து ...ஓடி ஓடி பிரெஞ்சில் வாழ்க்கைப்பட்டு.! வாழும் ஒருத்தி!

Yoga.S. said...

கலை said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ?

தனிமரம் said...

அந்தக் கேள்வி (சாப்பாடு)ஹேமாவுக்கு!எல்லாருக்கும் இரவு வணக்கம்!சொல்ல மறந்திட்டன்.

8 April 2012 11:21 //எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம்.

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ?

8 April 2012 11:31 //ஹீ என் சொந்த ஊர் அவா என் மச்சாள் முறை.

Yoga.S. said...

இரவு உணவின் பின் தொடரும்!

ஹேமா said...

நான் நல்ல சுகம் நேசன்.பதிவு வாசிச்சன் நேசன்.கண் கலங்குது.இதுதான் உறவு,பிணைப்பு இனம் எண்டு சொல்றதோ.மனம் நிறைந்த வாழ்த்துகள்.எப்பவும் இதே ஒற்றுமையும் சந்தோஷமும் எங்களுக்குள்ள இருக்கட்டும் !

அப்பா....சும்மா சொல்லேல்ல.ஒருநாளும் ஒருசொட்டுச் சாப்பாடும் வீணா வெளில எறியமாட்டன்.3 நாள் ஆனாலும் ஃப்ரிஜ்ல வச்சுச் சாப்பிட்டுத்தான் முடிப்பன்.நீங்கள் சொன்னமாதிரி ஊர் வறுமை,கஸ்டம்தான் ஞாபகம் வரும்.

தனிமரம் said...

இரவு உணவின் பின் தொடரும்!//bonappete/

Anonymous said...

ree reeஅண்ணா
அக்கா ,மாமா எல்லாரும் சந்தியில் தான் இருக்கிறோம் ..நீங்களும் வாங்கோ அண்ணா

தனிமரம் said...

நான் நல்ல சுகம் நேசன்.பதிவு வாசிச்சன் நேசன்.கண் கலங்குது.இதுதான் உறவு,பிணைப்பு இனம் எண்டு சொல்றதோ.மனம் நிறைந்த வாழ்த்துகள்.எப்பவும் இதே ஒற்றுமையும் சந்தோஷமும் எங்களுக்குள்ள இருக்கட்டும் !
// நிச்சயம் ஹேமா.

அப்பா....சும்மா சொல்லேல்ல.ஒருநாளும் ஒருசொட்டுச் சாப்பாடும் வீணா வெளில எறியமாட்டன்.3 நாள் ஆனாலும் ஃப்ரிஜ்ல வச்சுச் சாப்பிட்டுத்தான் முடிப்பன்.நீங்கள் சொன்னமாதிரி ஊர் வறுமை,கஸ்டம்தான் ஞாபகம் வரும்.// உண்மைதான்.

தனிமரம் said...

அக்கா ,மாமா எல்லாரும் சந்தியில் தான் இருக்கிறோம் ..நீங்களும் வாங்கோ அண்ணா

8 April 2012 11:38 //அதிகம் அங்கே கிறுக்கி விட்டேன் நேற்று.

Anonymous said...

எல்லாரும் இங்க தான் இருக்கிகளா ..நான் தன லேட் update ஆ

Yoga.S. said...

தனிமரம் said...

இரவு உணவின் பின் தொடரும்!//bonappete/
////Bon Appettit!!!!

தனிமரம் said...

எல்லாரும் இங்க தான் இருக்கிகளா ..நான் தன லேட் update ஆ

8 April 2012 11:42 //ஹீ யோகா ஐயா போய் விட்டார்!

தனிமரம் said...

இரவு உணவின் பின் தொடரும்!//bonappete/
////Bon Appettit!!!!// அவசரம் தெரியும் தானே!!!!

அம்பலத்தார் said...

இன்றைய பின்னூட்டத்தில் உண்மையான நட்புக்களின் சங்கமத்தை பார்க்கமுடிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த நட்பு என்றும் நிலைத்திருக்கட்டும்.

தனிமரம் said...

இன்றைய பின்னூட்டத்தில் உண்மையான நட்புக்களின் சங்கமத்தை பார்க்கமுடிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த நட்பு என்றும் நிலைத்திருக்கட்டும்//நன்றி அம்பலத்தார்!

Yoga.S. said...

BonNuit,Nesan&toute le monde....

தனிமரம் said...

இனிய உறக்கம் எல்லோருக்கும் வரட்டும் யோகா ஐயா!

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் சிவநேசன்

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
நலமா?

கடந்த வாரம் தமிழ்மண மகுடம் சூட்டிக்கொண்டு
தேர்கொண்ட மன்னவன் போல்
புவிவலம் வந்தீர்கள்...
இந்தக் காலத்தில் தங்களின் படைப்புகள்
பிரமிக்க வைத்தன..

குறிப்பாக அம்பலத்தார் ஐயா அவர்கள்
" நான் எழுதியது போன்று இருக்கிறது"
என்று உங்களுக்கு மலர் கிரீடம் சூட்டினார்..
தக்க வைத்துக்க் கொள்ளுங்கள்..

வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் கிடைப்பது அரிது..

அன்பு உறவுகளுக்கிடையில் என்னையும் நினைவு படுத்தி
நெஞ்சில் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல..

தமிழ் மன மகுடம் போல்
பல்வேறு மகுடம் சூட்டிடுக..
படைத்திடுக இனிய சுவைகளை..
வாழிய நீடூழி..

அன்பன்
மகேந்திரன்

Seeni said...

தனி மரம்!

நீங்கள் தனி மரம் அல்ல!
காட்டில் ஒரு மரம்!

வாழ்த்துக்கள்!

நீங்கள் குறிப்பிட்ட!
சீனி நானா!?
உங்கள் மனதில்-
இடம் பிடித்துவிட்டேனா!?

Yoga.S. said...

காலை வணக்கம்!!!!

ஹேமா said...

நேசன் யோகா அப்பாவுக்காக இங்கு ஒரு அறிவித்தல்.....

அப்பா...என் பக்கத்தில் 200 க்குப் பிறகு காணவில்லை என்று தேடியிருக்கிறீர்கள்.முதலில் பதிவின் தலையங்கத்தைக் கிளிக் பண்ண்ட்டுக் கீழே பாருங்கோ Newer எண்டு இருக்கு.கிளிக் பண்ணுங்கோ !

Anonymous said...

அடிக்கடி நெகிழ வைக்கிறீர் நேசரே...

வாழ்த்துக்கள் கலக்கியதற்கு...கலங்க வைத்ததற்கும்...

தொடருங்கள்...

அடுத்த பால் கோப்பிக்கு இப்போதே தயார்...

Unknown said...

வணக்கம் நேசா அண்ணா எப்படி நலம்? ஈஸ்டர் வாழ்த்துக்கள்

தனிமரம் said...

நன்றி கோவிக்கண்ணன்  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா.
நன்றி நீண்ட உங்களின் பாராட்டு அன்புக்கு எப்போதுமே நான் சின்னவன் தான். நன்றி மீண்டும் மீண்டும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நீங்கள் தான் எப்போதும் நல்ல கவிதை பிடிக்கும் உங்கள் தளத்தில் எனக்கு.

தனிமரம் said...

நன்றி ரெவெரி அண்ணா.
வருகைக்கும் கருத்துரைக்கும்.நீங்கள் தரும் ஆதரவு என்னை அதிகம் நெகிழவைக்கின்றது பதிவை தொடர்ந்து எழத அப்படி இருக்கும் போது என் அன்பை  பகிர்கின்றேன்.

தனிமரம் said...

வணக்கம் எஸ்தர்-சபி
நலமே தாங்களும் அவ்வண்ணம் இருக்க கர்த்தரை வேண்டுகின்றேன்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

செங்கோவி said...

Thanks for still remembering me Nesar!!

-

தனிமரம் said...

Thanks for still remembering me Nesar!!//வாங்க செங்கோவி ஐயா நலம்தானே! எப்போதும் உங்கள் நினைப்பு எனக்கு இருக்கும்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்