23 March 2013

அந்தநாள் ஞாபகம்...8


வணக்கம் உறவுகளே நலமா??
மீண்டும் அந்த நாள் ஞாபகம் ஊடாக மீண்டும் ஒரு திரையரங்கில் சந்திக்கின்றேன்:)))

 இன்று எந்த ஊர் என்று உங்களுக்கு அறிய ஆவலா??


தெற்கில் இருந்து  இந்த ஊர்கடந்து தான் எல்லோரும் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் வாகனத்தில் என்றால்.!

இந்த ஊரிலும் ஒருகாலத்தில் மூவின மக்கள் முறையாக அமைதியாக வாழ்ந்தார்கள். பின் இனவாத இரைக்கு பலியான ஊர்களில் இந்த ஊரும் தமிழர் மனதில் வடுக்களைத் பதிவு செய்து இருக்கின்றது கடந்த காலங்களில் அந்த ஊர்தான் மதவாச்சி .!!!



இனவாதம் இந்த தொகுதியை திருமலையுடன் இணைக்கின்றேன் என்றும் ,அனுராத புரத்துடன் இனைக்கின்றேன் என்றும் .வவுனியாவுடன் இனைக்கின்றேன் என்றும் கூறுபோட்டதில் குலைந்து போனது பால்ச்சோறு என்பது என் கணிப்பு.!

முதல்தர வருமானம் இங்கு விவசாயம்!!!



மன்னார் செல்லவும், முல்லைத்தீவு செல்லவும் ,முன்னர் இந்தஊர் ஊடாக பாதை இருந்தது .


அதை இராணுவ இருப்புக்கு என்று எல்லைப்பகுதி ஆக்கியதில் இனவாதம் இந்த ஊர் மைந்தர்களின் அடுத்த தலைமுறையை இராணுவத்தில் இணைத்தது வேலைகொடுக்கின்றோம் என்ற போர்வையில் .வெற்றுடல் ஆக்கி வந்த சிங்களவர்கள் கதை எல்லாம் இன்னும் இலக்கியமும் , இனவாத சிங்கள் ஊடகமும் வரலாறாக பதிவு செய்யவில்லை என்பது இருமொழி வாசகனாக இருந்த போது  முன்னர் நான் அறிந்தது !!


பின் அந்த இலக்கிய ஆசையும் ஊடக ஆசையும் அறவே வேண்டாம் ! என் விற்பனைத்தொழிலில்சாமானியனாக முன்னேற முடியும் என்பதையும் அனுபவமாக கற்றவன்:))))


என்றாலும் இந்த மதவாச்சி மண் மீது எனக்கும் இன்னும் உருகும் நேசம் உண்டு:)))

இங்கு தான் நான் பல சகோதரமொழி நங்கைகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த விடயங்களை தனிமரதில் இரு தொடரிலும் பதிவு செய்து இருக்கின்றேன் .

காரணம் ஒரு சிலர் சரி!இயற்கையான எழில்கொஞ்சும் ஊர்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஏற்ற ஊர் எது என்று பார்த்தவர்கள் சொன்னால் தானே மற்றவர்கள் போகமுடியும் .

இதைச் சிலர் பவுசுகாட்டுகின்றான் என்று மனதில் குமுறினால் போகின்றது திரட்டியில் குத்தும் ஓட்டுத்தான்:))

இந்தஊரில் வார இறுதியில் என் நட்புக்களுடன் சேர்ந்திருந்த காலம் என் தொழிலில் பொற்காலம்.என்றாலும் !!!இனவாதம் என்னையும் ஓடவிட்டது புலம் பெயர் என்று எனினும் என் உயிர் முக்கியம் !!


 இந்தப்படம் போல அந்த நாயகி போல என் நண்பி அழுத கண்ணீர் இன்னும் பேச வைக்கும் என்றாவது ஒரு நாள் நடுநிலையில் இனவாதம் ,மதவாதம்,மொழி வாதம் ,யுத்தம் கடந்து !!


நீ ஒரு எழுத்தாளன் என்றாள் உண்மை பேசி இந்த ஊர் இயல்பு பற்றி !!அப்போது தனிமரம் என்று சொல்லாதே நான் இருபேன் உன் இன்னொரு நிஜத்தில் என்றவள் ஞாப்கம் இன்னும் வாழ்கின்றது !!!


தனிமரம் சொல்வேன் நடுநிலையோடு என்றாவது ஒருநாள்!அந்த நங்கை ஆவி போனாலும் அவள் போட்ட கோலம் இந்தப்பாடல் மூலம் சகோதர வானொலி சிரசவில் என் முதல் கவிதை மகுடம் சூட்டி டொப்-10 பாடல் தெரிவில் முதலில் வந்ததும் அந்தப்பாடல் தந்த அறிவிப்பாளர் ஆசானுக்கும் பதிவு எழுத்திய ஈழத்து நேயர் தனிமரம் என்பதும் என் சாதனை தான்!http://www.thanimaram.org/2012/07/blog-post_27.html


ம்ம் படிக்காதவன் கூட பண்பு தெரிந்தவன்! எழுதுவது மூலம் என் வீடு நிறைய வில்லை திரட்டியிலும் தான் )))))))))))))))))))))))))))நேரம் இல்லை எழுத்துப்பிழை திருத்த இனவாத ஆட்சி போல நான் ஒன்றும் பண்டிதர் அல்ல!ம்ம் சாமானிய வழிப்போக்கன்!ம்ம் இந்த ஊரும் கடந்து வந்தவன் குழுமம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை உள்குத்து போட்டாள்)))))))))))))))))))))))))))))))))!பாட்டை ரசியுங்கள்

இந்தப்படம் பார்த்த உறவுகள் இன்று இந்தப்பூமியில் இல்லைஉயிரோடு  தனிமரம் வாழ்கின்றேன் காற்றில் உன் குரல் வானொலியில் வரும் அது கேட்பேன் எங்கோ நான் இருந்து அந்த கவிதை வரி ஞாபகம் இடையில் சிலதை மறந்து விட்டேன் இனவாத இம்சையில் இசை மறந்து!ம்ம்

6 comments :

மதுரை சரவணன் said...

மனம் கனக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவையும் படித்து விட்டு பாட்டை பார்க்க தோணவில்லை...

படிக்காதவன் கூட பண்பு தெரிந்தவன் - அது தாங்க முக்கியமாக வேண்டும்... மனம் சஞ்சலப்படாமல் தொடருங்கள்...

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!நலமா?அவை அழகிய நாட்கள்.இன வாதம் வேரறுத்தது,அனைத்தையுமே!

தனிமரம் said...

மனம் கனக்கிறது//வாங்க மதுரை சரவணன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!நன்றி நீண்டகாலத்தின் பின் வலையில் சந்திப்பதில்!

தனிமரம் said...

இவ்வளவையும் படித்து விட்டு பாட்டை பார்க்க தோணவில்லை...

படிக்காதவன் கூட பண்பு தெரிந்தவன் - அது தாங்க முக்கியமாக வேண்டும்... மனம் சஞ்சலப்படாமல் தொடருங்கள்...//ம்ம் நன்றி தனபாலன் சார் ஆலோசனைக்கும் அன்பான வழிகாட்டலுக்கும்.

தனிமரம் said...

மாலை வணக்கம்,நேசன்!நலமா?அவை அழகிய நாட்கள்.இன வாதம் வேரறுத்தது,அனைத்தையுமே!//வணக்கம் யோகா ஐயா நான் நலம் உண்மைதான்! என்ன செய்வது கடந்து செல்வோம்!!!