19 March 2013

கிறுக்கன் துளிகள்.............


போர்க்கள பூமியிலும் போதையூட்டியது
பொட்டுப்போல பூத்த என்  பொங்கிவந்த
போதைக்காதல்! 
போர் விமானம் போட்ட குண்டில் 
பட்டுப்போனதடி உயிர்.
 பனைமரம் போல
பட்டுவிழுந்தாயே பாவி என் மடியில்
போனதடி  என் ஆசைக்காதல்!



////////////////////////

  முன்னம் பார்த்தவள் முத்தம் தந்தவள்
  பின்னம் என்னை  பித்தன்  என்றவள்
  கன்னம் வைத்து காத்து  இருந்தவள்
  அன்னம் போல ஆவி பருகி
    இன்னும் ஒரு தேசம் போனாளே???????

                                                     //////////////


உருகிப்போவேனா  ?உன்னிடம் வருவேனா?
உன் தேசத்தில்  உனக்கும்  தருவேனா?
உயிர் உருகி ஒரு நிழல்!!!!

 

   

////
முகம் தொலைந்தான் இவன்
மூர்க்கம் கொண்டவன்
முத்தி வழிதேடினான்
முன்னம் தெரிந்தவள்
முன்னால் வந்தாள் முள்ளாக!!
முடி ஏந்திப்போறியா??
முற்றும் துறந்து போறியா??
மூச்சை அடிக்கிவிட்டான்
மூன்றாவது படிப்பயணத்தில்!

( இருமுடியைச் சொல்லுவது முடி ஏந்தி என்று சபரி மலை பக்தர்கள் அறிவார்கள்.)

15 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

சில நினைவுகள் மறக்கவும் முடிவதில்லை...

முத்தரசு said...

நினைவுகள்

மொபல் வீவ் வைத்தால் என்ன போல உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!

Anonymous said...

vanakkam annaa nalamaa ...

Anonymous said...

kavithai nalla irukku ....

”தளிர் சுரேஷ்” said...

அருமையான வரிகள்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

பூ விழி said...

நினைவுகளின் தாகம் அருமை வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் இருப்பின் என் தளத்திற்கு வருகை தாங்க

தனிமரம் said...

சில நினைவுகள் மறக்கவும் முடிவதில்லை...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நிஜம் தான்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நினைவுகள்

மொபல் வீவ் வைத்தால் என்ன போல உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்

19 March 2013 21:37 //நன்றி முத்தரசு சீர்செய்கின்றேன்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!/வணக்கம் யோகா ஐயா!நலம் அதுவே நான் தங்களிடம் நாடுவதும்அதுவே!ஓஓஓஒ அப்படியா !ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

anakkam annaa nalamaa ...//வணக்கம் கலை நலம் .

தனிமரம் said...

kavithai nalla irukku ....//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையான வரிகள்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

20 March 2013 05:49 //நன்றி சுரேஸ் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி.../நன்றி தனபாலன் சார் தகவல் தந்து வாழ்த்துக்கள்.

22 March 2013 13:52

தனிமரம் said...

நினைவுகளின் தாகம் அருமை வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் இருப்பின் என் தளத்திற்கு வருகை தாங்க

21 March 2013 02:15 //முதல் வருகைக்கும் இணைவுக்கும் கருத்துக்கும் நன்றி நிச்சயம் வருகின்றேன் தோழி.