14 April 2013

வசந்தமும் வாடலும்!

வாடிய மரங்கள் எல்லாம் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றது 
வந்துவிட்ட காதலியே காத்திருந்தோம் !
வாடிய பயிரைப்போல குளிரில் !
வசந்தகாலமே உன் வருகை 
வாழ்வின் வசந்தம்! வசந்தகாலத்தில் மரங்களில் பூக்கின்றது 
வடிவான பூக்கள்! 


வரும் வழியில் உன் கீதம் காதில் ஒலிக்கும் !
வந்தது செவியில் ஒரு செய்தி ஒலிக்கும் 
வாய்ஸ் ஓய்ந்து போனதாம் .
வாடிப்போகுமோ? ஊமைவிழிகள் 
வாடிய போதும் ஒலிக்கும் உன் நாதம் !


வாடா ஈழத்தில் ஒவ்வொரு கணமும் 
வாடாத தோல்வி நினை என நினைத்தால் 
வாடிய சோகத்துடன் 
வலையில் இவன் வழியனுப்பும் இந்த பாடல்! 

8 comments :

Unknown said...

இரவு வணக்கம்,நேசன்!காலத்தால் அழியாத பாடல்களை தமிழ் உலகுக்குத் தந்தவர் பி.பீ.ஸ்ரீநிவாஸ் அவர்கள்.ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்!

இளமதி said...

கவலைதரும் செய்தி. காலத்தால் அழியாத கானங்கள் தந்த காந்தக்குரலோன்.

அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்...

பால கணேஷ் said...

என்றென்றைக்கும் இனிக்கிற பாடல்களைத் தந்த தங்கக் குரல் அது! அந்த மகத்தான பாடகனின் ஆன்ம சாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன் நேசன்!

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

கவியாழி said...

அய்யாவின் பாடல்கள் எப்போதுமே வசந்தமாக வீசட்டும்.

பூ விழி said...

அவரின் குரல் மூலம் நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க போகிறார் அவர் பாடிய பாடல்கள் அத்தனையும் தேன்சுவை

ஆத்மா said...

காட்சியும் காணமும் தந்தது சோகமே...

நலாமா நேசன் அண்ணா என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

தனிமரம் said...

நன்றிகள் உறவுகளே வருகைக்கும் கருத்துரைக்ளுக்கும்.