14 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27

"நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை என்ற பாடல்" போல அன்று சந்திராவின் மரணவீட்டில்  எரிமலைக்குழம்பாக அரசியல் மீது கொதித்த என்  நண்பன்  குமாரும்..

 பொருளாதார தேடலில் தணிந்த தணல் போல அரபுலகம் நோக்கிய பயணத்தினால் இருவருக்குமான நட்பும் நாடக் மேடையில் பார்வையாளருக்கும் நடிப்பவர்க்ளுக்கும் இடையில் விழும் திரைச்சீலை போல மூடப்பட்டபின் !


 ஐயாவின் அவசரகால நெருக்கடி நிலை போல நானும் புலம்பெயர்ந்த பின் நேரடித் தொடர்பும் இணையத்தொடர்பு போல் பதுளை என்றும் பாரிஸ் என்றும் வியாப்பித்து தொடர்வில்லை!

 இந்த உலகம் சிலநேரத்தில் அடுத்தவர்கள் நிலையை வாய்மூடி வேடிக்கை பார்க்க வைத்து தன்நலத்தை முன்னிலை பேண வைக்கும் சூழலை பாதுகாப்பு என்ற கவசத்தை போடவைக்கின்றது 



. கோகிலாவின் வாழ்க்கை நிலை என்ன என்று? 


இதுவரை நானும் அறிய நினைக்காத ஒரு கோழைநிலையை தந்து ! 

என்னையும் பதுளை விட்டுப் போனதும் நாடுவிட்டுப்போனதும் நன்றி மறந்த குற்றவாளி என என் நெஞ்சே என்னை நின்றுக்கொல்லும் நிலையை யாரிடம் சொல்லி குறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் !

 என்னைப்போல் பலரும் புலம்பெயர்ந்த நிலையில் யாதார்த்த வாழ்வில் தொலைந்து இருப்பார்கள் என்று தேற்று வதைத்தவிர வேற என்ன செய்வது.


 இந்த பதுளையில் தங்கி இருக்கும் ஒரு வாரத்திற்குள் முடிந்தால் கோகிலா பற்றி ஏதாவது அறிய வேண்டும்.

. அதுக்கு முன் ஜீவனியின் முடிவுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கப்போகும் தேசிய அரசியல் தேர்தல் போல .

 1998 செப்டம்பர் முதல் 1999 மாசிவரை நேரில் பார்த்த ஜீவனி ! 

இன்று 2012 தை மாதக்கடைசியில் எப்படி இருப்பாள் ?

 மீண்டும் முதலில் பார்த்த என்னை 6 இருந்து 60 வரை போல ஞாபகம் வைத்து இருப்பாளா ?இல்லை சின்னப்புள்ள பட ரேவதி போல நினைவிழ்ந்து போயிருப்பாளோ? 

உடல்வாகில் அந்தக்கால நதியா போல இன்றும் இருப்பாளோ?,


 சிரிப்பில் இன்றைய சினேஹா போலவோ?,

 மனசில் கவிதை உணர்ச்சி துங்கித்தைச் சாரல் போல வீசும் நிலையில் !


மடியில் சாய்ந்து மலையோரம் 
மங்கை நீ மாப்பிள்ளை நீ என்று
 மயங்கிய காலம் எல்லாம் !
மறக்காத நெஞ்சம் போல அருகில்
 இருக்கும் மரநிழலில் 
மரங்கொத்தி போல
 செப்பனிட்டுவிட்டேன் 
ஞாபகத்தை! 

பதுளை அன்புடன் வேற்கின்றது என்ற நகரசபையின் பெயர்ப்பலகை ஓடும் பஸ்சில் விழியில் விழ்ந்தது ! 
இன்று முதலில் எங்கு தங்குவது வாடிவீட்டிலா? இல்லை ஈசன் வீட்டிலா?,

                                       



.இன்னும் தவிக்கின்றேன்........
//

துங்கிந்தை- ......பதுளையில் இருக்கும் பிரபல்யமான நீர்வீழ்ச்சி.

4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

/// குறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் ! ///

தவிப்பு புரிகிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

தவிப்பு புரிகிறது நண்பரே

தனிமரம் said...

குறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் ! ///

தவிப்பு புரிகிறது...// வாங்க தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தவிப்பு புரிகிறது நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.