27 May 2014

தாலியோடி தனிமரமாக தவிக்கின்றேன்.--32

ஆட்சியில் இருக்கும் போது அரசியல்வாதிகளின் வீடுகள் எப்போதும் ஊர்க்கோயில் திருவிழாகள் போல களைகட்டியிருக்கும்.



 ஆட்சிமாற்றத்தில் மக்கள் நிராகரித்து கட்டுப்பணம்கூட திருப்பதி உண்டியலில் போனது போல ஆனநிலையில்! மீண்டும் முன்னால் அரசியல்வாதிகள் வீட்டுப்பக்கம் சென்றால் சாதாரண கோயில் வீதி வைரபவர் நிலை போல இருக்கும் நிலையை நம் ஊடகம் ஏனோ இன்றைய் நிலையும், அன்றைய நிலையும் என்று கார்ட்டூன் போடாது சிரித்திரன் போல!



 கலகலப்பாக வேட்டிசால்வையில் எத்தனை முகங்களின் விடுப்புக் கேள்விகளின் அதிகார கோட்டைத்தாண்டி பார்க்கவேண்டிய் ஜீவனியின் அப்பா  முத்தையா வீடு இப்படி அமைதியாக இருக்கும் நிலையை என்றோ வாலி பொய்க்கால் குதிரையில் கவியாக்கியதை நினைவெல்லாம் நித்தியா போல மறக்க முடியாது! 



நீண்டகாலத்தின் பின் ஒரு முன்னால் கட்சித்தலைவரின் வீட்டுக்கு போகும் நிலையை இன்று ஆண்டவன் தந்து இருக்கும் நிலையை நினைத்து பச்சாதாபம் கொள்வதா ?

இல்லை பதவியில் இருக்கும் போது பார்த்த அதிகாரதோரணைக்கு காலத்தின் தீர்ப்பு என்று எண்ணுவதா ? 



வா மச்சான் உள்ளே என்று ஈசன் அழைக்கவும் மெல்லச்சிரியுங்கள் படம் போல மனசு உள்ளே ஜீவனியைத் தேடியது கண்கள்.சுவரில்லா சித்திரம் போல!

 யாரது என்ற குரல் இன்னும் இருக்கின்றேன் என்ற தன்நம்பிக்கையை காட்டுகின்றது ஜீவனியின் அப்பா முத்தையா குரல்.

 முன்பு ஒரு தடவை தூரத்தில் பார்த்த துருவநட்டச்சத்திரம் போல!


 வணக்கம் ஐயா நான் மடுல்சீமை தோட்டத் தலைவர் கோவிந்தன்சாமி மகன் என்று தூரப்பார்வை தெரியாத ஜீவனி அப்பா முத்தையா  கேள்விக்கு பதில் கொடுத்தவண்ணம் ஈசன் நுழைய.


 குருவைத் தொடர்ந்து செல்லும் சிஷ்யன் போல பரதனும் சென்றான் .


அடுக்குமாடிவீடு போல இல்லை ஜீனி வீடு தனித்தனி வீடுகள் பல இன்னும் இருக்கும் ஊர்களில் பதுளையும் ஒன்று!



. ஜீவனியின் சொத்து இந்த பங்களா தானோ என்பது போல 40 பேர்ச்சஸ் இடத்தில் அழகான வீடு பூவெல்லாம் உன் வாசம் ஜோதிக்கா வீடு போல இதில் எந்த அறையில் ஜீவனி வாசம்! 

                                           

பிரெஞ்சில் ஜீவன் தொடர் மாடிவீட்டில் நிசாவை பெண்கேட்ட நிலையும் !
நிசா அடுத்த அறையில் இருந்து அழுத குரலும் ஏனோ ஞாபகத்தில் வந்து செல்லுது! 

இங்கு எது நடந்தாலும் விடுப்புக்கேட்கும் பாரிஸ் வெட்டிப்பயல் தனிமரத்திடம் சொல்லக்கூடாது என்று ஈசனிடமும் சொல்லிவைக்க வேண்டும்! வேட்டியை உருவி விடுவான் தொடர் என்ற போர்வையில், பின் முகநூலை மூடிவிட்டு ஓடவேண்டிதுதான் திவாலான நிதிக்கம்பனி போல 


.வா மகனே கோவிந்தன் எப்படி இருக்கின்றான்?,

 இந்தப்பக்கம் வருவதே இல்லை! இந்த தம்பியை எங்கோயோ பார்த்து இருக்கின்றேனே??

 உடனடி ஞாபகத்து வருகுதில்லை!

 இவன் தான் மடுல்சீமை கணக்குப்பிள்ளை ..சேனாதிராஜாவின் .மகன் !

ஓ ஜீவனிக்கு காதல் கடிதம் கொடுத்தவன்!

 ம்ம்ம் இப்ப ஞாபகம் வருகின்றது.

 என்ன தம்பி இவ்வளவு தூரம் என் மகள் இப்படி நிற்கும் காட்சியை காண வந்தாயோ??



அன்று ஒருநாள் சேனாதிராஜாவை தனிமரம்மாகிவிடுவாய் என்று மிரட்டினேன் இன்று  என் வீட்டில் இப்படி ஒரு காட்சி! 

விதி என்பதா?, சாபம் என்பதா ?

 ஐயா மனசைத்தளரவிடக்கூடாது உங்களிடமும். உங்க சம்சாரத்திடமும் நேரில் பேசத்தான் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கின்றேன் !

நீங்க கோபப்படாமல் செவி மடுப்பீர்களா பதவி நீக்கப்பட்ட அமைச்சர் போல ஏக்கப்பார்வையுடன் பரதனை ஏறிட்டார்  முத்தையா!


இன்னும் தவிக்கின்றேன்.......!

4 comments :

Unknown said...

ஹூம்..........////உவமானங்களுடன்,கேலிச் சித்திரங்களும்......நன்று!

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

தனிமரம் said...

ஹூம்..........////உவமானங்களுடன்,கேலிச் சித்திரங்களும்......நன்று!//வாங்க யோகா ஐயா நலம் தானே ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

தம 1//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் வாக்கு இடலுக்கும்.