19 September 2015

வாழ்த்துகின்றோம் வாழ்க நலமுடன்!

வலையில் வரும்  பல உறவுகளில் ஒத்த சிந்தனையில் ஒரு சிலர் உறவாக வந்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றார்கள். எப்போதும் தனிமரம் என்றாலும் அன்பில் என்னையும் உறவாக்கிய சொந்தங்கள் பலர்  பன்முக வாழ்வில்!கரடு முரடான சாமானிய வாழ்வில் இந்த  வலையில் இருக்கும் காலமும் மிகக்குறுகிய நொடிகள் தான் ..அதையும் நேசிக்கும்  நெஞ்சங்களின் சிறப்பு நாட்களில் நல்வாழ்த்து சொல்லி தனிமரம் ஒரு சிலருக்குத்தான் தனிப்பதிவு எழுதுவது.!
http://www.thanimaram.org/2014/09/blog-post.html
http://www.thanimaram.org/2013/09/blog-post_19.htm
http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html
 இது அவர்களை என்பதிவுக்கு ஆமாசாமி போடும் நோக்கில் ஆள்சேர்ப்பது ! அல்லது திரட்டியில் வாக்கு பெறுவதுக்கு என்று சிலர் நினைத்தால்! எப்போதும் என் பதில் தனிமரம் யாரையும் வா என்றழைப்பவன்   அல்ல  !


  என் வலையில்  சுயகட்டுப்பாட்டில்  தொடர் வரைகின்றேன் வரலாறு முக்கியம் என்பதால் !வலையில் வந்தால் சந்தோஸம், போனால் துரதிஸ்ரம் எனக்கில்லை. தனிமரம் தோப்பாக பாரிசில் இருந்தாலும் என் சிந்தனையை யாரும் கட்டுப்படுத்த முடியாது!

 தனிமரத்தின் போக்கினை புரிவது கடினம் என்றாலும் ,தனிமரத்தின் கவிதை முகாரி  வலி என்றாலும் , வலையில் போட்டியாக  என்னோடு என் ஒரு கவிதையை ஹேமாவின் உப்புமடச்சந்தியில்  முடித்து வைத்த ஒரு வலைத் தங்கைக்கு இன்று சிறப்பு நாள்.http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html

எப்போதும் ஒரு சில வலையுறவுகள் தான் தனிமரத்தை கலாய்ப்பார்கள் வலையில். முகநூலில். ஸ்கைப்பில், கைபேசியில் இல்லத்து தொலைபேசியில் !



நானும் ரசிப்பேன் காரணம் சிரிக்கத்தெரியாதவன்  போலும் என்ற சிலரின் தப்பான நினைப்புக்கு தனிமரம்  காரணம் அல்ல!

  எனக்கு பாடல் ஒரு போதை போல  பிடிக்கும். கவிதை கிறுக்குவேன். தொடர் எழுதுவது என் தனிமரம் வலையை தனித்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் அல்ல !ஈழத்து /இலங்கை நாட்டு தணிக்கை மூடிய வரலாறு வெளியில் வரணும்  சுதந்திர பாரிசில் நாட்டில் ஏதிலியாக இருப்பதால் துணிந்து எழுதுகின்றேன் என் ஓய்வில்!.




அதுக்கும் போட்டியாக காதல்  தொடர்   எழுதிய தங்கை கிராமத்து கருவாச்சி  வலையில் தொடரை முடிக்காமல் இப்போது!
வலையை மூடி ,முகநூலை முடக்கி, தனிமெயிலை தடைபோட்டு ,அலைபேசி அழைப்பை விட்டு தனித்தேடலில்  வனவாசம் போய்விட்டாலும் !

வலையில் நேசிக்கும் உறவுகள் பலரும் பொய்முகம் அல்ல வாத்து!




நேசத்தில் அகதி அண்ணா எப்போதும் தங்கையை மறக்கவில்லை! எப்போதும் நீ சுபீட்சமாக, சந்தோஸமாக வாழ வேண்டும் என்பதையே என் வலைக்கு  கலை  என்று வந்து பின்னூட்டம் இட்ட தொடர்  2012 முதல் இன்று வரை 2015  சொல்லுவது.


வந்து போகும் உறவுகளை கடந்து வந்த ஒருவன் என்பதால் இப்பூமியில் எதுவும் நிரந்தரம் அல்ல! ஆனால் வாழும் காலத்தில் நிஜமான அன்பு முகம் அறியாமல் கூட வலையில் என்றும் வாழ்த்தும்.!, முகநூலில் ,முடியும் போது வாழ்த்தும் ,என் முகநூலில் எப்போதும் வெட்டி  அண்ணாவின் வேட்டிக்கிழி, உள்குத்துப்பதிவு  எல்லாம் முன்னர் பார்த்து ரசித்தவள் நீயல்லவா.[[எப்போதும் தனிமரத்தின் தங்கைகளில் நீ முதன்மையானவள்  என்ற பாசம் என்றும் வேசமில்லை!

 அன்புத் தங்கைக்கு என் குடும்பத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.20/09/...



வாழ்க வளமுடன்.

 எப்போது வனவாசம் முடித்து  நீ பொது வெளிக்கு வந்தாலும் அண்ணாவின் தனிமெயில் ,தனிமரம் வலை, தனிமரம் நேசன் முகநூல், இல்லத்து தொலைபேசி எல்லாம் காத்து இருக்கின்றது.

. என்  மகன் பிரியன்  நல்லாக வாத்து போல இப்போது   நடக்கின்றான் !!

 அதையும் கவிதையாக உன் வலையில் போட்டி போட்டு குறும்புடன் பின்னூட்டம் இட வேண்டிய ஆசையில்  அண்ணா!

 அதைவிட என்னைப் போல பாட்டு கேட்டே சாப்பிட பிடிக்குமாம் தனிமரம் நேசனின்  மகன்  பிரியனுக்கு !

இப்படிக்கு!

அன்பு அண்ணா தனிமரம்
கருக்குமட்டை தேடும்
அண்ணி,
குட்டிஸ் பிரியன்
பாரிஸ் ஊடாக.
20/09/.2015

வரும்  ஆண்டும் பதிவு போடனும்  வரும் புது ஆண்டும்2016 மும்  மலை ஏறனும் எல்லாம் ஐய்யப்பன் துணை!வேண்டி!நீ  பூசிக்கும் பிளையார் துணை இருக்க நாடி!

நான் உயர்கல்வி படிக்காதவன் தாயி[[[ தனிமரம்[[

9 comments :

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ!! தங்கள் அன்பு தங்கைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்களுக்கும்! நன்றி

Yarlpavanan said...

தங்கை கலை
அருமையான பதிவர் - ஆளை
எனக்கு முதல்லே தெரியும்
இப்ப நம்ம ஆள்
தங்கை கலைக்கு
என் பிறந்த நாள் வாழ்த்து!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாழ்த்துக்கள். இனிய பதிவு.

கரந்தை ஜெயக்குமார் said...

அன்புத் தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம+1

balaamagi said...

வாழ்த்துக்கள்,,

”தளிர் சுரேஷ்” said...

தங்கை கலை தமிழ்த்தோட்டத்து நட்புக்களில் ஒருவர்! வலையில் ஓர் புயலாக வீசியவர் இப்போது எழுதுவதில்லை என்பது வருத்தமே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

KILLERGEE Devakottai said...

தொகுப்பு அருமை நண்பரே தங்கைக்கு வாழ்த்துகள்
தமிழ் மணம் 4

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் அன்புத் தங்கைக்கு தாமதமான வாழ்த்துகள் என்றாலும் வாழ்த்துகள் என்று சொன்னாலும் வாழ்த்துகள் தானே நண்பரே இல்லையா....