20 September 2015

நெஞ்சில் பூ மழை!

பதிவுலகம் என்ற மகா கடலில் தனிமரம் ஒரு சிறுமீன்! ஆனால் நிஜமான பாசம் கொண்டு வலை வீசினால் கடல்மீன்கள் பட கமல் போல வலைக்கடலில் வீழ்ந்து போவேன் இங்கே!

 என் முகம் காணாது என் தொடரில் கலந்து என்னோடு வலையில் உரையாடும் பலரில் என்னை நேசிப்போர் பட்டியல் இலங்கை பாராளமன்ற உறுப்பினரைவிட அதிகம் என்று வலையில் மார்பு தட்டுவேன் நானும் ரவுடிதான் என்று வடிவேல் போல  காரணம் ஹிட்சும் ,திரட்டி வாக்கும் என்னை இன்று வரை பாதிக்கவில்லை! பாசம் ஒரு தொடர்!







 அந்த வகையில் அன்புடன் பலரை வலையில் அண்ணாச்சி என்று அழைப்பேன் அது ஏன் என்று நாஞ்சில் மனோ என்னிடம் முகநூலில் கேட்ட போது !



சாட்ல ஒருத்தர் வந்தார்...
"நீங்க அண்ணாச்சி'தானே ?"
"இல்லையே நான் நாஞ்சில்மனோ..."
"அப்போ அண்ணாச்சிங்குறது நீங்க படிச்சி வாங்கிய பட்டமா ?"
ஆளு எஸ்கேப் ஆகிட்டான், என்ன அர்த்தத்தில் அப்பிடி கேட்டான்னு புரியாமல் இப்போ வரை மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்...
சரி நம்மளை அண்ணாச்சின்னு கூப்புடுற ஒரு அன்பு ஜீவன் தனிமரம்' நேசன்தான் இதுக்கு பதில் சொல்லணும் ?//
 தனிமரம் நேசனின் பதில் இப்படி-    மரியாதை நிமித்தம் எப்போதும் நாஞ்சில் அண்ணாச்சி என்று கூப்பிடுவேன் அது என்னவோ தெரியாது சிலரை அப்படி கூப்பிடும் போது நட்புமுறை பிரியாத உறவைத்தருகின்றது!

 அது போல வலையில் ஒரு  இன்னொரு அண்ணாச்சி உறவுக்கு இன்று சிறப்பு நாள் !

 அவரின் தளம் இப்போது! அவரைப்போல காணமல் போனாலும் வலை/முகநூல் என்று அன்புத்தேடலில்   தேடப்படுவோர் நட்பு வட்டங்கள் அதிகம் ! http://ilavenirkaalam.blogspot.fr/
வசந்த மண்டபம் ஒரு கோயில் அதில் தனிமரம் ஒரு வாயில் சிலைதான் அன்பில்!

ஆனாலும் அண்ணாச்சி அமெரிக்காவில் இருப்பதாக முகநூல் புதிய செய்தி சொன்னாலும்! நிஜம் நான் அறியேன்!நேரில் கைபேசியில் பேச ஆசை ஆனாலும் தயக்கம்  இல்லம் போவதே மரியாதை சென்னை நோக்கி[[!
அதன் பின் தனிப்பதிவு போட்டு நாமும் வலையில் கூத்தாடுவோம்[[!



 வலையில் அவரின் பின்னூட்டம் கவிதை போல இருக்கும் ! என் தொடருக்கு வந்த  முன்னம் ஒரு பின்னூட்டம் இப்படி!

வானுயர்ந்த சோலையாம்
தேனுறை கனி மரங்களாம்
கானுறை தேசம்விட்டு
மானுடை நடையுடையாள்
தானுறை நெஞ்சமதை
நானுரை நெஞ்சமாய்
மாற்றிவிட
இதோ படைஎடுத்துவிட்டாள்
வருக வருக
பிஞ்சுக்காதலி
வாழிய நீ என்
பிரெஞ்சுக் காதலி...

ஆரம்பமே அமர்க்களம் நேசன்...
தொடருங்கள் தொடர்கிறேன்...
மகேந்திரன் said...
வணக்கம் தங்கை கலை..
நாங்கள் அங்கே இல்லையென்றாலும்
ராக்கி கட்டாவிட்டாலும்
நம் சகோதர உறவு தொடரும் பா..
வாழிய வளமுடன்..

அண்ணாசிக்கு ஒரு கேக் பார்ஷல் [[[


முகநூலில் பாசமாக இருக்கும் அப்படி ஒரு உறவை எனக்கு தந்தது இந்த தனிமரம் வலை 

! அண்ணாச்சி எப்போதும் முதலில் கேட்பது!

 தம்பி நலமா ?

,என்றதன் பின்தான்  பதிவு பற்றி பின்னூட்டம் இடுவார்!


 அப்படியான ஒருவர் இப்போது கடும்பணி நிமித்தம் வலையில் இல்லை ! பதிவர்விழாவில் கலந்துகொள்ளாது தனிப்பட்ட தேடலில் எங்காவது ஆழ்துலையில் ஆராட்சியில் இருக்கலாம் .

ஆனாலும் அன்பில் அவரை இன்றும் நினைக்கின்றேன்! 

அண்ணாச்சி வலைச்சர ஆசிரியர் பதவி மேடையில் முன்னம்  அலங்கரிதார் ! அதைவிடுத்து அவரின் தெம்மாங்கு கூத்து இன்னொரு கல்விக்கூடம் புதிய தலைமுறைக்கு! http://ilavenirkaalam.blogspot.fr/2013/10/blog-post_28.html



கவிதையில் எப்போதும் சமூக  தேடல் இருக்கும் அப்படியான ஒரு அன்பு அண்ணாச்சிக்கு என் வலையில் அழுத்தி எழுதுகின்றேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!


அண்ணாச்சியும்.தனிமரம் வலைக்கும்மியில் அன்று கொடுத்த ]பின்னூட்டம் இன்னும் நெஞ்சில்! மின்நூலில் என்று பாசம் விடாது துரத்தும்!

வாழ்த்துவோம் வாரீகள்  வலையுறவுகளே!
 அண்ணாச்சி என்றும் நலமுடனும்
  சிறப்புடனும் சுபீட்சமாக வாழ !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மகேந்திரன் அண்ணாச்சி!`
21/09/... இனிய பிறந்த நாளை இனிதே  கொண்டாடுகின்றார்!




 வலையில்  வாழ்த்தும்
 அன்புத்தம்பி!


இப்படிக்கு
தனிமரம் நேசன்
 பாரிஸ்§


 பாட்டு இல்லாத வாழ்தா அண்ணாச்சிக்கு-[[[[

-------------------------------
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் [[[








9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

வசந்த மண்டபம்
நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நண்பர்களை அன்பாக நினைவுகூறும் விதம் அருமையாக உள்ளது. நன்றி.

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ!! நினைவுகூறும் நண்பர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் நன்றி!!!

”தளிர் சுரேஷ்” said...

மகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சிறப்பாய் சிறப்புக்களை பகிர்ந்தமைக்கு நன்றி நேசன்!

KILLERGEE Devakottai said...


நண்பர் மகேந்திரனுக்கு காலையிலேயே சொல்லி விட்டேன் நண்பரே
தமிழ் மணம் 4

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

நினைவு கூர்ந்த விதம் நன்று... வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சென்னை பித்தன் said...

நன்பர்களைச் சிறப்பாகச்,சிறப்பித்து நினைவு கூர்ந்த விதம் அருமை

Thulasidharan V Thillaiakathu said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பர் மகேந்திரனுக்கு..

தனிமரம் நேசன் சத்தியமாக நீங்கள் நேசன் தான். தாங்கள் அன்பின் நேசன்...!!! உங்களின் அன்பு ப்ரமிக்க வைக்கிறது! மிகவும் மகிழ்வாக இருக்கிறது நண்பரே தங்களை நாங்கள் வலையில் நண்பனாக எங்கள் வலையில் சிக்கியதற்கு.....

என்றென்றும் மாறா அன்புடன்....

Unknown said...

அன்பு செலுத்திய பாங்கு அருமை தம்பி..வாழ்த்துக்கள் அவர்களுக்கு...