03 September 2015

முகம் காண ஆசையுடன் --19


இங்கே வாசித்து -http://www.thanimaram.org/2015/09/18.html
 இனித்தொடருக்குள்....


-------------------
என்ன மச்சான் அகிலன் இரவு எல்லாம் தூங்கவில்லைப்போலும்,,?, கண் எல்லாம் எங்க ஹீரோ விஜய்காந்த் சண்டைக்காட்சி போல சிவப்பாக இருக்கு! என்ன பிரச்சனை!

 ஓ அதுவா அசுரன் வசந்தகாலம் விடுமுறைக்கு உல்லாச சுற்றுலா போய் வந்தாச்சு!

இப்ப வருமான வரி கட்டச்சொல்லி ஆயிரக் கணக்கில் ஈரோவில்! கைவசம் காசு சேமிப்பாக வங்கியில்ஒரு ஈரோவும்  இல்லை !அதுதான் எப்படி வருமானவரி கட்டுவது  என்று ஒரே ஜோசனை!

 ஓ இதுதானா மச்சான் உன்  கவலை!  இதுக்கு என்ன தேர்தல்தலில் தோற்ற முன்னால் அமைச்சர் போல ஜோசித்தாயா?, இருக்கவே இருக்கு தேசியப்பட்டியல்  வசதி போல நண்பர்கள்!

 அதுக்காக நம்பி இருந்தோரை வீதியில் விட்டுப்போக  வீட்டுக்கார தலைவருக்கு புற அரசியல் நெருக்கடி இருந்து இருக்கலாம் அவரும் அயல்நாட்டு மாமா அல்லவா!

ஆனால் தொடர்ந்து நல்லதுக்கு குரல் கொடுத்த  மண்டையன் குழு தலைவருக்கு ஆப்பு அடித்த உயர்பீடம் போல நான் இல்லை மச்சான்!


 எனக்கு என் முதலாளி என் வேலைத்தளத்தை மூடியதால் எனக்குச் சேர  வேண்டிய ஓய்வு விடுமுறை நாள்  வருமானம்,  எதிர்கால வேலைக்கு தேட வேண்டிய முற்பணம், என் சேவைக்கால ஓய்வுதியம் எல்லாம் எனக்கு தந்து தான் என்னை வீதியில் விட்டான் மச்சான்!

 அவன் ஒன்றும் தமிழன் போல இல்லை!! வேலை வாங்கினாலும் மனிதநேயம் மிக்கவன்னவன் பிரெஞ்சுக்காரன்!!


 அவன் பரம்பரை இன்னொரு காலணி நாட்டுகளில்  என்ன அட்டுளியம் செய்தாலும் !வந்த இடத்தில் ஏதிலிகளுக்கு எத்தனை அடிப்படை  வசதி செய்து கொடுத்து இருக்கின்றான்!!

 ஆனால் இந்தியாவில்,   ஈழத்தில் இருந்து புலபெயர்ந்த மண்டப அகதிகளுக்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வஞ்சகமாக ஆங்கிலேயர் அனுப்பி  இன்னும் கள்ளத்தோணி என்ற தேயிலைத் தோட்ட வம்சா வழிகளுக்கு என்ன செய்தது இலங்கை அரசு !

அதுக்கு வால் பிடித்த கூட்டத்துக்கெல்லாம் பரதேசி போல அமைச்சர் பதவி என்று சேவல் கூவியது அன்றி வேற என்ன!

 இனியும் சேவல் முன்னர் போல கூவாதவாறு மக்கள் வைச்சாங்க ஆப்பூ அப்படித்தான்!


இந்த வருமானவரியும்! இனிமேல் உல்லாசம். வெளிநாட்டுக்கு  போகாமல் இங்கேயே பார்க்க ஆயிரம் இடங்கள் இருக்கு. !ஆனால் இருக்கும் உறவுப்பாசம் சைவம்!ம்ம்



ஆனால் பிற நாட்டவர்கள் எல்லாம் ஆசியா நோக்கி அதுவும் இலங்கையில் இப்ப பாலாறு ஓடுது. தேனாறு ஓடுது என்று ஓடுவது  எல்லாம் இந்த நாட்டு  கொள்கை வகுப்பாளர்கள் உற்று நோக்காமலா ?,இருக்கின்றார்கள்.

.இந்த நாட்டில் இருந்து தேர்தல் ஊக்கிவிப்பு  அன்பளிப்பு  என்று இந்த இலங்கை நாட்டுக்கு அனுப்பின கோடிப் பணத்தில் இன்னும் ஈழதேச கனவுக்காக போய் இன்னும் புனர்வாழ்வு முகாமில் இருப்போரில் பலரை சட்டச்செலவுக்கு செலவழித்து இருக்கலாமே,,


ஏன் ஏன் இந்த ஓட்டு நாடகம்! இன்னும் பேச ஆசை! ஆனால் எனக்கு வேலை தேடும் பதிவுக் காரியாலத்துக்கு போகும் நேரம் மச்சான் அகிலன்!

 நீ வருமான வரிக்கு என் காசோலை கொடு !இந்தா போய் முதலில் வருமான வரி கட்டு! .

அதுதான் இங்கே அடுத்த அரச கருமங்கள் செயல்பட முதல் கேள்கும் அரசகோவை ஆவணம். உன் வருமானவரி பட்டியல் தா என்று! இது என்ன இலங்கை தேசிய அமைச்சில் இணைவு என்றால் இந்த அமைச்சு எனக்கு வேண்டும் என்று பேரம் பேசும் குதிரைப்பந்தயமா?,  

ஆமா அசுரன் இப்ப உனக்கு காசு வர எப்படி வசதி?, சுமா அனுப்பிய செய்திகள் எல்லாம் இன்னொரு வெளிநாட்டு ஊடகத்துக்கு விற்றுவிட்டாயா ஈன அரசியல் போல?,!!





!!!

தொடரும்....!

26 comments :

ஸ்ரீராம். said...

நிகழ்வுகளோடு அரசியல் கலந்து.... நன்று.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! அரசியலும் இருக்கு! அதில் அனுபவம் இருக்கு! தங்கள் எழுத்து நடை தனி அழகாகவும் இருக்கு!! நன்றி!!!

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே காணொளி மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 5

Unknown said...

அருமை தம்பி. பாடல் அழகே அழகு ரசித்தேன். தொடர்கிறேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அங்கதம், அரசியல், யதார்த்தம்.

இளமதி said...

எதிலே இல்லை அரசியல்?..
எங்கெங்கு பார்க்கினும் அதன் கோரத்தாண்டவமே!

காணொளி எனக்கு வரவில்லை சகோ!..:(

தொடர்கிறேன்!

த ம 7

Thulasidharan V Thillaiakathu said...

மிக யதார்த்தமாக வருகின்றது,...அதுவும் அரசியல் கலந்து...தொடர்கின்றோம்...

அழகு அழகு...பாடல் அழகு....நாங்கள் மிகவும் ரசிக்கும் பாடல்...அது போல பிசாசு படப்பாடலும் ரொம்ப நல்லா இருக்கும்ல...நண்பரே!

வலிப்போக்கன் said...

அவன் ஒன்றும் தமிழன் போல இல்லை!! ...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....

Unknown said...

சோகம் தீராத வலி சொற்களில் தெரிகிறது! இலவு காத்த கிளிதான்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நகைச்சுவை கலந்து சொன்னாலும் மனதில் அறையும் உண்மைகள்

balaamagi said...

அருமை, தொடர்கிறேன்.

தனிமரம் said...

நிகழ்வுகளோடு அரசியல் கலந்து.... நன்று.//நன்றி சிரிராம் சார் முதல் வருகைக்கு!

தனிமரம் said...

அருமை
தம+1/நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் சகோ! அரசியலும் இருக்கு! அதில் அனுபவம் இருக்கு! தங்கள் எழுத்து நடை தனி அழகாகவும் இருக்கு!! நன்றி!!!// நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்கிறேன்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை நண்பரே காணொளி மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 5// நன்றி கில்லர்ஜீ வருகைக்கும் வாக்கிட்டமைக்கும் ரசிப்புக்கும்.

தனிமரம் said...

அருமை தம்பி. பாடல் அழகே அழகு ரசித்தேன். தொடர்கிறேன்...//நன்றி அக்காச்சி கீர்தா வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அங்கதம், அரசியல், யதார்த்தம்.// நன்றி ஜம்புலிங்கம் ஐயா வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எதிலே இல்லை அரசியல்?..
எங்கெங்கு பார்க்கினும் அதன் கோரத்தாண்டவமே!

காணொளி எனக்கு வரவில்லை சகோ!..:(// இல்லை சரியாக இருக்கு அக்காச்சி.

தொடர்கிறேன்!

த ம 7/ நன்றி பாவலர் இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மிக யதார்த்தமாக வருகின்றது,...அதுவும் அரசியல் கலந்து...தொடர்கின்றோம்.../நன்றி துளசிதரன் சார்.

அழகு அழகு...பாடல் அழகு....நாங்கள் மிகவும் ரசிக்கும் பாடல்...அது போல பிசாசு படப்பாடலும் ரொம்ப நல்லா இருக்கும்ல...நண்பரே!அதுவும் அருமையான பாடல்தான் ஆனால் இந்த தொடருக்கு பொருத்தமில்லை! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் துளசிதரன் சார்.

தனிமரம் said...

அவன் ஒன்றும் தமிழன் போல இல்லை!! ...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....// நன்றி வலிப்போக்கன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சோகம் தீராத வலி சொற்களில் தெரிகிறது! இலவு காத்த கிளிதான்!//நன்றி புலவர் ஐயா வருகைக்கும். கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நகைச்சுவை கலந்து சொன்னாலும் மனதில் அறையும் உண்மைகள்//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை, தொடர்கிறேன்.//நன்றி மகேஸ்வரி வருகைக்கும் கருத்துரைக்கும்.