25 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்-5

புலத்தில் இருந்து புலம்பெயர் தேசத்திற்கு நேரகாலம் அறியாது நேரடி அழைப்பில் வந்து நிம்மதியற்று வேலைத்தள மன அழுத்தம் ஒரு புறமும் .உடல் அலுப்பில் திரியும் நெஞ்சில் தூரத்து மின்னல் போல கைபேசியில் இடியினை இறக்கும் பல நட்புக்கள் புரிந்து கொள்வது இல்லை அங்கு அதிகாலை என்றால் !

பாரிசில் நடுச்சாமம் நல்ல தூக்கம் வரும் நேரம் ஊடக புகைப்படக்கார தனிமரம் போலவருவாய் உழைக்க   தூக்கம் விழித்து இருப்பது போல இல்லை!




தாயகதில் இருக்கும் உறவுகளின் நேரம் அறிந்து! தூக்கம் அறிந்து! துயரம் அறிந்து !நாள் ,நட்சத்திரம் எல்லாம் பார்த்து நாம் எடுக்கும் அழைப்புக்கு இப்ப நான் நித்திரைகொள்ளும் நேரம் .

நாளைக்ககு நேரடியாக தொலைபேசி எடு என்றெல்லாம் எடுத்து எறிந்து தெனாவெட்டாக பேசும் உறவுகளுக்கு பணத்தேவை என்றால் மட்டும் பாசம் பொங்கி வந்துவிடும் தேர்தல்  காலத்தில் மட்டும் மக்களின் நலம் பேசும் அரசியல் கட்சி போல!

கடந்த வாரம் ஈசன் என்னிடம் முகநூலில்  தகவலகாக கொஞ்சம் பணம் தேவை என்று  செய்தியாக சொல்லியிருந்தான்.

 என்னிடம் இப்போது உண்மையில் பணம் இல்லை .திவாலான வங்கி போல மற்றவர்களின் உதவியில்தான்  இந்த வருட மலையேற்றம் என்பதைக்கூட இவனிடம் சொல்ல மனம் கூசிய நிலையில்தான் இன்னும் மலைப்பயணம் முடிவில்லை என்று அழைப்பின்போது சொல்லியது .


பணம் தரவில்லை என்ற கோபம் தான் என் அழைப்பினை அதிகம் தவிர்த்துவிட்டானோ ?என்ற சிந்தனையில் வீதியில் வந்தவனிடம்.


 மறுபக்க கரையாக எதிரில் வந்தான் நண்பன் ஜீவன் .

சாமி சரணம் .
என்ன ஐய்யப்பா ?என் வரவைக்கூட எதிர்பார்க்கவில்லைப்போல ?

தூரத்திலேயே உன்னைக்கவனித்து விட்டேன்!

 நீங்க யாரு சினேஹாவின் கனவுச் செல்லச் சீமான்னாச்சே!



என்னைப்போலவா?  என்ன உங்க சொந்தக்காரங்கள் ஆலயத்தில் இன்று படிப்பூசை செய்வதால் இலண்டனில் இருந்து வந்தாச்சு போல!


 அதுசரி கழுத்தில் ஐய்யன் மாலை குருசாமியின் ஆஸ்தான் சீடன் இப்படி  விரதநேரத்தில் சினிமா பற்றி பேசுதல் முறையோ? தகுமோ ?நகுமோ ?

சினிமா இப்ப பார்ப்பது இல்லை . என்னையே சோதிக்கின்றீர்கள் அவனா இவனா என்பது போல ?


 குருநாதர் கூப்பிட்டால் பாரிஸ்  வராமல் இருக்க முடியுமா ?

ஐயா ஜீவன் சாமி போதும் ! உங்களுக்கும் ,குருவுக்கும் இடையில் என் நட்பு பழக்க தோஸம் வார்த்தையாக  வந்துவிட்டது .எப்போதும் போல :)))


ஆமா சினேஹாவைப் பார்த்தீங்களா??இல்லை பரதன் சாமி !


அடியேன்  சொன்னது சினிமா நடிகைகையை இல்லை ! அவங்களப் போல என்று நீங்கள் சொல்லும் உங்க பிரெஞ்சுக் குப்பினை(நண்பியை) !

ஏன் பரதன் சாமி?

 நல்லாப்போற என் வாழ்க்கையில்  பாரிசில் இன்னொரு நல்ல நண்பன் என் இன்னொரு குருநாதன் இப்படி எல்லாம் பேசலாமோ?

 அப்புறம் எப்ப யாத்திரை கிளம்புறது !

அதில் தான் ஒரு சிக்கல் ஜீவன் ;ஐய்யன் சோதனைக்கு அளவு இல்லையா ?

சோதனையில் இருந்து மீளத்தானே ஐய்யனிடம் சரண் புகுகின்றோம் .

அப்படி இருக்கும் போது அவர் எப்படி நம்மை துன்பத்துக்கு ஆளாக்குவார் ?அவரின் கருணை இருந்தால் எந்த மலையும் கடக்கமுடியும் !



நம்பிக்கைதானே வாழ்க்கை என்று பா.விஜய் கூட சொல்லியிருக்கின்றாரே?

ஆமா இன்று படிப்பூசையில் சாமியின்   எந்தப் பாட்டு களைகட்டும் தேர்தல் திருவிழாபோல?

 பரதன் சாமி இந்தாண்டும் இங்கு நிறைய கன்னிசாமிகள்  வரும் இடத்தில் அடியவன் கூட கன்னி சாமிதான் இன்னும் !

குருநாதர் பாடு என்றால் ஏதோ ஐப்பானில் கல்யான ராமன் ஹீரோ போல பாடுவேன் .இன்று .

பார்க்கலாம் பரதன் சாமி !

.குருவே அடியேன் பரதனும் கன்னிசாமிதான் .சரி வாங்கள் ஆலயத்துக்குள் நுழைவோம் முதலில் .என் கைபேசியையும் அணைத்து விடுகின்றேன் .

ஓ ஓஒ, குருவின் உள்குத்தை இன்னும் மறக்க வில்லையே!

ஹீ குத்தினாலும் குரு எனக்கு எப்போதும் குருதான் அது என்ன அரசியல் போல தனிக்கட்சி இல்லை /தனி முகநூல்க்குழுமம் போலவா!

ஆஹா  நான் இன்று கஞ்சிதான்   இனவாத புலிச் சந்தேகத்தில் சிறிலங்கா பொலிசில் பிடிபட்டவன் போல ஹீ!

ஜீவன் சாமியின் இன்னொரு நண்பன் இன்று

வருவான் இல்லை!

ம்ம்ம்ம் வரலாம் ,வரமாலும் போகலாம் !ரஜனியின் அரசியல் கூற்றுப்போல தனிமரம் பன்னாடை, பரதேசி .நாதாரி.படிக்காதவன் வால்பிடி.குஜா. இன்னும் வார்த்தை வரும்!

 இப்ப என்னையே அடக்கின்றேன் விரதம் என்பதால் !

இப்ப யார் வலைப்பதிவில் /முகநூலில் ஐபோனில் இருந்து கருத்துப்போடுகின்றானோ ,?முதலில் இவன் ஐபோனுக்கு மூக்கில் குத்தணும் பழகிய நம்மை விட்டு புதிய உறவுகள் என்று எங்கோ போட்டான்!

இன்று வந்தால் குருவிடம் இருக்கு!எல்லா ஆசையும்  துறந்த பின்னும் இன்னும் இப்ப வந்த வலையில் அதன் பின் முகநூலில் இந்த பன்னாடையின் சல்லாபம் தொடர்கின்றது முகம் மூடி!இன்று வந்தால் வேட்டி உருவ ஜீவன் இருக்கின்றேன்!...
இன்னும்

10 comments :

அம்பாளடியாள் said...

தளராத மனத்தோடு களமாடி வா சகோதரா வெற்றி நிட்சயம் .
தனி மரமும் தோப்பாய் மாறும் தொடர் கதைகளால் .வாழ்த்துக்கள்
சகோதரா சிறந்த படைப்பு தொடர்ந்து பயணிக்கட்டும் .

திண்டுக்கல் தனபாலன் said...

கோபம் இல்லாமல் வேலையை முடிங்க...

Unknown said...

ஹூம்.............ஐயன் மனது வைத்தால் எல்லாம் கரைந்து விடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் படைப்புக்கள் தொடரட்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் படைப்புக்கள் தொடரட்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் படைப்புக்கள் தொடரட்டும்

தனிமரம் said...

தளராத மனத்தோடு களமாடி வா சகோதரா வெற்றி நிட்சயம் .
தனி மரமும் தோப்பாய் மாறும் தொடர் கதைகளால் .வாழ்த்துக்கள்
சகோதரா சிறந்த படைப்பு தொடர்ந்து பயணிக்கட்டும் .//வாங்க அம்பாளடியாள் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கோபம் இல்லாமல் வேலையை முடிங்க...

25 February 2014 17:47 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹூம்.............ஐயன் மனது வைத்தால் எல்லாம் கரைந்து விடும்.//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தங்களின் படைப்புக்கள் தொடரட்டும்//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.