18 February 2014

முத்தம் நித்தம் கிடைத்திடுமா???,!

நவீன தொழில்நுட்பத்தின் வருகை நம்மவர்களையும் தொலைத்த ஈழத்து மெல்லிசையை மீளவும் கட்டியெழுப்பும் முயற்ச்சியில் களம் இறங்க வைத்து இருக்கின்றது .


இப்படி நம் தேசத்தின் மெல்லிசையின் மூத்த தலைமுறையினரைத் தாண்டி!


 இளைய தலைமுறை இசைக் கலைஞர் வரிசையில் நாடறிந்த ஒரு கலைஞர் இவர்.


இவரின் இசைத்தொகுப்புக்கள் நவீன இசைக் கருவிகள் மூலம் கொஞ்சம் துள்ளல் அதிகம். நம்மவரின்  பைலாச்  சாயல் கொஞ்சம் இவரின் இசைத்தொகுப்பில் இரண்டரக் கலந்து இருப்பதால் இவரின் ரசிகனாகவும் இவரின் முகநூல் நண்பனாகவும் இருப்பது இன்றைய நவீன தொடர்பாடலின் நன்மை எனலாம்.


ஜெயந்தன் இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்த பாடல் இந்த வாரம் என்னை முழுமையாக இதயம் வருடுகின்றது.




முன்னைய பாடல்களின் சாயல் இல்லாமல் புதிய மெட்டில் இந்தபாடல் என்னையும் .நம்தேசத்தின் தெரிந்த இடங்களையும் நடனத்தின் ஊடே ஊர்ந்து  செல்ல வைக்கின்றது .

பாடலின் கவிவரிகள் காட்சியும் ,முகநூலின் இன்றைய பிரசித்தமும் ,இறுதியில் வரும் நகைச்சுவையும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கின்றது .பாடகியின் குரல் தான் பனியில் நனைந்து மூக்கில் அடைப்பு போல ரீங்காரம் செய்வது ஏனோஓஓஓஓஓஒ!நம்மவர் பாடல் ரசிக்க இங்கே.

 கந்தப்புவின் பாடல் கவர்ந்து தனிமரத்தின் சிந்தனைகள் !http://www.thanimaram.org/2012/04/blog-post_30.html.

நம்மவருக்கு முகம் கொடுக்கும் இங்கும் முகநூலில் லைக்பண்ணலாம்.
https://www.facebook.com/IlankaiRasigan?fref=ts

8 comments :

Anonymous said...

வணக்கம்

உண்மையில் ஜெயந்தன் அவர்களின் பாடலை நானும் இரசிப்பேன்....பகிர்வுக்கு வாழத்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை... காணொளிக்கு நன்றி...

அம்பாளடியாள் said...

எம் நாட்டுக் கலைஞர்களைக் கௌரவித்து இடப்பட்ட இப் பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

MANO நாஞ்சில் மனோ said...

அருமையாக இருக்கிறது !

தனிமரம் said...

வணக்கம்

உண்மையில் ஜெயந்தன் அவர்களின் பாடலை நானும் இரசிப்பேன்....பகிர்வுக்கு வாழத்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிமை... காணொளிக்கு நன்றி...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எம் நாட்டுக் கலைஞர்களைக் கௌரவித்து இடப்பட்ட இப் பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையாக இருக்கிறது !//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.