23 March 2014

மான் கராத்தே மயக்கும் பாடல்

பாடல் கேட்கும் ஆர்வம் எப்போது தோன்றியது என்று நான் அறியேன் ?ஆனால்  பாடல் கேட்பதால் வாங்கிய  அடியின் பரிசு இன்னும் ஞாபகம் இருக்கின்றது

.படிக்கும் காலத்தில் பாடல் கேட்டால் கெட்டுப்போவோம் என்ற ஒருவித தப்பு அபிப்பிராயமாக இருக்கலாம் !

என்றாலும் காலச்சக்கரம் வானொலியோடு என்னை அதிகம் இணைத்து இருகின்றது .பணிச்சுமையில்  இருந்து மூச்சு வாங்க வானொலியில் பாடல் கேட்பதும் ;பாடல் நிகழ்ச்சிக்கு ;தபால் அட்டையில்!


 தொடங்கி ;தொலை பேசி குறுஞ் செய்தி என்று வடிவங்கள் மாறினாலும்!

 இன்னும் பாடல் ரசனை குறைய வில்லை ஐநாவின் கூட்டத் தொடரில் தமிழர்  நிலை போல !


தேவா என்ற இசையமைப்பாளர் ஒரு காலத்தில் இலங்கை பண்பலைகளில் அதிகம் இரவு /பகல் என வானொலிகளில் கானா பாடல்களில் நேயர் விருப்பத்தில் மிகவும் வாலிப நெஞ்சங்களில் தாக்கம் செலுத்தியவர்.

வானொலி /தொலைக்காட்சி அறிவிப்பாளர் கலைச்செல்வனுக்கு மருத்துவச் செலவுக்காக இலவசமாக  இலங்கை வந்து இசைநிகழ்ச்சி செய்து கொடுத்த மனித நேயம் மிக்க ஒரு இசையமைப்பாளர் .



இரு தடவை கொழும்பில் இசை நிகழ்ச்சியில் நேரில்ச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மறக்க முடியாத பொக்கிஷம்.


..தன் தம்பிகளுடன் தமிழ்த் திரையில் பஞ்ச பாண்டவர்கள் போல வலம் வந்தவர் .அதிகம் காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர் என்று நையாண்டி செய்தாலும்.இவரைப்போல ஹிட்சு பாடல்களும் :படங்களும் இன்று வருவோரால் கொடுக்க முடியுமா?,,

 அருமையான சுய இசையையும் தந்தது காலத்தால் மறக்க முடியாது. 1990 இன் பிற்பகுதியில் சில வருடங்கள் அதிக தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற முதல் இடத்தை தக்க வைத்தவர் தேவா என்பது பலரும் அறிந்த தகவல்.


. தன் வாரிசை கருணாநிதி போல முன் நிறுத்த முயன்ற தன் விளைவு  சபேஸ்-முரளி என்று தம்பிமார் இன்னொரு முகம் காட்ட!

 சிறிக்காந் தேவா சில  படங்கள் இசையமைத்தார் .புதிய இளைஞர்களின் வருகை தேவாவின் இறங்கு முகம்  என்றாலும்.

 இன்று தேவா என்ற பெயரை பலர் மறந்து போகும் நிலையில் மீண்டும் தன் வசீகரக் குரலில் பட்டையைக்கிளப்பும் புதிய பாடல் இது.

தேவாவின் இசையில் அதிகம் ,குரலும் கவிவரியும் விளங்கும் இந்தபுதியவர்  அனுருத் இசையில் ஏனோ பாடல் கிழிந்த ஒலிநாடா போல இசையின் தாக்கம் அதிகமாக இருக்கு.

புதிய பாடல் வரிசையில் இந்த வாரம் என்னை அதிகம் கவர்ந்தது இந்தப் பாடல் ரசிப்போமா!கானா பாலவின் கவிவரிகள் இது.

10 comments :

அம்பாளடியாள் said...

இப்பதான் புரியுது இந்தப் பாட்டு உங்களை எப்படிக் கவர்ந்து இழுக்கிறது
என்று சொன்னால் கோவித்துக் கொள்ளக் கூடாது மொத்தத்தில டாஸ்
மாக்கை திறக்கச் சொல்லி அதுவும் 24 மணித்தியாலம் திறக்கச் சொல்லிப்
பாடிக் கவுத்திற்றாங்க அப்படித் தானே சகோதரா ?...:))))))))))))).வாழ்த்துக்கள்
நான் சும்மா கலாயிச்சேன் :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் தான் கேட்க வேண்டும்...!

கோமதி அரசு said...

தேவா பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

எனக்கும் சிறுவயதிலிருந்து ரேடியோ பாடல்கள் கேட்பது பிடிக்கும்.

Unknown said...


தேவாவின் இசையில் நானும் மயங்கிய காலம் உண்டு!

Unknown said...

தேவா"ஒரு" காலத்தில்..........பையன்............ஹூம்!

தனிமரம் said...

இப்பதான் புரியுது இந்தப் பாட்டு உங்களை எப்படிக் கவர்ந்து இழுக்கிறது
என்று சொன்னால் கோவித்துக் கொள்ளக் கூடாது மொத்தத்தில டாஸ்
மாக்கை திறக்கச் சொல்லி அதுவும் 24 மணித்தியாலம் திறக்கச் சொல்லிப்
பாடிக் கவுத்திற்றாங்க அப்படித் தானே சகோதரா ?...:))))))))))))).வாழ்த்துக்கள்
நான் சும்மா கலாயிச்சேன் :)))))//வாங்க அம்பாளடியாள் ஓரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

தனிமரம் said...

இனிமேல் தான் கேட்க வேண்டும்...!/கேளுங்க தனபாலன் சார் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தேவா பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

எனக்கும் சிறுவயதிலிருந்து ரேடியோ பாடல்கள் கேட்பது பிடிக்கும்.//வாங்க கோமதி அரசு முதல் தனிமரம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

தனிமரம் said...

தேவாவின் இசையில் நானும் மயங்கிய காலம் உண்டு!//நன்றி புலவர் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தேவா"ஒரு" காலத்தில்..........பையன்............ஹூம்!//ம்ம் என்ன செய்வது.திறமை இருக்கணும் மகனுக்கு.ம்ம்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.