02 March 2014

கவிதை போல கிறுக்கல்-2

உன்னோடு உருகிப்பாடியது
உண்மையில் அது ஒரு நிலாக்காலம்
உதறிவிட்டு ஊர் பிரிந்து
ஊர்தேசம் மறந்து
உயிர் கொண்டு வாழ்வது இன்று
உழிக்காலம்!
உனக்கும் ஒரு
உத்தமன் உறுதுணையாகட்டும்.
உண்மையுடன் உன்னை
உயிராக யாசித்தவன்!

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஆசைக்காதல் அழவைக்கின்றது
அகதியான அண்ணன்மார்களை
அறியாத தங்கைகள்
ஆயிரம் மைல் தொலைவில்
ஆர் அறிவார்களோ
தங்கைக்கோர் கீதம் ?
ஆசைக்காதலில் அடையிழந்து
ஆட்டம்போடும்
அபலைப்பெண் ஆகும்
அந்த நிலையினை!


//
குறுந்தொகை போல
குமரியின் சிரிப்பில்
குற்றால சாரல் போல
குறுகுறுக்கும் மனசுக்கு
குடை பிடிக்க  வருவாளோ?
குலமகள் ராதை !


 குற்றுயிருடன் குற்றவாளி போல
குளக்கரையில்!
.இதன் முதல்க்கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2013_05_01_archive.html

12 comments :

சீராளன்.வீ said...

நல்ல கிறுக்கல்கள்
அருமை
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ சிறப்பான கிறுக்கல்கள் மேலும் சிறப்பாகத்
தொடரட்டும் .

திண்டுக்கல் தனபாலன் said...

கிறுக்கல்கள் அருமை...

வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

கிறுக்கல்கள் தொடரட்டும் நண்பா !

ரசித்தேன், அந்த பாடல் மனதுக்கு இதம் !

ராஜி said...

கிறுக்கல்கல் அருமை. தொடரவும்

Unknown said...

எப்ப தான் கிறுக்கல் நிக்குமோ?ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

நல்ல கிறுக்கல்கள்
அருமை
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்//வாங்க் சீராள்ன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ !நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் சகோ சிறப்பான கிறுக்கல்கள் மேலும் சிறப்பாகத்
தொடரட்டும் .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கிறுக்கல்கள் அருமை...

வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

கிறுக்கல்கள் தொடரட்டும் நண்பா !

ரசித்தேன், அந்த பாடல் மனதுக்கு இதம் !

2 March 2014 19:39 Delete//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் பாடல் ரசிப்புக்கும்.

தனிமரம் said...

கிறுக்கல்கல் அருமை. தொடரவும்//நன்றி ராஜி அக்காள் வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

எப்ப தான் கிறுக்கல் நிக்குமோ?ஹ!ஹ!!ஹா!!!//விரைவில் நிக்க்லாம்!ஹீஈஈஈஈஈஈ! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.