12 August 2014

வாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு!!!!

அன்பான நண்பனே செளக்கியமா? 
இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். !
 கடல்கடந்து என் வாழ்த்துக்கள்

. நீ என்றும் சந்தோஸமாக இருக்க வேண்டி பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

 இளமைக்காலத்தில், இனவாத யுத்தத்தில் இடம்பெயர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் ,இன்னொரு இடம் வவுனியா வந்த போது உன்னை நான் சந்தித்தேன் .!

 நீயும் அழகானவன். அன்பாக என் தோழில் கைபோட்ட நாட்களில் உன் கண்ணில் எதிர்கால இலட்சியம் எம்மையும் ஒரே கூடையில் சுமந்தன . இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடப்பதும், வெளியேறும் போது இணைந்தே வருவதும் , இதைப்பார்த்து மற்றவர்கள் நக்கல் பண்ணியது இன்னும் காதில் ஒலிக்கின்றது! 

வீதிகளில், நூலகங்களில் ,திரையரங்குகளில் ,என்று நீயும் நானும் ஒரே தடத்தில் பயணித்த இசை போல இருந்தோமே! 

இனி எல்லாம் சுகமே என்று உயர்தரம் வந்த போது மட்டும் எம்நட்புக்குள் எத்தனை எல்லைதாண்டிய உறவாகி எப்போதும் குடும்பம் முக்கியம் என்ற நோக்கில் இளமைக்கால பருவ மாற்றத்திற்கு எல்லாம் மடைதிறக்காத கதவு போட்டு மாணவர்தலைவர்கள் என்று நீயும், என் மற்ற நட்புக்களும் மேலே ஏறிய போதெல்லாம் ஜாலியாக இருந்த போது இயம்பினாயே .

 உனக்கும் கிடைத்து இருக்க வேண்டிய மாணவர்தலைமைப்பதவியில் பிரதேசவாதம் குறுக்கீடு செய்கின்றது .

பொருளியல் ஆசிரியர்தான் தலைமைகளை தேர்வு செய்வதில் பொறுப்பாசிரியர் என்று! அப்போதும் அறிவேன் .வடக்கும் தெற்கும் போல அரசியல் பேதம்

. அதைவிடுடா பதவி வேண்டாம் முன்னுதாரணம் சொல்லும் தகுதியில்லை எனக்கு என்று அடுத்த காட்சிக்கு போவோம் என்று பார்த்த திரைப்படம் இன்னும் கோகுலம் .காதில் ஒலிக்குது பாடல். 

அடிக்கடி சொல்வாய் நீ வில்லன்டா என்று சிரித்து ,சிலிக்கும் போது அப்பாஸ் போல தலைமுடி வெட்டு புகைப்படக்காட்சியில் பதிவாக பத்திரமாக:)) 

உயர்தரம் முதல் ஆண்டு முடிந்து இரண்டாவது ஆரம்பத்தில் மன்னாரில் இருந்து ,இடம்பெயர்ந்து வந்த இஸ்லாமிய தோழிமீது ! இதயம் துடிக்கு காதலின் நோய் என்ற போதுதான் இருதுருவங்கள் ஆனோம் நட்பிள் நாம் !!

 அன்று இடித்துரைத்தேன் இது காதல் வரும் காலம் அல்ல என்ற போது காதலுக்கு மரியாதை செய் அவள் ஷாலினி போல என்றாய் . சப்பைப்பிகர் என்றேன்

! சட்டையைப்பிடித்தாய் முதல் முறையாக சினிமா ஹீரோ போல்

. சிலர் நட்புக்கள் சூழ்ந்துவிட சீ பேசாதே நீ மதவாதி என்றாய். 

பேசினேன் "மதவாத தீயில் உன் காதல் மலராத மொட்டாகும் மனசை அலைபாயவிடாதே " மாணவன் முன்மாதிரி மகிமைகெடாதே என்று நினைவு மறைக்காமல் இன்னும் நீயும் அறிவாய் .

 ஈகோ வந்ததால் இருக்கும் இடத்தைவிட்டு அகன்றுவிடும் அடிச்சுவட்டை உன்னிடம் கற்றேன் . மரியம்பீவியை நினைத்து நீ சேர்த்த பாடல் ஒலிப்பேழைகள் என்னுக்கும் பிடித்தவை.

 என் தமிழ்பாட நவீனகவிதைகள் உன்னவள் காதல் கவிதைத் திருட்டாக மரியம் உன்னிடம் சேர்த்தவைபெல்லாம் பார்த்து ரசித்தேன் அருகில் இருந்து .

 நம் நட்புக்கு இடையில் இன்னொரு நட்பு நடுவிள் ஒரு கதிரை போட்டது நாம் அவணுக்கு பொதுவான நட்பாக இருந்தோம்!

 மதவாதி நீ என்று சொல்லிய சீண்டல்கள் எல்லாம் சொல்லாத காசு அன்று போல இன்றும் மதங்கள் கடந்து என் முகம் சொல்லும் முகநூல்கள் நட்புகள் நீயும் பார்க்கின்றாய்.


. நீ பம்பாய் படப்பாடல் உயிரே உயிரே என்றதும். என்னைத்தாலாட்டவருவாளா ??என்ற போதெல்லாம்! நந்தவனமே நந்தவனமே நன்றிச்சொல்லிப்போகின்றோம் என்று ஜாலி படப்பாடல்தான் என் தேர்வில் இலங்கை ஒலிபரப்பிள் அடிக்கடி ஒலித்ததும் நீ அறிவாய்.

 உயர்தரப்பரீட்ச்சை முடியும் முன்னரே மதவாதத்தீ காதல் வேண்டாம் மார்க்கத்தின் வழியில் நெறி மரியம்பீவியை இடம்பெயர வைத்ததும்!

 நீ மனம் உடைந்து பரீட்சையை சிறப்பாக செய்யாததும் ,குடும்பங்கள் சிந்திய கண்ணீரும் நீ அறியாய். 

உனக்கு இளமையின் ஈர்ப்பு பெரிதென இருந்தாய்.


 என்னால் முடிந்தது என்னையும், என் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பரீட்சையில் எந்தச்சிக்கலும் வராமல் எழுத நினைத்தேன்.

 நீயே அறிவாய் நம் நட்புக்கு மதவாதிகள் மரக்கட்டைகளுடன் தேடியகதைகள் மறுக்கமுடியுமா உன்னால்??அன்றும் இன்றும் ! மணந்தாள் அவள் என்று மல்லாக்கப்படுத்து துப்பிய் எச்சில்கள் காய்ந்து இருக்கலாம்! மதம் விடாது என்றேன்அன்றும் .


அதுதான் இன்றும் பலித்தது. நீங்கள் இன்று இருவேறு பாதையில் .நானோ எங்கோ ஒரு மூளையில் .

நீண்ட வருட காலத்தின் பின் என் முகநூலில் நட்பு என்று மீண்டும் வந்தாய் நினைவு திரும்பிய ஆனாஸ்ராஜ் விஜய்காந்த் படம் போல  நட்பாக.

 இடையில் எங்கே போனாய் என்றாய்!

" இல்லை மச்சான் சொந்த ஊர் போய் இருந்தேன்! தொடர்புகொள்ளும் வசதியில்லை என்றேன் பொய் சொன்னேன்"

 சந்தேக புலிக்கதையில் இருட்டறை கதை எல்லாம் பகிர்ந்து உன்னை சங்கடப்படுத்தும் அற்ப ஆறுதல் எதற்க்கு என்று!

 எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு வந்திருக்கு எதுக்கும் பல ஆயிரம் ஈரோ அனுப்பு என்று கேட்டாய்.

 என் நிலை புரியமறுத்தாய் வெளிநாட்டில் காசுமரம் என்னிடம் இல்லை கொஞ்சம் காலம் பொறு என்றேன்.

 இடையில் என் கதை எல்லாம் ஒரு தலைராகம் போல சோகத்திலும் சிரிப்பு என் இருப்பானது முகநூல். தந்தியில்லா அலை என்று . நீயோ சரியான துரோகி என்றாய்!

 பல ஆயிரம் ஈரோ போய்  சில ஆயிரம் ஈரோவில் இப்ப கொடு என்றாய் பின் ஒரு வருடத்தில்!


 சிறுதுளியாக சேமித்ததும். சீட்டுக்கட்டாமல் போனதும் சிந்தித்த வண்ணம் சீட்டுக்கம்பனி போல  சீக்கரம் அனுப்பினேன்! 

 முகநூலில் கிடைத்தது என்றாய் மறுவாரம் !மீண்டும் வரவேயில்லை முகநூல்ப்பக்கம் காத்து இருக்கின்றேன் வெட்டியாக இன்றும் உன் பார்வையில் முகநூல் வெட்டியாமே!ம்ம்

நீ சகோதரமொழி நங்கையை கைபிடித்த செய்தி ஏனோ சொல்லாமல் விட்டாய். இன்னொரு நட்பு உன் திருமணப்புகைப்படத்தோடு வாழ்த்தும் சொல்லியது முகநூலில்.

 நண்பனுக்கு பாவற்காய் போல ஆகிவிட்டேனோ என்று பார்த்ததும் நினைத்தேன்!

 பருவாயில்லை பல நட்புக்கள் எனக்குண்டு இழந்தவை எதுவும் பெரிதில்லை என் திமிருக்கு முன்னே என்று என்னை அறிந்த இன்னொரு நட்பு நேற்றும் சொல்லியது!

 இன்று நீ என்னை மறக்கலாம்!  நான் உன்னை மறக்கவில்லை.13/8/0000!


 உன் முகவரியால் இலங்கை வானொலியில் வலம் வந்த என் கவிதையின் சந்தோஸ நாட்களின் முன் சிலஆயிரம்  ஈரோ அடுப்பிள் எரிந்த ஆட்டின்  கொழுப்பு போல என்றாலும் நீ என் நண்பனே!! காத்து இருக்கின்றேன் முகநூலில் வரும் நாட்களுக்காய்!


யாவும் கற்பனை!!!


//////////////////////////////////
பதிவர் சிட்டுக்குருவி என்று தனிமரம் நட்பிள்  வந்து பின் ஆத்மா என்று வலம் வரும்   சகோ இம்ரான் மோஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . 




9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

சில நட்புகளுக்குள்ளும் மதம் ஜாதி வெறி இருக்கத்தான் செய்கிறது !

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

unmaiyanavan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

வணக்கம்,நேசரே!நலமா?///பிறந்த நாள் வாழ்த்துக்கள்,உங்கள் 'அன்பு' நண்பர் இம்ரான் மோஷா வுக்கு!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நேசன் (அண்ணா)

பதிவை படித்த போது மனம் நெகிழ்ந்தது. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் கற்பனைத் திறன் கண்டு வியந்தேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்.

தனிமரம் said...

வணக்கம்,நேசரே!நலமா?/// நலம் யோகா ஐயா ஆனாலும் தேடலில் பொழுது!ம்ம்

தனிமரம் said...

சில நட்புகளுக்குள்ளும் மதம் ஜாதி வெறி இருக்கத்தான் செய்கிறது !//உண்மைதான் அண்ணாச்சி

ஆத்மா said...

மிக்க நன்றி அண்ணா