16 August 2014

கவிதை போல கானம்.

கைதொழும் பீடத்தில் கண் எதிரே
 காதலி போல கண்டு கொண்டேன் அன்று
 கடவுளுக்கு சூட்டும் பூமாலை போல 
கவிதைகள் பாமாலைகள் கடிதம் போல
 கையெழுத்தில் கனத்த இதயத்துடன்
 கவி வடித்து
 கையில் தந்தேன் உன்னிடம்!
காத்திருக்கவா ?
கடந்து போகவா? 
கடிந்தும் கண் இமைக்காமல் 
கடந்து சென்றாய் கல்வி என்று!
 கவிதையில் கண்ணீருடன்
 கதை என்றும் 
காணல் போல நீ என்றும்
 கற்பனையில் கல்வெட்டாக
 கையில் கலர்ப்படம் தீட்டியதும்
 காதலில் அன்றேல் உன் 
காசுக்காக அல்ல !!

கல்லாதவன்  இன்று
 கடந்த ரயிலில்
 கண்டேன் !
 கடந்த காதலியாகா!
 கைதொழும் பீடம் கடக்கும் வழியில்!



கண்ணீர் சிந்தும் உன்
 கடந்த கால நினைவுகள்! 
கட்டையிலும் வேகாதடி!  
கண்ணே உன் சமையல் அறையில்
கண்ணாடி  உப்பாக நானாக ஆசையில்!
////////////////////////////////
பூக்கள் தந்தேன் புன்னகை தந்தாய் !
காதல் தாலி தரவந்தேன் 
கண்டுகொள்ளாமல் சென்றாய்
 கையில் காசில்லாதவன் நானோ!


12 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அழகிய கவி வரி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஆத்மா said...

கட்டையிலும் வேகாத நினைவுகள் ....
அருமையான வரிகள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வரிகள் நண்பரே

Unknown said...

கவிதை போல 'கானம்' பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

வணக்கம்

அழகிய கவி வரி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் முதல்வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கட்டையிலும் வேகாத நினைவுகள் ....
அருமையான வரிகள்//நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

அருமையான வரிகள் நண்பரே//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கரந்தை ஐயா.

தனிமரம் said...

கவிதை போல 'கானம்' பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

முத்தரசு said...

ரசித்தேன்

அம்பாளடியாள் said...

கைதொழும் பீடத்தில் கண் எதிரே
காதலி போல கண்டு கொண்டேன் அன்று
கடவுளுக்கு சூட்டும் பூமாலை போல
கவிதைகள் பாமாலைகள் கடிதம் போல
கையெழுத்தில் கனத்த இதயத்துடன்
கவி வடித்து
கையில் தந்தேன் உன்னிடம்!

வாழ்த்துக்கள் புலவர் சகோதரா :) எக்கச்சக்கமாக அன்பைப்
பொழிந்து தள்ளியுள்ளீர்கள் "கவிதை வரிகளில் "..:) ரசித்தேன் .

தனிமரம் said...

ரசித்தேன்//நன்றி முத்தரசு வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கைதொழும் பீடத்தில் கண் எதிரே
காதலி போல கண்டு கொண்டேன் அன்று
கடவுளுக்கு சூட்டும் பூமாலை போல
கவிதைகள் பாமாலைகள் கடிதம் போல
கையெழுத்தில் கனத்த இதயத்துடன்
கவி வடித்து
கையில் தந்தேன் உன்னிடம்!

வாழ்த்துக்கள் புலவர் சகோதரா :) எக்கச்சக்கமாக அன்பைப்
பொழிந்து தள்ளியுள்ளீர்கள் "கவிதை வரிகளில் "..:) ரசித்தேன் .//ஆஹா கவிதாயினி இப்படிச்சொல்லலாமா?நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.