30 August 2014

முன்னோட்டம்

பூக்கள் தந்தேன்
புன்னகை தந்தாய்
காதல் தாலி தரவந்தேன்
கண்டுகொள்ளாமல்
சென்றாய் கையில்
காசில்லாதவன் நானோ!



/////////////////////

கண்டதும் கை பிடிக்க
காதலுடன் ,கவிதையும்,
கதையும் ,சொல்லிக்
காத்திருந்ததும்!
காணமல் போனதும்,
கடல் கடந்து ,
காவல்ச்சிறைக் கைதியானாலும்
கண்ணீரில் கரைந்த 
காலம் ஒரு 
கனாக்காலமா ?
காதலியே கையில்
கவி எழுத 
கம்பிகளின் பின்னே
காளை ஒருவன்.
காத்து இருங்கள்
கதை பேசுவோம்!
                              !!!!!!!!!!!!
.....................................

10 comments :

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

Anonymous said...

annaa naanum yes

Anonymous said...

kavithai sema super

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

காலைப்பொழுதில் இன்பக்கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைக் கவி நண்பரே

Yoga.S. said...

நன்று!இருபதே வரிகளில்,நச்சென்று.

அம்பாளடியாள் said...

சிறப்பான வரிகள் மிகவும் ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .

kingraj said...

நன்றாக உள்ளது கவிதை...

முற்றும் அறிந்த அதிரா said...

aaha super!! வரவர கவிஞராகி வாறீங்க...

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி.. தாலியோடு பின்னால கலைப்பதை இன்னும் நிறூத்தேல்லையோ/ :)... கவனம் வீட்டில மகன் எல்லோ இருக்கிறார் :)