08 August 2014

என் நட்புக்கு வாழ்த்து.

இனிய நண்பனே!!

 இன்று உன் வாழ்வில்
இன்னொரு சிறப்பு நாள்!9/8/...

இன்நாளில் உன்னோடு
இணைந்து இணைந்த கைகள் போல
  இலங்கையின்
இனிய வீதிகளில்
 இருவரும் பிதாமகன் போல
இயல்பாக இருக்கும் நிலையில்லா

இந்த இனவாத நாட்டின் நிலை.
இடையில் நம்மையும் இருகோடு
இருட்டறை   என்று இழுபட்ட
இன்னல்கள் எல்லாம்
இன்னும் எழுது  என் தோழா
இனி நீ தனிமரம் பாரிசில் என்றாயே!


இந்த நிமிடம் வரை உன்  வார்த்தைகள்
இறுவட்டுக்கள் போல  இவன் தொடர்களில்
இன்றும் நீ போட்ட இந்த தலையங்கம்
இனியும் அச்சில் வருமா??
இது உன் பொறுப்பு நண்பா!


இந்த நன்நாளில் உன்னிடம்
இவனும் நட்பிள் கடனாளிதான்!
இந்த வேசமான உலகில் உன்னால் மட்டும்
இயல்பான என் குணம். இரக்க நிலை
இது எல்லாம் அவன் இயல்பு
இலங்கை தாண்டிய பின்
 இன்றைய நவீன  ஊடகபிரபல்யம் முகநூல்.
இன்னும் வலை என்று
 இப்போதும் வெட்டியாக  இருக்கின்றான்!


இன்னும் அதே திமிருடன் என்று
இளமைக்கால நட்புக்களிடம் இன்றும் இடிதுரைக்கும்
இனிய நண்பனே! இவன் உனக்கு
இந்த ஆண்டில் இனிய பதிவாக
இரட்டிப்பு சந்தோஸத்துடன்
இடுகின்றேன் உன் வாரிசு
இனி வரும் ஆண்டில் வந்திடுவான்.
இந்த டெனிலும் இனி  தோப்பு என்று!

இவன் பின்னே இருப்பேன் தனிமரம் போல
 இவன் அறிவான் !
இன்றும் இணைந்தகைகள் பாடல் இவனிடம்
 இன்னும் சில நாட்குறிப்பு இவனிடம்
இப்போதும் பொக்கிஷம் போல! .
இனியும் எழுதும் தனிமரம்
இன்னும் ஒரு தொடர்.
இவன் இப்படி கடித்தாலும்!



4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

உயிர் எழுத்தில் அடியெடுத்து எழுதிய விதம் கண்டு மகிழ்ந்தேன்.
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

உங்கள் அன்பு நண்பர்,டெனில் க்கு எங்கள் வாழ்த்துக்களும்!