22 July 2017

காற்றில் வந்த கவிதைகள்-18


முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/07/17.html








----------------------------------
எத்தனை துயரங்கள் !
எண்ணற்ற விம்மல்கள்,
என்றாலும் இன்னும் ,
எங்கேயும் சிலிர்ப்புடன் இருக்க,
என்றாவது  இதயம் ஒரு தடவை 
எட்டிப்பார்க்க 
என் இதழ் பதித்து 
என்னுயிர் பிரிவதுக்கு முன்!
ஒரு முதல்முத்தம் இடவேண்டும்
என்னைப்பெற்ற தாய்நாட்டு மண்மீது!
என்றும் குழந்தை போல பிரிந்து 
எங்கும் ஒரு காதலன் இவன்

ஏதிலி!--////


----------------

 ருவரும் கவிதை எழுதினோம் இருவிழியில் இருபார்வையில் ஏனோ!
 இருவரில் ஒருவர் வென்றோம்
 இறுதிச்சுற்றில்!
இது தரம் என்று
இன்னொரு மகுடம்  என் கவிதைக்கு !
இருந்தும் இதில் ஏதோ அரசியல்
இன்னும் நம்மமுடியாதவன் நீ என்று 
இதயத்தோல்வி விருதும்
இன்முகம் காட்டியது!



இன்னொருவனுடன்  உனக்கு தாலியும் 
இந்த ஊர் தானே தந்தது!
இப்போது இடைவெளிகள் கவிதைக்கும்
இந்த முன்னால் கவிஞனுக்கும் 
இருந்தும் இணையம் இணைக்கின்றது
இருவரும் இருதேசத்தில்!




-----------





No comments :