11 August 2012

காற்றில் ஓரு வாழ்த்து .

மலைமகள் அவள் ஒரு குலமகள் நல்ல குணமகள்.
மனதில் துங்கிந்தைச் சாரல் தந்தாள்
மையல் கொண்ட பார்வையில்.
மதிமயக்கம் வந்தது பள்ளிக்காலத்தில்!


மயக்கம் வேண்டாம் ஈர்ப்பில் கலைந்து போகும்
இந்த மாற்றம் என்றாள்.
மாணவன் மன்னவன் ஆகான்
மனதில் உயர்ந்தாள் கோபுரமாக.

மூத்தவர்கள் இருக்கும்போது
முந்திப் போக மாட்டேன் முறையற்று.
என் வீடு எனக்கு ஒரு ஆலமரம்
செதுக்கினால் சிலையாக நெஞ்சில்.
எனக்கும் எல்லாமே குடும்பம் தான் என்று !
நல்ல நட்பாக நடந்தோம்
குளக்கட்டுப்பாதையில். சில மாதம் !

யுத்த மேகம் தூவிச் சென்ற இனவாதக்காற்றில்
இடையில் மாறிப் போனேன் இன்னொரு ஊர் .

நீயும் இடையில் பலமாற்றம்
பலகாலம் தொடர்பில் இல்லை.
இன்று நண்பன் சொன்னான்
நீ தேடிப்பார்த்தாயா?
 நம்மோடு படித்தவள் மூச்சுக்காற்றை ?
நீங்கள் இருவரும் ஜோடிப்புறா
 எண்ணியிருந்தேன்..தவறாக.!!


இல்லை அவள் என் நண்பி
சொன்னாலும் நம்பமறுக்கும்
சமுகம் மீது எப்போதும் எனக்கும் கோபம் தான் !

நட்பையும் ,காதலையும் நன்கு உணராமல்
ஊதிவிட்டுப்போகும் நெருப்பில் எரிந்து போவது
நல்ல நட்புத்தான் ...
.நீ எப்போதும் தோழிதான் எனக்கு ..
என் தோழிக்கு இன்று பிறந்தநாள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ கவிதைப்பூக்களைத் தூவுகின்றேன். வழிப்போக்கணையும் செதுக்கியதில் நீ என் தோழிதான்.
வழிப்போக்கன் வாழ்த்துக்கள் சேர்கச் சொன்ன நண்பனுக்கு நான் ஒரு முகம் தெரிந்த நண்பன் அன்புத் தோழியே !

28 comments :

JR Benedict II said...

//இல்லை அவள் என் நண்பி
சொன்னாலும் நம்பமறுக்கும்
சமுகம் மீது எப்போதும் எனக்கும் கோபம் தான்//

எல்லா இடமும் இப்பிடி தானா.. சில வரிகள் ஏதோ ஞாபகம் எல்லாம் வந்து போனது நண்பா.. கலக்கிட்ட

கவி அழகன் said...

Kalakkirinka kavithai alaku varikal kulaivu

Anonymous said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ....


அந்த அக்காக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

Anonymous said...

ஹேமா அக்கா ஆ உங்களுக்குலம் சேர்த்து பால்க் காப்பி குடிக்கிறேன்

தனிமரம் said...

இல்லை அவள் என் நண்பி
சொன்னாலும் நம்பமறுக்கும்
சமுகம் மீது எப்போதும் எனக்கும் கோபம் தான்//

எல்லா இடமும் இப்பிடி தானா.. சில வரிகள் ஏதோ ஞாபகம் எல்லாம் வந்து போனது நண்பா.. கலக்கிட்ட

11 August 2012 12:11 // நன்றி நண்பா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

Kalakkirinka kavithai alaku varikal kulaivu

11 August 2012 12:27 // நன்றி கவிக்கிழவன் கருத்துரைக்கும் வருகைக்கும்.

தனிமரம் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ....


அந்த அக்காக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

11 August 2012 12:35 // நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும் கலை!

தனிமரம் said...

ஹேமா அக்கா ஆ உங்களுக்குலம் சேர்த்து பால்க் காப்பி குடிக்கிறேன்// ஹீ இன்று பால்க்கோப்பி ஹரிபட்டர் நண்பருக்கு கொடுத்தாச்சு கலை!அவ்வ்வ்வ்வ்வ்

அம்பாளடியாள் said...

கவிதை வரிகள் மிக சிறப்பாக இருந்தது சகோ .நானும் என் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் மனம்
மகிழ்கின்றேன் .தொடர வாழ்த்துக்கள் .

Yaathoramani.blogspot.com said...

நட்பையும் ,காதலையும் நன்கு உணராமல்
ஊதிவிட்டுப்போகும் நெருப்பில் எரிந்து போவது
நல்ல நட்புத்தான் ...
.நீ எப்போதும் தோழிதான் எனக்கு ../

ஆண் பெண் நட்பென்றாலே அதை காதலாகவும்
நேசத்தை காமமாகவும் பார்க்கிற சமுகம்
கொஞ்சம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது
தூய நட்பிம் சிறப்பைச் சொல்லிப்போகும்
பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

கவிதையோடு சேர்ந்த உண்மைக் கதை. தொழியானாலும் தொடர்பில்லாமல் போனால் கவலைதான், நினைவுகள் என்றுமே அழியாது.

MANO நாஞ்சில் மனோ said...

எனது வாழ்த்துகளையும் சொல்லிவிடுங்கள் மகா...!

Seeni said...

kavi!

arumai!

திண்டுக்கல் தனபாலன் said...

/// என் தோழிக்கு இன்று பிறந்தநாள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ கவிதைப்பூக்களைத் தூவுகின்றேன். ///

இதற்கு மேல் என்ன வேண்டும்...? அருமை...

இருவருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி...(TM 6)

சீனு said...

// சமுகம் மீது எப்போதும் எனக்கும் கோபம் தான்// சமுகம் பல சமயம் அப்படித் தான் ... உங்களோடு சேர்ந்து நாங்களும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகிறோம்

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!உங்கள் அந்த முகம்(நமக்கு)தெரியாத் தோழிக்கு எங்கள் வாழ்த்துக்களும்!

சித்தாரா மகேஷ். said...

உங்க தோழிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.தோழிக்கான கவிதை சூப்பர்

சித்தாரா மகேஷ். said...

எனக்கு ரொம்பவே பிடிச்ச பாடல்.ஆனால் இதுவரை இப்பிடி ஓர் உறவு அமைந்ததில்லை.

சித்தாரா மகேஷ். said...
This comment has been removed by the author.
ஹேமா said...

பாட்டு பாட்டு.....என் பிந்திய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளும் நேசன் !

ஹேமா said...

காக்கா.....என்ர பால்கோப்பி....
கள்ளி !

Riyas said...

நல்லாருக்கு நேசன்.. உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்..

ஆத்மா said...

நல்லதொரு கவிதை ...உள்ளத்து ஏக்கத்தை சொல்கிறது.....

ஆத்மா said...

பாடல் என்னுடைய விருப்பப் பாட்டு....எப்போதும் விருபிக் கேட்பேன் பல நினைவுகளைத் தட்டிச் செல்லும்

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

Kalakkirinka kavithai alaku varikal kulaivu// நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ....


அந்த அக்காக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

11 August 2012 12:35 //* நன்றி கலை வருகைக்கும் வாழ்த்துக்கும்

தனிமரம் said...

ஹேமா அக்கா ஆ உங்களுக்குலம் சேர்த்து பால்க் காப்பி குடிக்கிறேன்

11 August 2012 12:36 // ,ஹீ அடிவரப்போகுது!ம்ம்