16 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -15


வந்து போகும் உலகில் விடுதியில் தங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் பலர் பலமுகம் கொண்டவர்கள், பல கருமங்களின் நிமித்தம் தங்கியிருப்பார்கள் வீடு இல்லாதவர்களுக்கு இந்த விடுதி ஒரு கொடை என்றால் சிலருக்கு சிறை. நம்நாட்டில் கொழும்பில், வவுனியாவில் என இந்த விடுதியின் வாழ்க்கை ஒரு விசித்திரம் சொல்லும். பலருக்கு யுத்தமுனைப்பு அதிகமான பிரேமதாச காலமும் அதன் பின் அம்மையார் ஆட்சியிலும் இந்த விடுதியில் இருந்து வேதனையை அனுபவித்தவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அதுவும் கொழும்பில் புலம்பெயந்த கணவருடம் இணைந்து கொள்ள தன் பிள்ளைக்கள் சகிதம் தங்கியிருந்த போது, சந்தேக குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் உறவுகள் நிலை எல்லாம் தேட உலகம் குடும்பத்துடன் திருப்பதி போகும் நடிகர் குடுபத்துக்கு பின்னாலும் முன்னாலும் சுடச்சுடச் செய்தி என்று சுதந்திரம் என்று நிம்மதியைக் குழைக்கின்றது. ஆனால் நிம்மதி இல்லாமல் இருக்கும் இந்த சந்தேக வழக்கில் இருப்பவர் நிலையை சுடச்சுடச் சொல்லாது உண்மையைத்தேடி என்று.

சந்தேகம் என்று பொலிஸ் வரும் என்று சொல்லியே வெளிநாடு போக வந்திருக்கும் ஏதிலியிடம் விடுதியில் இருந்தவர்களிடம் நம்மவர்களே சிங்களம் தெரியாத காரணத்தினால் பணத்தினை ஏப்பம் விட்ட சுனாமி உதவி நிதி போல பல கதைகள் பேசவேண்டியவர்கள் மதவாதிகள் பின் இனவாதம் பேசுதல் எடக்கு முடக்காம். என்ன கொடுமையடா சாமி வெளிநாடு என்ற வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொழுபில் வழிதவறி சீரழிந்த குடும்பத்து குத்துவிளக்கு எல்லாம் ஈழத்து பொன்மணி படம் போல தோல்வியை தன் தவறு என்று ஏற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டில் இருப்பவனைத் திட்டுவார்கள்.


ஏன் அப்படித்தான் நாமலும் வலி வேதனையில் ஓட்டியான், ஓட்டியான குமார் மீதும் ராஜா மீதும் சிணம் கொண்டு கள்ளன்கள் என்றும் கீழ்த்தரமான மூன்றாம் தரவார்த்தைகள் சிங்களத்தில் உளறியது அகிலனுக்கு வாந்தி போல இருந்தது, பதிவுலகில் சிலர் மதவெறி எடுப்பது போல. இவன் என்ன சிங்கள மொழியில் பேசுகின்றான் என்ற பின் தான் வந்தவர்கள் பலருக்கும் தெரிந்தது நாமல் ஒரு சகோதர மொழிக்காரன் வெளிநாடு போறான் என்று!

எங்கு போனாலும் சிலர் குணம் மாற்ற முடியாது. நாட்டைவிட்டு வந்தும் இனவாதம் கக்கும் சாக்கடை அரசியல் போல இவனைக்கொல்ல வேண்டும் மச்சான் என்றான். சுதன்  பட்டதாரி இவன் வார்த்தை என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. கொழும்பில் சொகுசாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு சிங்கள மாணவர்களுடன் ஒன்றாக எல்லாக் கூத்தும் கூட்டணி போல ஒன்றாக இருந்து பாராமன்றத்தில் செயல்பட்டு விட்டு வெளியில் வந்து இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லை என்று அறிக்கைவிடுவது போலத்தான் சுதன் நாமல் மீது குற்றம்சாட்டினான். தாய்லாந்தில் வந்து இப்படி எங்களையும் காட்டிக்கொடுக்கப் போறான். இவனால் நாம் போகவேண்டிய ஐரோப்பா பயணம் பாதியில் நிற்கப்போகுது போல ராஜாவுடன் போய்ச் தண்ணியடிச்சிட்டு ஏன் தேவையில்லாத வேலை சிங்களவனுக்கு மூளையில்லை என்று பேசியது நாமலுக்கு புரிந்தது.

இதனால் அவன் வலியில் இருந்தவனை சீண்டியது ஒன்றாக வந்தவர்களுக்குள் பிரிவினை குழுவாக இயங்கத் தொடங்கிவிட்டது. பின் வாக்கு அரசியலுக்காக பிரிந்து நிற்கும் சில அரச சார்பற்ற குழுக்கள் போலத்தான் சுதன் நிதானம் தவறியிருந்தான். வெட்டுவான் சிங்களவன் சுடுவான் தமிழன் என்று சொல்லிய சகோதர மொழி பேசுவோர் யாரும் போகாத வவுனியாவிற்கு விற்பனைப் பிரதிதியாக போறியா என்று கொழும்பில் தனியார்துறை மேல் அதிகாரி கேட்ட போது என்னால் முடியும் என்று வந்த என் நண்பன் ராகுல் போல இல்லை சுதன். ராகுல் மதவாதம் பேசமாட்டான். இனவாதம் வேண்டாம் என்பான். எங்களுடன் சோபபானம் அருந்தும்போது.!!

அடிபட்டதில் பல்லுவலி ஒரு புறம் வாய் வேற பிஞ்ச மோதகம் போல கோணிக்கிடக்கும் நாமலுக்கு பணடோல் வாங்கிக் கொடுக்கவோ, சோமபானம் வாங்கிக்கொடுத்து அவன் வலியைக் குறைப்பம் என்று மனித நேயம் இல்லாமல் தன் பயணம் தடைப்பட இந்த சிங்களவன் காரணமாகப் போறான் என்று சுதன் பேசிய சகோதரமொழி கேட்ட எனக்கே கோபம்.

 நல்ல கருக்குமட்டையால் சாத்தணும் போல இருந்தது. மூன்றாம் தரவார்த்தைகள் நானும். ஜீவனும் ,தொழிலில் பேசுவதுக்கே கூச்சப்படுவோம். ஏன் ராகுல் கூட விரும்ப மாட்டான்.

 ஆனால் பட்டதாரி இவன் என்று எங்களிடம் சொல்லியவன் இப்படிப் பேசியது ஒருவேளை இவன் குதிரை ஓடித்தான் பல்கலைக்கழகம் நுழைந்தானோ !சட்டக்கல்லூரிக்கு ஆள்மாறட்டம் செய்த முதல்குடிமகன் வாரிசுபோலவோ! நாமலுக்கு கொஞ்சம் நாவடக்கம் கற்றுக்கொள்ள இந்த வலியும் அதுக்கு நான் வாங்கிக்கொடுத்த பனடோலும் உதவியது.

பயணத்தில் ஒரே நாட்டுக் குடிமக்களாகத்தான் போகின்றோம். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இடையில் யாரோடும் வீண் மனஸ்தாபம் வேண்டாம். இது நம்நாடு இல்லை ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பிகளாக இருப்போம். ஐரோப்பா போனால் நீயாரோ, நான் யாரோ ஓட்டு வாங்கிக்கொண்டு கட்சிமாறிய மிலிந்த மொறகொட போலத்தான் மச்சான் என்றதில் அவனும் கொஞ்சம் சிரித்தது நட்புக்கு இசைந்து.

பயணங்களில் ஏற்பட்ட காலதாமம் மீண்டும் வந்த ராஜா நாமலையும் சுதனையும் கூட்டிக்கொண்டு போனான். மலேசியாவுக்கு .

வந்தவர்கள் போய்க்கொண்டு இருக்க நாங்கள் ஆறுபேர் மட்டும் யாராவது ஓட்டி வருவார்கள் குமார் அனுப்பினால் என்று நம்பிக்கையில் விடுதியில் காத்திருந்தோம். இடையிடையில் அழைப்பில் வரும் குமார் ராஜா தனக்கு துரோகம் செய்துவிட்டான். அவன் இனி வரமாட்டான். நான் வேற ஒருவரை ஒழுங்குப் பண்ணுகின்றேன் என்றுவிட்டு இறுதியாக அழைப்பில் வந்த போது விடுதியில் இருந்த ஒவ்வொருத்தரின் ஐரோப்பிய முகவர் விபரத்தை குறிப்பு எடுத்துக்கொண்டான். 

காலம் எப்போதும் பெறுமதியானது. தாய்லாந்து தேசத்தில் இருக்கும் நாட்கள் நீண்டு சென்றது 2 மாதம் சாப்பாடும் தூக்கமும் தொலைக்காட்சியும் மட்டுமே புலம்பெயர வெளிக்கிட்ட பயணம் முடிவில்லாத தொடரைபோல நீண்டது!

அக்கரையான மலேசியா போன யாரும் அழைப்பில் வரவில்லை. ஜீவன் இப்படி இருக்க மாட்டானே எந்த ஊர் போனாலும் ஒரு அழைப்பு எடுக்கும் நண்பன் நிலை என்னாச்சு? புதுபொண்டாடியை கண்ட மயக்கத்தில் இருக்கும் கலியாணமாப்பிள்ளை போல ஆகிவிட்டான? மலேசியா போனதும்!

// ஓட்டி வருவான் ஐரோப்பா போவோம் என்ற  நிலையில் இப்படியோ  பாடல் இருந்து இருக்கும் ....

தொடரும்.....

18 comments :

சுதா SJ said...

நாமலுக்கு கொஞ்சம் நாவடக்கம் கற்றுக்கொள்ள இந்த வலியும் அதுக்கு நான் வாங்கிக்கொடுத்த பனடோலும் உதவியது.<<<<

ஆஹா... இதில் ஏதும் உள் குத்து இல்லையே :))))

ச்சும்மா பாஸ் கோவிச்சுக்காதீங்க :)))

சுதா SJ said...

இப்போத்தானே வந்தேன் ரெண்டு பகுதிதான் படித்தேன் படித்துக்கொண்டு இருக்கேன் சோ விமர்சிக்க முடியல்ல :((

போகட்டும் போகட்டும் பின்னாலேயே ராகுலையும் ஜீவனையும் படித்து புரிந்துகொண்ட விமர்சனத்துக்கு வாறோம்....

எங்க தங்கச்சி அக்காச்சி அப்பா ரெவரி அண்ணா ஒருத்தரையும் இன்னும் காணோம் , இனித்தான் வருவாங்களோ :)))

எனக்கு இன்றைக்கு வேலை லீவாலநான் முந்திட்டேன் :))))

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,

ஆள் அரவமற்று
வெளியிடத்தில்
அனுபவிக்கும்
இன்னல்களை
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ...
மூன்றாம் தர வார்த்தைகள்
பயன்பாடு நம் தரத்தைக் குறைக்கும்
என்பதில் எனக்கும் உடன்பாடே ...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!அடங்கா வலி தெரிகிறது.அடங்கும்,அடங்க வேண்டும்!!!!!!!!!!

Anonymous said...

அண்ணா எப்படி இருக்கீங்க ....அண்ணி எப்படி சுகம் ...


ரொம்ப நாள் ஆகிடுச்சி அண்ணா உருகும் பிரெஞ்சு காதலி படிச்சி ....மீண்டும் தொடர்வம் பழைய மாறியே .

Angel said...

மலையகத்தில் முகம் தொலைத்தவன் ஒரு விதம் என்றால் இது ..உருகும் பிரெஞ்சுக்காதலி மற்றொரு விதம் ..மிக அழகிய எழுத்து நடை நேசன்
தொடருங்கள் ..தொடர்கிறேன் ..

முற்றும் அறிந்த அதிரா said...

பிரெஞ்சுக்கதலியும்.. பிரான்ஸ்சைப்போல அழகாக நகருது.. தொடருங்கோ... ஏன் எழுத்துக்களைச் சின்னனாக்கிட்டீங்க?

செங்கோவி said...

என்ன ஆச்சு ஜீவனுக்கு?

தனிமரம் said...

நாமலுக்கு கொஞ்சம் நாவடக்கம் கற்றுக்கொள்ள இந்த வலியும் அதுக்கு நான் வாங்கிக்கொடுத்த பனடோலும் உதவியது.<<<<

ஆஹா... இதில் ஏதும் உள் குத்து இல்லையே :))))

ச்சும்மா பாஸ் கோவிச்சுக்காதீங்க :)) வாங்க துசி ஒரு பால்க்கோப்பி குடியுங்க முதலில்!ஹீ கோபம் வராது !

தனிமரம் said...

இப்போத்தானே வந்தேன் ரெண்டு பகுதிதான் படித்தேன் படித்துக்கொண்டு இருக்கேன் சோ விமர்சிக்க முடியல்ல :((

போகட்டும் போகட்டும் பின்னாலேயே ராகுலையும் ஜீவனையும் படித்து புரிந்துகொண்ட விமர்சனத்துக்கு வாறோம்....//ம்ம் வாங்க தனிமரம் காத்து இருக்கும்!

தனிமரம் said...

எங்க தங்கச்சி அக்காச்சி அப்பா ரெவரி அண்ணா ஒருத்தரையும் இன்னும் காணோம் , இனித்தான் வருவாங்களோ :)))

எனக்கு இன்றைக்கு வேலை லீவாலநான் முந்திட்டேன் :))))

16 September 2012 13:17 // எல்லாரும் நேரம் இருக்கும் போது வருவார்கள் துசி!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் சகோதரர் நேசன்,

ஆள் அரவமற்று
வெளியிடத்தில்
அனுபவிக்கும்
இன்னல்களை
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ...
மூன்றாம் தர வார்த்தைகள்
பயன்பாடு நம் தரத்தைக் குறைக்கும்
என்பதில் எனக்கும் உடன்பாடே // வணக்கம் மகி அண்ணா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!அடங்கா வலி தெரிகிறது.அடங்கும்,அடங்க வேண்டும்!!!!!!!!!!

16 September 2012 21:59 //மாலை வணக்கம் யோகா ஐயா!ம்ம் நல்லதே நடக்கட்டும் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அண்ணா எப்படி இருக்கீங்க ....அண்ணி எப்படி சுகம் ...


ரொம்ப நாள் ஆகிடுச்சி அண்ணா உருகும் பிரெஞ்சு காதலி படிச்சி ....மீண்டும் தொடர்வம் பழைய மாறியே .// அட வாத்து வாங்க வாங்க நலமா!ம்ம் எல்லாரும் சுகம்.முயல்கின்றேன் ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மலையகத்தில் முகம் தொலைத்தவன் ஒரு விதம் என்றால் இது ..உருகும் பிரெஞ்சுக்காதலி மற்றொரு விதம் ..மிக அழகிய எழுத்து நடை நேசன்
தொடருங்கள் ..தொடர்கிறேன் ..

17 September 2012 06:46 //நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பிரெஞ்சுக்கதலியும்.. பிரான்ஸ்சைப்போல அழகாக நகருது.. தொடருங்கோ... ஏன் எழுத்துக்களைச் சின்னனாக்கிட்டீங்க?

17 September 2012 09:24 // வாங்க அதிரா நலமா! இனி கவனிக்கின்ரேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்ன ஆச்சு ஜீவனுக்கு?// வருவான் செங்கோவி ஐயா அவன் மலேசியாவில் !ஹீ ரவி இன்னும் தாய்லாந்தில் கொஞ்சம் பொறுங்கள்! நன்றி செங்கோவியாரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

Seeni said...

mmm...

thodarungal....