27 September 2012

கருகிப்போன பூ!!!!

வசந்தகாலத்தில் இதயவாசல் வந்தாய்.
வாலிபத்தின் பூவாக காதல்பூ பூத்ததடி
இலையுதிர் காலத்தில் இரக்கம் இல்லாமல்
இடித்துரைத்தாய் .உன் காதல் வேசமடா
இனியும் என்னைப் பார்க்காதே எட்டிநின்று.
இதயம் தட்டிவிட்டுப் போய் !
கழுவும் குழாயில் வருவது நீரில்லை
என் கண்ணீர் காதலியே.!


கருகிப்போன பூவாக காத்திருக்கின்றேன்
கார்காலத்தில் பட்டுப் போன மரமாக.!

:::::;;;-

பின் பனிக்காலத்தில் பித்தனாகி
பின் தொடர்ந்தேன். பிடித்தவள் நீ
பின் தொடர பிரியாத வரம் கேட்டேன்.
பிணம் விழும் தேசத்தில்
பிறந்தவன் நீ .
பிடிக்கவில்லை,
பிரியம் இல்லை .என்றவள்!
பிரிந்த பின் உருகுவது காதலா?


பிரியம் வந்ததா பிரெஞ்சுக்காரியே?
பிழைத்துவிட்டான் பிடிவாதக்காரன்!
///
டிஸ்கி---- யாவும் கற்பனையே!!!!

18 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

'பி'ரிய வரிகள்... அருமை...

அருணா செல்வம் said...

கற்பனையா...? நம்புகிறேன் தனிமரம்..

Angel said...

கழுவும் குழாயில் வருவது நீரில்லை
என் கண்ணீர் காதலியே.!//

உருகி உருகி எழுதினாற்போல் தெரிகிறதே !!!!

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?கவி வரிகள் அருமை!யாரவள்?ஹ!ஹ!ஹா!!!

ஹேமா said...

என்னைச் சொல்லிப்போட்டு இப்ப நீங்களும் அழுவாச்சிக் கவிதை எழுதுறீங்களோ நேசன்....ஆனால் உணர்வோட நல்லாயிருக்கு !

தனிமரம் said...

'பி'ரிய வரிகள்... அருமை...

27 September 2012 09:36 
//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கற்பனையா...? நம்புகிறேன் தனிமரம்..

27 September 2012 10:00 
//நன்றி அருணா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

கழுவும் குழாயில் வருவது நீரில்லை
என் கண்ணீர் காதலியே.!//

உருகி உருகி எழுதினாற்போல் தெரிகிறதே !!!!

27 September 2012 10:18 
//ஹீ ஏன் அஞ்சலின் அக்காள் கொலவெறி  உருகும் அளவுக்கு தனிமரம் அனுபவம் இல்லை:))) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?கவி வரிகள் அருமை!யாரவள்?ஹ!ஹ!ஹா!!!

27 September 2012 11:13 
//இரவு வணக்கம் யோகா ஐயா நான் நலம் கொஞ்சம் வேலைப்பளு அதிகம்! நன்றி பாராட்டுக்கு ! கருக்கு மட்டை வேண்டாம்.ஹீஈஈஈஈஈ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்னைச் சொல்லிப்போட்டு இப்ப நீங்களும் அழுவாச்சிக் கவிதை எழுதுறீங்களோ நேசன்....ஆனால் உணர்வோட நல்லாயிருக்கு !

27 September 2012 11:45 
//வாங்க ஹேமா இது இன்று நண்பனைச் சந்தித்தபின்  வந்த நிலையில்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

நெற்கொழுதாசன் said...

கலக்குறிங்க பாஸ் வாழ்த்துக்கள் உணர்வுகளை மையாக்கி தொட்டு எழுதி இருக்கிறிங்க .நன்று

K.s.s.Rajh said...

என்ன பாஸ் சோகம் இழையோடுகின்றது

Anonymous said...

அனுபவகவிதை போல...

ஆத்மா said...

அழகு..பி.. சொற்றொடர் சும்மா கலகலன்னு கலக்குது...

தனிமரம் said...

கலக்குறிங்க பாஸ் வாழ்த்துக்கள் உணர்வுகளை மையாக்கி தொட்டு எழுதி இருக்கிறிங்க .நன்று//நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

என்ன பாஸ் சோகம் இழையோடுகின்றது//ம்ம் என்ன செய்ய ராச்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அனுபவகவிதை போல.../ஏன்ன்ன்ன்ன்ன்ன் மொக்கைராசு மாமா இந்த கொலவெறி!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

அழகு..பி.. சொற்றொடர் சும்மா கலகலன்னு கலக்குது...

28 September 2012 09:31//நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துக்கும்!