22 September 2016

யாசித்தோருக்கு நன்றிகள்.

வலையுறவுகள் எல்லோரும் நலம் தானே? சிறியதொடர் எழுதும் ஆசையில் தனிமரமும் யாசிக்கும் ஏதிலி என்ற தொடரை இனிதே உங்களுடன் பகிர்ந்தது ஆனந்தம் .மகிழ்ச்சி என்பேன் !

நீட்டி எழுத நினைத்தாலும் இதுவரை எழுதியதே போதும்   என்ற அசரீரி குரல்போல நட்பின் குரலுக்கும் அணைகட்டவேண்டும் அல்லவா? காவிரிப்போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் நெஞ்சங்களை நினைக்கும் போது மனம் துயரம்கொள்கின்றது!

 வாழ்வியலில் எதிர்பார்ப்புகள் பொய்யாகும் நிலையில் எப்படி முடிவு எடுப்பது என்ற திண்டாட்டம் பற்றி என் நட்பு தனிமையில் பேசியதை கொஞ்சம் பாணுடன் கலந்த சீனிபோல பாடல்களும் ,கவிதையும் கலந்து கதையாக்கி ஏதோ சொல்லமுயன்று இருக்கின்றேன்)))


அது உங்கள் பார்வையில் எப்படி இருக்கு என்பதை இனி நீங்கள் தான் விமர்சிக்கவேண்டும்.

தொடருக்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்வது என்கடமை .

அந்தவகையில் தொடர்ந்து ஆதரவு தந்த கரந்தைஜெயக்குமார் ஐயாவுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் பல. சலிப்பில்லாது வருகை தந்து  தொடர் எழுதத்தூண்டுயவர்.

                                        (உங்கள் பார்வையில் இந்த தொடர் பற்றி என்றாவது ஒரு கருத்துரை உங்கள் தளத்தில் பதிவீர்கள் என்ற நம்பிக்கை யுண்டு! அன்று நான் வலையில் இருப்பேனோ என்று அறியேன்!)



இடையிடையே வந்தாலும் பாராட்டிவர்களில் யாழ்புத்தன்,தில்லையகத்தார் துளசிதரன்சார்,மூங்கில்க்காற்று முரளிதரன் ஸார்,கில்லர்ஜீ,வலிப்போக்கன்,தளிர்சுரேஷ்,யாழ்பாவணன் ,பகவான் ஜீ,ஆத்மா, நாஞ்சில்மனோ,ரூபன் ,மற்றும் முகநூல்க்குழுமங்களில் லைக்கிட்டவர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அவசரத்தில் யாரையாவது மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்கவும்.

கருத்திட நினைத்தாலும் உங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை தனிமரம் அதனால் தான் பின்னூட்டம் இடவில்லை என்று முகநூலில் உள்பெட்டியில் உரைத்தவர்களுக்கும் நன்றிகள்.

மீண்டும் ஒரு தொடர் எழுதும் நோக்கம் இல்லை சிலகாலங்களுக்கு)))) என் அம்மா, என் அக்கா. என் மனைவி, என் பதிவுலக நட்புக்கு இனி எழுத்துப்பிழை திருத்த கொடுத்த அவசரநெருக்கடிக்கு இனி விடுதலை!




 இனி தனிப்பதிவுகளுடன் சங்கமிப்போம்.


சினேஹா பாடலுடன்  நன்றி சொல்ல ஆசை என்றாலும்



 அடிக்கடி யார் அந்த சினேஹா ?,என்ற முகநூல்/வலை விசாரணைக்கு முடிவு கட்டி!எவள் அவ[[[தனிமரம் இன்னும் தனிமரம் தான்[[[


 இனியும் இந்த குத்து இன்னும் பிடிக்கும் நீங்களும் ரசிக்க[[[




7 comments :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எழுத ஊக்குவிக்கும் நண்பர்களைப் பாராட்டும் முறை நன்று. வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம்

Yarlpavanan said...

எனக்கு
தனது தளத்துக்குக் கூட
வர நேரமில்லாத போது
இடையிடையே
தங்கள் தளத்திற்கு வருவேன்...
நானும்
தங்கள் வாசகர் தான்...
தங்கள் தொடர்கள்
தொடர வேண்டும்...
"யாசிக்கும் ஏதிலி" தொடரை
மின்நூலாக்கி
வெளியிட்டு உதவுகிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

ஏன் தனிமரம் யாசிக்கும் ஏதிலிக்கு விடை கொடுக்கின்றீர்கள்? அதைத் தொடர்ந்து முடித்திருக்கலாமே...நாங்கள் இடையில் வேலைப்பளுவில் சிக்கியதால் வர முடியாமல் போனது...தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். அழகான பதிவு நன்றி சொல்லும் பதிவு.

ஹும் சினேகா இல்லாதது வெறுமையாக இருக்கிறதுதான்!!!!!

தொடருங்கள் தொடர்வோம்..தனிமரம்...நேசன்

வலிப்போக்கன் said...

எல்லோருக்கும் ஒரு தடங்கள் இருக்கிறது.. அந்தத் தடங்களுடன் முட்டி மோதி திரும்பவும் எழுதி வாருங்கள் நண்பரே........

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் நண்பரே! சுற்றத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்தான்! நிதானமாக வாருங்கள்! காத்திருக்கிறோம்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஐந்து ஆண்டுகளாக பதிவுகள் உங்களை நான் அறிவேன்.உங்கள் பதிவுகள் உணர்வுகளின் கலவையாக இருப்பது சிறப்பு.மெல்லிய சோகம், நகைச்சுவை கலந்து சமூக சூழலுக்கு ஏற்ப எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நானும் எழுதும் பதிவுகளின் இடைவெளியும் அதிகமாக்விட்டது, அவ்வப்போது நிச்சயம் வருவேன். தொடர்ந்து எழுதுங்கள்