07 September 2016

யாசிக்கும் --- ஏ--தி--லி-----------------முடிவு!

முன்னம் இங்கே யாசிக்க-http://www.thanimaram.org/2016/08/17.html


தேர்ந்த முடிவு என்பது சிந்தித்து எடுக்க வேண்டிய அரசியல்பேரவை போல! காலம் கடத்திக் கொண்டே ஆட்சியை கொண்டு செல்லும் நாடகமாக இருக்கக்கூடாது !இதோ தீர்வு என்ற நல்லாட்சி இதுவரை ஒரு புல்லைக்கூட சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க சாமானிய சிறைக்கைதிகளைக்கூட  பொது மன்னிப்பில் விடுதலை செய்யவில்லை!

 எத்தனை போராட்டம் என்று போராடியும் என்ன தீர்வு கிடைத்தது ?


 அதுபோலத்தான்  என் காதலுக்கும் ஒரு முடிவுரையை மாயாவை கரம் பற்றினேன் ! யாழினி !!



உன் தந்தையும் அவ்வாறு நடக்க ஒரு காரணியானார்! ஆன்மீக தேடல் எல்லாம் பொதுவில் லைக் வேண்டி பகிரும் முகநூல் செயல் போல அல்ல!! நீயோ எல்லாவற்றையும் அறிந்தும்! போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாத ஐநா போல இருந்துவிட்டு காலம் கடந்து அறிக்கைப்போர் விடுவது போலத்தான் இப்போது என்னை நேசித்ததாக சொல்வதும்!


 ஆனாலும் உன் நினைவுகள் என் இதய வானில்  எங்காவது இருக்கும் என்றும்!!

 மறந்து போகாது.

 ஆனாலும் நான் மாயாவுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டேன்! காரணம் என்னைப்புரிந்தவள் .


எங்கும் குடும்பத்தலைவன்   என்ற மகுடம் சூட்ட முத்துக்கள் மூன்றுபோல மூன்று வாரிசுகளுடன் இதோ சிரித்தபடி  சிந்துபாடுகின்றேன்!




 .சீக்கரம் உனக்கும் ஒருவன் கிடைக்க வேண்டும் !பாரிசில்  வாழுபவர்களிடம் காசுமரம் இல்லை என்று நீ வைப்பரில் தாய்தேசத்தில் இருப்போருக்கு நவீன வரவான செல்பியுடன் ஆடம்பரச் செய்தி சொல்லலாம் .

வேற நாட்டில் கோடியில் புரலும் வியாபாரிகள் யாராவது வரக்கூடும் உன் அழகை ரசித்து! சினிமா நடிகைக்கு வாழ்வு கொடுக்கும் தொழில் அதிபர் போல ஆனால் காலம் எல்லாம் கடைசிவரை உன்னோடு யாராவது வரவேண்டும் என்று இந்த அகதியும் யாசிக்கின்றேன் !


நான் வணங்கும் கடவுளிடம்!!!

  ஏதிலியும் யாசிப்பு என்றும் தொடரும் யாழினி.அடுத்த ரயில் உன் வீட்டுப்பக்கம் ஊடாக செல்ல இதோ தயாராக காடினோட்டில் இருக்குது. ஏறிக்கொள் வேற என்ன,,? விடுமுறை இனிதே முடிய வாழ்த்துக்கள் . எப்போதும் என்ன உதவி வேண்டும் என்றாலும் தயக்கம் இன்றிக்கேள் ,,?முடிந்தால் நிச்சயம் செய்வேன்!


அடுத்த வாரம் இந்தியா செல்கின்றேன் யாத்திரைக்கு.


 எல்லாருக்கும் நல்லது நடக்க பிரார்த்தனை செய் யாதவன்! இதைத்தான் என்னால் இப்போது உன்னிடம் நான் கேட்கும் வரம்!

 நான் போய்வாரேன் மீண்டும் சந்திக்கும் போது உன் நட்பு தனிமரத்தை தவிர்த்துக்கொள். நமக்கு பிடிக்காதவர்களிடம் நாம் தான் ஒதுங்கிச்செல்ல வேண்டும்.

 இல்லை யாழினி இதில் எனக்கு உடன்பாடு இலை.


 அவனை நீ தவறாகபுரிந்து கொண்டாய் ஒரு நாள் நீ அவனை அறிவாய்! சரி என் நண்பன் காத்து இருப்பான் ரயில் வெளிக்கிடப்போகுது வீடு சென்றதும் சேர்ந்துவிட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பு.


 உன் பாட்டிக்கு நான் என்றும்  நம்பிக்கையான கடமைவீரன் இந்தப் பேரன்.


 பாசம் பொய்யல்ல நேசம்நிலையானது !!ஏதிலி என்றாலும் எனக்கும் இதயம் இருக்கும் தானே?


உன் சிரிப்பு ஒன்றே போதும் யாதவன்!


தவறிய பொருட்கள் எல்லாம் மீண்டும் கிடைப்பதில்லை!! அதுபோலத்தான் சில அன்பும்!நான் போய்வாரன் யாதவன் உனக்கு வேலைக்கு போகும் அவசரம் நீ போய்விடு !


 யாதவன் போகும் பாதையை நோட்டமிட்டவள் செவிகளில் ரயில் புறப்படும் ஓசை ஒலித்தது. மனதில் தோன்றிய வலியின் உட்பொருளாகக்கூட இருக்கலாம் அந்த ஒலி!!!! யாசிக்கும் ஏதிலியின் மனதை புரியாத ஒலி இனி ஒலிக்காது  யாழினி காதில் செருவிக்கொண்டால் ஹியர்போனை!



                               முற்றும்!

    யாவும் கற்பனை இது!!!!!

1 comment :

கரந்தை ஜெயக்குமார் said...

பாசம் பொய்யல்ல நேசம்நிலையானது !!
உண்மை நண்பரே
உண்மை