19 May 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்---4

முன்னர் விம்மல் இங்கே-http://www.thanimaram.com/2017/04/3.html?m=1




-----------------------------


இனவாத நாட்டில் இது வெள்ளைவான் கலாச்சாரம்  என்று அச்சம் கொள்வோருக்கும் கூட  ,மதவாத நாதாரிகள் அன்று ஆடிய மகுடி சிங்கலே கோஷம் போலத்தான்!தொடரும் இனவாத சீண்டல்கள்

 இன்றும்  மாண்புமிகு  சிறுபாண்மை அமைச்சரிடம் கூட  இது சிங்கள பூமி என்று தெரியாதா?

 நீ கூட தகுதியில்லாத துறையில் அமர்ந்து இருக்கின்றாய் என்று அடாவடித்தனம் காட்டுவதுதான் இன்றைய  நல்லாட்சியின் மேலாதிக்க அரசியல் பற்றி எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை


.


தம் அரசியல் தேவைக்காக வடக்கே துப்பாக்கிச்சூட்டு விளையாட்டை தொடங்கியிருக்கும் புதிய  இனவாத செயல்த்திட்டத்தின் லாவகமான செயல்பாடுகள்  எல்லாம்  அங்கங்கே புதிதாக உருவாகும் புத்தவிகாரைகள் போல நல்லாட்சியின் மென்வலு கோஷ நடிப்பை சர்வததேசம் நன்கு புரிந்துகொள்வாகளா ?








இனவாதத்துக்கு ஓட்டுப்போடும் கூட்டங்கள் ,இனவாத அரசியல் தூண்டும் விஷமிகள் வாழும் பூமியில்  தமிழர் விடிவு நிச்சயம் குதிரைக்கொம்பு போன்றது யாழவன் சார்!








இது போலத்தான் நம் உணர்வை தூண்டி இதோ மீண்டும் தாகம் கொண்டு எழுவோம் !அதுக்கு உங்களின் பங்களிப்பு  அவசியம் என்று உண்டியல் குலுக்குவது போல அரசியல்வாதிகளின் புலம்பெயர் வருகையும் ,இதனை விளம்பரம் செய்து நிதி திரட்டும் ஊடகங்களின் காற்றுள்ள போதே தூற்றும் செயல்களும்   இதன் மூலம்  கிடைத்த/கிடைக்கும்  நிதிகள் தாயகச் சொந்தங்களுக்கு உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு இயற்கையின் கார்கால மழை  போல ஏழைக்கும் ,பணக்காரனுக்கும்  பொதுவாக பெய்வது போல வடக்கு கிழக்கு என்று  பிரதேசவாதம் பேசாது எங்கும்   நீக்கமற போய்ச் சேர்ந்தால் ஏன் பண்நாட்டு நிதியத்திடம் கையேந்துகின்ற இலங்கை ஆட்சி போல வீதியில் நாம் போராளிகளின்  வாழ்வாதரக் கையேந்தல்  ஒருபுறம் என்றால்!

தொலைநோக்கு  திட்டமிடாத தொடர்மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்வது போல நம் வேங்கைகளை ஏன் விபச்சாரம் என்ற படுகுழியில் தள்ளிவிடுவது ?

இது எல்லாம் சமூக தளத்தில் செய்தியாக  படிக்கும் நம்  அன்றாட இயல்பு நிலையை யார் மாற்றுவார்கள் ?என்று அன்று கேட்டவன் கமலேஸ்  !

இன்றும் பொறுந்துகின்றது  இலங்கை நாட்டை நினைக்கும் நேரத்தில்  !

அதுமட்டுமா ?

உன் விதிவிட விசா அனுமதி என்ன நிலையில் இருக்கு ?

என்றபோது  !

ஏன் மாத்தயா ?உங்க நட்புடம் சொல்லி அவர் இன்னொரு உருகும் பிரெஞ்சுக்காதலி பாகம் இரண்டு  என இன்னும் வராத கறுப்புரோஜா   ஆபாவணனன் படம் போல  ஒரு எதிர்பார்ப்பை  உங்கள் முகநூல் நட்புக்களிடம் சொல்லும்  உங்க நண்பனின் வித்தை எல்லாம் நான் அறிவேன் !


சிரித்த முகத்துடன் சினேஹா படத்துடன் ஜொல்லுவிடும் உங்க பிரியமான நட்பையும் சேர்த்தே உங்களைப்போலவே நானும் முகநூல் முதல் டிவிட்டர் வரை நட்புக்களுடன்  நானும் பயணிக்கின்றேன்.!



 முன்னர் விற்பினைப்பிரதிநிதியாக நீங்களும் அவரும் பில்போட்டுவிட்டுப்போகும்  அன்நாளைய தொழில் போல எந்தக்கடையில் எந்த நங்களைளிடம் ஜொல்லுவிட்டுக்கொண்டு இருக்கின்றானோ வெட்டிப்பயல் என்று உள்ளத்தில் திட்டும் கோலயா போல )))


நீங்கள் தான் அதிகம் என்நிலைத்தகவல் பக்கம் வருவதில்லை . மலையகம் பற்றி எழுதும் புதியவர்களின்  சிறந்த தேடலுக்கு லைக்கு இடாத  அவசர குடுகுடுப்பைக்காரர்  போல   என்றவன்  கமலேஸ் அன்று.!





இன்று என்ன ஆனான் ?ஏன் அந்த அழைப்பினை உள்வாங்கினேன் என்ற சிந்தனையில் யாழவன் பயணித்துக்கொண்டு இருக்கும் ரயிலில் இருந்த சக நம்நாட்டவரின் கைபேசியில் ஒலித்த பாடல் இதுவோ ?




தொடரும்!




 கோலயா- சிங்களமொழியில்  ! தமிழிலில் எடுபிடி போல))

5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல் சிந்தனையில்...

Angel said...

அரசியல்வாதிகள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் இருக்காங்க ..மக்கள் தான் பாவம் ..
தொடர்கிறேன்

முற்றும் அறிந்த அதிரா said...

அப்பப்ப அரசியலுக்குள்ளும் குதிச்சிடுறீங்க நேசன்... இருப்பினும் கலக்கலான எழுத்து நடை.. அருமையான பாடல்.

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கிறோம்...

அதிரா சகோ/அதிரா அவர் அப்பப இல்ல எப்பவுமே தொடர் எழுதினால் அதில் அரசியல் இல்லாமல் இருக்காது...ஹஹஹ்ஹ்