04 May 2017

காற்றில் வந்த கவிதைகள் --14

முன்னர் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.com/2017/04/13.html


 நன்றிகள் புரட்சி வானொலிக்கு.


------------------------------------------------------------------------------------------------------------------------
சிரித்துப்பேசி  சிறப்பு விருந்து,
சில்லறைத்தனமான
சீர்வரிசை போல சலுகை எல்லாம்
சிந்தி நீர் போல வீசியே!
சிரமதாணம் என்ற வேஷமிட்ட
சட்டை அணியும்
சிலோன் அதிபர் போல
சிரிக்க வைக்காதே
சில்லென்ற காதலில்!///

////
--/உதிரும் பூப்போல என்னையும் நீ
உதறிப்போனாலும் உலர்ந்த வாசம் வீசும்
உன்மேல் நான் கொண்ட காதல்
உலகத்தில் வாழும் காலத்தில்
உன்னை நேசித்தவாரே!


----------------------------------------------

-அவளைக்கடந்த அந்த ஒரு நிமிடத்தில்
அகதி தொலைத்தது இதயத்தை மட்டுமல்ல
அடுத்த ஊருக்கு அணிவகுக்கும்
அந்த கடைசி ரயிலையும் தான்!
அவளுக்கு புரியுமா ?
அவனும் நேசிப்பது?
அன்னியமொழி தெரியாதவன்!
ஆசையுடன் காதலில்!///


--/---------------------------------------------------


கைக்கூப்பி கடவுளைத்தொழும்
கையறு நிலை மனிதன் போல
கையேந்தினேன் உன்னிடம்!
கைகேயின் வரம் போல நீயோ
கைதி போல என் காதலை
கைவிட்டுச்சொன்றாயே
கையசைத்து!
கைக்குடையுடன் பைத்தியம் போல
கைதடியில் இவன் வாசம்!




யாவும் கற்பனைகள்......

4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நண்பரே

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா ஹா ஹா அழகா சொல்லிட்டு முடிவில் "யாவும் கற்பனை" எனப் பொய் சொல்லி முடிச்சிட்டீங்க நேசன்.

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ ச்சே கற்பனையா!! ம்ம்ம் உண்மையா இல்லை பொய்யா? அதாவது கற்பனை என்றது!!! ஆனால் ரொம்ப நல்லா எழுதறீங்க ஓரேழுத்தை வைத்தே!!

குதிரைப்படம் அழகோ அழகு!!!