29 May 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்..-5

அரசியல்வாதிகளின்  பிள்ளைகள்  தேர்தலின் போது அரசியலுக்கு இழுத்து வரப்படுவதும் ,
சினிமா நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு கொண்டு வரப்படுவதும் சாதாரண ஒரு நிகழ்வு .என்றாலும் விரும்பமும் ஆர்வமும் தான் அவர்களை உரிய இடத்துக்கு கொண்டு செல்லும் !

திணிக்கப்படும் எதுவும் நின்று நிலையாது  இதுதான் யாதார்த்தம்.


 ஆனால் எங்கட ஆர்வம் ,விருப்பம் எதையும் தெரிந்து கொள்ளாமலே  இனி நீ தான் தொடர்ந்து  எங்கள் பாரம்பரிய வியாபாரத்தை  நடத்தனும் என்று மகன்களிடம் கெஞ்சும் தந்தைகளின் நிலையும் ,தாய்மாமாக்களின் கையேந்தலும் ஒன்றும் வரமல்ல சாபம் .

எமக்கு எதில் சிறப்புத்தேர்ச்சி  இருக்கு என்பதை ஏன் புரிய மறுக்கின்றார்களோ ?

நீ தான் இனி அடுத்த முதலாளி என்று பாசவலை வீசும் அங்குசம் என்ன வெற்றிக்கொடி கட்டு படத்தில் பார்த்தீபனுக்கு வங்கி லோன் கேட்க வடிவேல் கையொப்பம் இடும் போது வடிவேல் நிலை ஒரு பிலாஸ்பேக் பூமாலை போட்ட ஆடுக்கனவு போலவா ?

சில்லரைக்கடைவியாபாரம் என்ன ஆனந்தம் படம் போலவா இல்லை ,அங்காடித்தெரு போலவா ?அதிகாலை 5 மணிக்கு எழும்பி பின்னிரவு 1 மணி வரை தொடர்ந்து நிற்பதும், கல்லாப்பெட்டியில் மூலநோய்வரும் அளவுக்கு குந்தியிருப்பதும் தான் வாழ்க்கையா ?

இந்த சிறுதொழில் வியாபாரம்  பற்றிய அடுத்த தலைமுறையின் உணர்வுகள் எல்லாம் யாரும் விரும்பித் தேடாத ஒரு தனியுலகம்.


 உங்க நட்பு தனிமரம் கூட மென்போக்கில் தானே  எழுதினார் யாழவன் ?


அது பற்றி எல்லாம் எனக்கு கருத்துச்சொல்ல விருப்பம் இல்லை .

ஆனால் இன்று நாம் இப்படி வீதியில் அண்ணா வேலை ஏதாவது வந்தால் சொல்லுங்க என்று கையேந்தும்  நிலையில் எம்மூதாதையார்கள் யாரும் இருக்கவில்லையே ?

நாலுவகை  சுருட்டும்  ,ஒரு தட்டு வெற்றிலையும் ,ஒரு கோணி பாக்குடனும் ஒரு இடத்தில் இருந்து தொடங்கிய வியாபாரம் பின்னால் விளம்பரப்பலகைவைத்த தொடர்மாடி நவீன அங்காடி என வியாபார சாம்ராச்சியத்தையே உருவாக்கிய குறுநில மன்னர்கள் போல வாழ்ந்தவர்கள்  என்ற வரலாற்றையும் மறக்கூடாது!

என்ன இந்த இனவாத யுத்தம் வராது விட்டால் நம் கனவுகளில் நிச்சயம் ஒரு சுறுட்டுக்கடை வியாபாரமும் ஊடகஆசை போல எங்கேயும் எப்போதும் தோன்றி இருக்கலாம் தானே கமலேஸ் ?

உண்மைதான் .ஒருவேலை நாங்களும் இப்படி வெளிநாடு போய் பணத்தினை தங்கம் போல வெட்டி அள்ளனும் என்ற நவீன சிந்தனை தோன்றி இருக்காது தானே?))))


என்ன சிரிப்பு பாஸ் .

இல்லை ஒருபக்கம் இனவாதம்  வெறியில்  ஒருநாட்டு மக்களையே பிரித்தாலும்  அரசியல் சமூக நிர்வாக செயல்ச் சுதந்திரம் பற்றி நினைக்கும் போது சிரிக்கத்தோன்றியது!

இப்படித்தான்  நண்பா இங்கே வெளிநாட்டு வந்தபின் சிலர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இயற்க்கை அனர்த்த நிகழ்வை மனிதநேயத்துடன் உணராமல் !

இன்னும் இன்னும் இப்படி மக்களுக்கு வேண்டும் அன்று நம் உறவுகள் துடிக்கத் துடிக்க விட்ட கண்ணீர் சாபம் தான்  இப்படி இந்த மக்களையும் அல்லலுறவைக்கின்றது  என்ற திமிர்க்கதைகள் எல்லாம் ஒருநாளும் அப்பாவி மக்களை வாழவைக்காது !


இதைச்சொன்னால் அந்தநேரத்தில் ஊடகங்கள் ஏன் வாய்மூடிநின்றது என்கின்ற குறுக்குகேள்விக்கு என்ன பதில் சொல்வது?

" எந்த நாட்டிலும் அந்த நாட்டு அரசிக்குத்தான் ஊடகங்கள் சார்பாக செயல்ப்படும் என்ற அடிப்படை அறிவுகூடவா இல்லை "

இதில்வேறு இவங்கள் வந்தது ஊடக அடக்குமுறை உயிருக்கு அச்சுறுத்தல் என்ற அகதிக்கோரிக்கை வேண்டுதல் எல்லாம் மறந்து பேசும் மனிதத்தன்மை பற்றி என்னத்தைச்சொல்ல கமலேஸ் .

சரிடா  எனக்கு வேலைக்கு நேரமாச்சு மீண்டும் சந்திப்போம் என்று அன்று லாட்சப்பல் வீதியில்  சந்தித்தவனுக்கு  பின் என்ன நடந்தது என்ற சிந்தனையோடு ரயிலில் இருந்து  இறங்கி நிலக்கீழ் தொடரந்துக்கு பயணித்தான் !

அப்போதுதான் தொலைபேசி ரிங்டோன் சினேஹா பாடல் சில்சில் சில்லெல்லா சினுங்கியது !

இது என்னடா புஸ்பா புருஷனுக்கு வந்த சோதனை போல நேற்று ஒரு தொலைபேசி  அழைப்பை உள்வாங்கியதால் தானே இதோ இப்போதும் என் அவசர பணிக்கு இடையிலும் லாட்சப்பல் போறன் அந்த அழைப்பை ஏன் எடுத்தேன் ?

சிந்தித்தால் சில சொல்லப்படாத நாளையசெய்தி போல இன்னும் சொல்லப்படாத மலையகம் பற்றி ஏன் பேசமறுக்கின்றோம் ?

முகநூல் என்றாலும் டிவிட்டர் என்றாலும் இணைய வசதி பற்றிய தேடல்  இன்னும் போய்ச்சேராத பாரதிராஜா பட கிராமம் போல. இன்னும்  செழிப்புடன் இருக்கும் மோடி போய் வந்த மலையகம் பற்றி எல்லாம் ஏன்  பொதுவில்  பேச மறுப்பது?


தமிழ்க்கவியின் கட்டுரை பிழை என்று வடக்கில் பண்டித இலக்கியவித்தகர்கள்  திரும்ப வாங்கிய சிறப்பு நூல் பற்றி எல்லாம் பேசலாம்)))

எனக்கு என்றும் என் மனசு இளையராஜ இசைபோல என்று சொல்ல ஆசைப்பட்டு இருப்பேன் !இந்த நாதாரிக்ள் எல்லாம் இன்னும் இலங்கை சுற்றாத சிட்டுக்குருவி போல கட்டுப்பாடு கொண்ட சமூகநெறி பிறழாத உத்தமர்கள் போல நடிப்போர் ஷீகிலா படம் ஊத்தை என்று பார்த்துவிட்டு புலம்பும் எருமைமாடுகள்))) இதோ எருமைமாடு என்று சிங்களத்தில் கூட கில்மா படம்வந்தது ))).

எத்தனை பேர் பார்த்து சொல்லி இருப்பார்கள் அதில் நடித்த நடிகர் கூட சர்வதேச விருது பெற்ற விடயம் சொல்ல இங்க ஊடகத்தில் ஆர்வம் இல்லை நண்பா)))

இதோ விளம்பரத்துக்கு ஆதரவு தந்த வியாபார முகவர்  இவரின்   ஸ்தாபனம் மிகவும் பிரபல்யம்  இந்த மலையக மண்ணில்!

ஊவா பண்பலை வானொலி ஒரு சில வர்த்தக விளம்பரத்தின் பின் தொடந்தும் நேயர் பாடல் ஒலிக்கவிடும்)))http://www.radio.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=75&Itemid=84&lang=en




 இதோ பாடல் வருகின்றது)))



தொடரும்)))))

கோணி- சாக்கு!








6 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

திணிக்கப்படும் எதுவும் நின்று நிலையாது
உண்மைதான் நண்பரே

Angel said...

//அன்று நம் உறவுகள் துடிக்கத் துடிக்க விட்ட கண்ணீர் சாபம் தான் இப்படி இந்த மக்களையும் அல்லலுறவைக்கின்றது என்ற திமிர்க்கதைகள்//

இந்த விஷயத்தில் வெள்ளையர்களிடம் நம் மக்கள் பாடம் படிக்கணும் ..

நம்ம ஊரில் தான் திணித்தல் வலுக்கட்டாயமாக திணித்தல் நடக்குது .
தொடருங்கள் ..

Rajeevan Ramalingam said...

ஊவா பண்பலை இணையத்தில் இருக்கா பாஸ்?

தனிமரம் said...

இணையத்தில் இல்லை பாஸ் பண்பலையில் இப்போதும் பாடல்கள் மட்டும் ஒலிக்கின்றது ! முன்னர் போல அதன் வீரியம் இல்லை!

வலிப்போக்கன் said...

பரமபரை தொழிலாவது கையில் இருக்கிறதே பிழைப்பதற்கு..அதுகூட இல்லாதவர்கள்..எப்படி பி்ழைப்பை ஓட்டுவார்கள்...............?????

Thulasidharan V Thillaiakathu said...

திணிக்கப்படும் எதுவும் நின்று நிலையாது இதுதான் யாதார்த்தம்.// ரொம்பவே உண்மை. மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் விருப்பம் அறியாது செய்வதும் நல்லதல்லவே...

தலைப்பு சூப்பர். ஆனால் கதையில் ஏன் இடையில் அரசியல் எல்லாம் ஹஹஹஹ்ஹ்

தொடர்கிறோம்...