03 November 2015

முகம் காணும் ஆசையுடன் -33

முன்னம் காண இங்கே-http://www.thanimaram.org/2015/11/32.html.
பின்னம் இனி....


நல்லாட்சி இது என்று ஐநாவரை அமைதியாக ஆடிய கூத்தை அப்பாவி சிங்கள வாக்கு வங்கி  மக்கள் கூட்டமும் கூட !இன்று இதுவும் பழைய மொந்தையில் புதிய கள்ளு என்பதை  நாளார்ந்தம் நாளேடுகளில் நம் மாணவர்கள் மீது இட்ட வன்முறை வெறியாட்டம் பற்றி முகநூல் முதல் ஊடகம்வரை பேசும் ஆர்வத்தில் இருப்பது !


ஆட்சியின் வீழ்ச்சி பற்றிய ஒரு தெளிவு என்றாலும்! இன்னும் இனவாத சிந்தனை மாறவில்லை! இதே போலத்தான் குட்டிமணி வெலிக்கடைச்சிறையில்  கண்ணைப்பிடிங்கியதும் ;இன்றைய எதிர்கட்சிதலைவர்  முன்னோர் காலிமுகத்திடலில் வேட்டி கிழி்த்து ஓடவிட்ட வரலாறு எல்லாம் ஏனோ மறந்து போய் !காலவ்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கேட்கும் இவர்களும் ?, தான் ஈழப்போரை ஊதி அப்பாவிகளை கொன்றுவிட துணை போனவர்கள்!


  ஆனால் அதிகாரம் நம்பக்கம் என்ற போதையில்   வேட்டி கட்டியவர்கள் இன்று  அப்பாவிகள் சிறைக்கைதிகள் விடுதலை பற்றி வாய் மூடிய நிலை  ஊமைவிழிகள் போல இருட்டில் வாழும் இன விடுதலைப்பயணம்  ஒரு புறம் ,இன்னும் சந்தேக புலி என்று  காணமல் போனவர்கள். ,இறுதியுத்தத்தில் சரண் அடைந்து இன்னும்  புனர்வாழ்வு முகாம்களில் குற்றுயிருடன் வாழும் அப்பாவி கடைநிலைப்போராளிகள் சுகவாழ்வு,.  மீள்குடியேற்றம் ,சொந்த காணியை இராணுவம்  அதிகார மையம் இது என்று நாட்டாமை செய்யும் நிலை தொடர்கதையாக இருந்தாலும் !

  இது நல்லாட்சி என்று பல்தேசியத்துக்கும் ,பாரத தேசவேடதாரிகளுக்கும் செங்கோல்தூக்கும் வக்காலத்து  ஜால்ரா வாசிக்கும் அதிகாரம் கொடுத்த மக்கள்  மனநிலை பற்றி பேச நேரமில்லையாம் !பாராளமன்றத்தில் !


ஆனால் தமிழ் பாராளமன்ற புதிய உறுப்பினர்  சிங்களத்தில் உரையாற்றியது தவறு என்று வீரப்புலியாக ;கொட்டைப்புலி,  இராவா அடித்த புலி, குறுட்டுப்புலி இவர் வம்சம் அக்கரையில் இன்னும் சூறப்புலி  என்று எல்லாம் முகநூலில் கும்ம இப்ப நேரம் இல்லை  பாலன்!


 அசுரன் இலங்கை  வந்தது என்  தனிப்பட்ட தேடலில். இந்த நாட்டில் இனவாத சிந்தனை நீங்கியும். நாட்டின்  தூரநோக்கு வளர்ச்சி சிந்தனையும்  வரும் வரை.  அதனை வலியுறுத்தி மக்கள் வீதிக்கு வராத நிலை  வரையும் இந்த இலங்கை ஈழத்தேசம் நிம்மதி காணாது ! இதுதான் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் நிலை!

  மக்கள் வாக்கினை வாங்கி இரண்டு கட்சியும் ஆடு புலியாட்டம் என்று ஆடிக்கொண்டே இருப்பார்கள் .ஆனால் அப்பாவிகள் இன்னும் கண்ணீர் சிந்திக் கொண்டே ஓலம்மிட்ட வாறு அரபுலகம் என்றும் ,அவுஸ்ரேலியா என்றும் கப்பல் ஏறிக்கொண்டே இருப்பார்கள் !


அந்த துயரம் எல்லாம் தொடர்கதை ஆனால் அதை யாரும் எழுத முகநூலிலும், வலையிலும் தயார் இல்லை .இதைச்சொல்லி  பாலன் உன் காலை நிகழ்ச்சியை இரவுப்பொழுது இரவின் மடியின் போல தாலாட்ட எண்ணம் இல்லை .ஏன்னா சன்னி லியோன் கூட வரபோறா[[


ஏனா ?,

இப்ப இங்கே வா செல்லம் என்று பாட  தூண்டிக்கொண்டு இருக்கும் இன்னொரு நவீன போராட்டம் பற்றி நீ அறிவாய்.!

 ஆனால் பேசமாட்டாய்  !!


சுயநலம் அதிகம் உனக்கும் . ஆனாலும் நான்  உன்னிடம் கேட்பது நல்ல ஒரு சட்டதரணி முகவரி தா ?,அவர் மூலம் தான் இனி என் தேடல் தொடரவேண்டிய நிலையில்!


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் டிஜேவுக்கு சட்டதரணி நட்பாக இல்லை முகநூலில் கூட, ஆனாலும் தேடுவோம் சேர்! நல்ல சட்டதரணி நமக்கு நிச்சயம் கிடைப்பார்!


விரைந்து தேடுவோம்.......

 

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன் தோழர்...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! இனவாத சிந்தனை மரித்தால்தான் மாறுமோ! என்னவோ!
தொடர்கிறேன் சகோ!

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன் நண்பரே!

Thulasidharan V Thillaiakathu said...

வேதனைகள் தொடர்கின்றன.....தொடர்கின்றோம் நண்பரே!

KILLERGEE Devakottai said...


வேதனையோடு தொடர்கிறேன் நண்பா,,
தமிழ் மணம் 3

கரந்தை ஜெயக்குமார் said...

இன்று அப்பாவிகள் சிறைக்கைதிகள் விடுதலை பற்றி வாய் மூடிய நிலை

வேதனை வேதனை
தம +1