08 November 2015

முகம் காணும் ஆசையுடன் --36

முன்னம் இங்கே பார்க்கலாம்-http://www.thanimaram.org/2015/11/35.html.
நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும்மில்லை இந்த உண்மையைக் கண்டவன்  துறவி, ஞானி , தர்மதுரை படப்பாடல் போல இந்த நாட்டு அரசியலில்  உண்மையில் இங்கு இனவாதம் இல்லை என்று இன்றுவரை! பொதுவில் இத்தனை அப்பாவிகள் போராட்டம் என்று பத்திரிக்கை செய்தி! இவர்கள் அப்பாவிகள் என்ற  அமைச்சர் கூற்று, ஆணைக்குழு அறிக்கை எல்லாம் கேட்டும் இன்னும் மூடுமந்திரம் போல பொதுமன்னிப்பு கொடுக்க  கூட இந்த நாட்டு முதல்குடிமகனுக்கு  நெஞ்சலுத்தம்  அல்லது அரசியல் தைரியம் இல்லை .!


ஆனால் அடுத்த தேர்தல்  வாக்கு அரசியலும் அதனை ஏய்க்கும் வழியும் தெரியும். என்ன செய்ய இங்கு பணத்தை  வீசி எறிந்தால் பிரபல்ய நடிகையின் வருகை போல !


எதுவும் நடக்கும் !ஆனால் அதுக்கும் வழிவகை தெரிய வேண்டும் . நல்ல துறவி மறைந்த செய்தி போல இதை பொதுவில் சொல்ல நான் வெட்கி தலைகுனிய மாட்டேன்!


 இங்கு எங்கும் இனவாத முன்னெடுப்பு எப்போதும் இருந்தே வந்ததும், வருவதும் ஒன்றும் புதிதல்ல!அதுவும் இப்ப புதிய பாதை என்ற போர்வையில் பெரியண்ணாவும் ,சின்னமாமியும் போடும் அரசியல் வியாபாரம் எல்லாம் துணிந்து எழுத இங்கு ஒரு ஊடகமும் இதயசுத்தியுடன் சுதந்திரமாக இல்லை .




எல்லாம் தம் வியாபார நோக்கில் தான் வீறாப்பு இனவாத அலையில்!இன்னும் நாட்டில் ஏற்பட்ட இழப்பு  ஊடகத்தில் பார்த்தும் ,



 தப்பி வந்த பாதுகாப்பு படையின் உத்தமர்களின் ஊமைக்குரல் கேட்டும்  இன்னும் திருந்தவில்லை இந்தநாட்டு உத்தமர்கள்.இன்னும் .

இல்லை இதை பேசி இந்த நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் என்று போலி விசாரணை அழைப்பு என்ற பெயரில் கைதும், அதன் பின்னே இருக்கும் அரசியல் சித்து விளையாட்டும் சொல்லி உன்னை கலங்கட்டிக்க எனக்கும் ஆசையில்லை.

 உன் காதலியைவிடுவிக்க என்னால் ஆன உதவியை என் நட்பு மூலம் தனிப்பட்ட முயற்ச்சி ஊடாக விசாரனைக்கைதி மட்டுமே!



 இவர் மீது இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யவில்லை இதுவரை! .ஆனால் பிணை வழங்க யாரும்முன்வரவில்லை அரசியல் விளம்பரபோல தனிப்பட்ட சட்டதரணிகள் கூட கறுப்புவெள்ளை படம் போல அல்லது பிரியங்கா படம் போல வழக்கு ஏற்று நடத்த இலங்கையில்   இல்லை பணக்கார அரசியல்வாதிகள் போல  அதிரடிப்படை அம்மவாசை  போல  அரசியல்வாதிகளின் வெளிநாட்டு ஆயுத வியாபாரம் போல கோடியில் கிடைக்கும் வருமானம் போல இல்லை சிறைக்கைதிகள் விடுவிப்பு!


 ஆனால் அதிலும் கோடி கோடியாக சம்பாதித்து அவர்களை அப்பாவியாக புலம் பெய வைத்த கதை நான் அறிவேன் என்றாலும்!




பூஜாமீது  இலங்கை  சட்டரீதியாக  எந்த குற்றமும்   இல்லை என்று இதோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அறிக்கை!


 இதன் மூலம் இனி உன்  காதலியுடன் ஒன்று சேரலாம் அசுரன்!


ஆனால் ஒரு   செய்தி சொல்ல வேண்டும்!




தொடரும்.....  

3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

செய்தி அறிய மேலும் காத்திருக்கிறேன் தோழர்...

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா தேர்தல்களிலும் பணம்தான் விளையாடுகின்றது...கயவர்களின் சதிராட்டம்...தொடர்கின்றோம் அறிய..