04 November 2015

முகம் காணும் ஆசையுடன் --34

முன்னம் பார்க்க இங்கே-http://www.thanimaram.org/2015/11/33.html!

இனி வாசிக்க....

நாட்டு மக்கள் எப்போதும் இனவாதம் .மதவாதம். மொழிவாதம் பற்றிய போதையில் இருக்க வேண்டும்! சாமானிய அப்பாவிகள் தொடர் நாடகத்தில் மூழ்கி முத்துக்குளிக்க வேண்டும் ஆனால் விலைவாசி பற்றியோ ??வீதியில் நடக்கும் படுகொலை பற்றியோ?, அல்லது பாலியல் சீரழிப்பு  பற்றியோ?, சிறிய சிந்தனையும் வரக்கூடாது. என்பதை திட்டமிட்டு அரங்கேற்றும் ஆட்சி பீடங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வழியில் இப்போது போதை பாவனை    அதிகரித்து பற்றி பேச வேண்டிய முற்றும் துறந்த கூட்டங்கள்..


 இனவாத மேதாவிகள் ஏனோ இப்போது புத்தன் வழியில் பிச்சை போல சிங்கப்பூர்  தேசம் வரை  அரச செலவில் போவதன் பின்னால் இருக்கும் அரசியல் திட்டமிடல் பற்றி இங்கும் யாரும் முகநூலில் இன்று பொங்கவில்லை!


 பொங்கினால் முகநூலை முடக்க வழி இருக்கு !ஆனால் பொதுவெளியில் ஆட்சி பீடம் நீயா அவன் ;கில்லியா; தில் ஹீரோவா ; இல்லை தீனாவா?, ஆப்பிஸர் வரச்சொன்னார் ஆனால் அரவிந்தன் பட பார்த்தீபன் போல வீதியில் சுட்டுப்போட்டாலும் .




இன்னும் இனவாத கூட்டம் எந்த போலி பாஸ்போட்டில் நாட்டை விட்டுப்போனாலும், இல்லை இலங்கை  பாராளமன்றம் போனாலும் இனவாத உச்சம் இன்னும் கொக்கரிக்கும் வழியில் மக்கள் பிரதிநிதி நான் கட்சி தலைவர் என்று தென்னிலங்கையில் வீட்டுக்கு வீடு கட்சி !ஆனால் பெருண்பான்மை இனவாதம் போல தமிழர் பக்கம் மட்டும் இன்னும் ஒரே வீடு இருவாசல் என்ற பித்தலாட்டம் !எல்லாம் சித்தப்பூ செட்டப்பூ போல பெரியண்ணாவின் பித்தலாட்டம் இதை எந்த அப்பாவி ஈழத்தவன் பொதுவில் செருப்பு கொண்டு தேசிய கொள்கை வகுப்பாளருக்கு வேட்டி கட்டிய தமிழ்நாட்டு வேசப்புலி சிதம்பரத்துக்கு செருப்பு வீசியது போல  சிவசங்கர் மேனனுக்கும் வீசி எறிவார்கள்!இலங்கையில் உன் சித்து அரசியல் விளையாட்டு வேசம் நிரூபாமா ராவ் போல பலர் இந்திய நாட்டாமை மேதாவிகள் செய்த அட்டூளியம் என்றும் மறவாது !
 




 ஆனால் எம் தலைவன் தமிழிலி்ல் இஸ்லாமிய உறவுகளிடம் மன்னிப்பு கேட்ட பின்னும் ஆங்கிலம் பேசவில்லை என்று இன்னொரு தொடர் எழுத இந்து ராம் என்று மாமாக்கள் இங்கு வந்து அவர் மகனுடன் நெற்றிக்கன் படம் போல விளையாடும் கதை எல்லாம் அப்பாவி தமிழர் அறியா வண்ணம் நடக்கும் போதை விளையாட்டு இப்ப பொதுவில் தமிழர், சிங்களவர், என்று எல்லை மீறி ஆடும் அரசியல் ஆட்டம் எல்லாம் தொடரும் கதை இனி!




 இங்கு யுத்தம் இல்லை ஆனால் மக்கள் சந்தோஷத்துடன் இதோ கொழும்பில் ,யாழிலில் , மட்டக்களப்பில். வன்னியில் என்று வடிவாக படம்பிடிக்க இணைய வசதியிருக்கு என்று காட்ட தெரிந்த ஆட்சியாளருக்கு!




 வதைமுகாமில் அப்பாவி  நிர்வான நிலைசேதுகள்  பற்றியோ அல்லது மறைந்த பூலாந்தேவி போல இன்றும் இலங்கை ஆட்சியின் சிறைகள். புனர்வாழ்வு சிறப்பு முகாங்கள் .  சீர்திருத்த விசேஷட சிறைச்சாலைகளில்  நிர்வான கோல நான் கடவுள் போல இருக்கும் நம் நங்கைகள் நிலை பற்றி பொதுவில் பேச இன்னும் தயக்கம் §






கேட்டால் யாரோ ஒரு சட்டமா அதிபர் திணைக்களம் தான்   பதில் சொல்ல வேண்டும் நீதிமன்றத்தில்! ஆனால் சட்டம் படிக்காத மூத்த குடிமகன் கொலை வழக்கு விசாரிக்க மட்டும் சட்டத்தில் இடம் இல்லை என்று ஓய்யாரமாக அன்றைய தில்லான மோகனாம்பாள்  போல மறைந்து இருந்து பார்க்கும் மாயம் என்ன என்று வாக்குவாதம் செய்ய ஆசையில்லை பாலன்.


 நீ தேடித் தந்த  உன் முகநூல் நட்பு சட்டதணியுடன் நானே நேரில் பேசுகின்றேன் !.எனக்காக நீ வெற்றிக்கொடி கட்டு பட  வடிவேல் போல குடைபிடிக்கும் ஆடு நிலை போல இலங்கையில் உன் நிலை வெட்டும் பலியாடு போல வரலாறு  வேண்டாம் !நான் வென்றால் என் காதலியுடன்  டூயட் பாடுவேன் !



அதுக்கு நீ என்ன பாட்டு வானொலியில் போடுவாய்?,  உங்களுக்கு எப்போதும் பாட்டு ஒரு கொலைவெறி அசுரன்.

 முதலில் யாதார்த்த உலகு வாங்க!ஆனால் இன்னும் நீங்கள் சகோதர மொழியில் புலமைமிக்க கவி என்பதை கிளறி நோகடிக்க ஆசையில்லை.


 ஆனால் அந்த சட்டதரணியிடம் பேசும் போது என்னை அறிந்தவன் என்று சொல்லாமல் உங்க விடயத்தை பேசுங்க .

ஒரு அவசர வானொலி நேரடி நிகழ்ச்சி தொகுப்பு செய்யும் தேடலில் நான் மலையகம் போகின்றேன். அங்கும் கூட நீங்க மீண்டும் இலங்கை வந்த செய்தி சொல்ல மாட்டேன்.


 என் முகநூலிலும் கூட அதையே நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இன்று நான் போகும் ஊர் சொல்ல மாட்டேன். உங்கள் நட்பு இன்னும் உங்கள் இன்னொரு தொடர்கதை எல்லாம் பேச நேரமில்லை ஆனால் இந்தப்பாட்டு


 உங்க கற்பனைக்கு விட்டுபோறன்!



  பாட்டு கேட்ட வாரே அந்த முகவரி தேடுங்க...



 உங்க தீர்வு இன்றைய முதல்குடிமகன் போல எது இனி வரும் நாட்களில் நல்ல  தீர்வு!கிடைத்தால் என்னோடு பேசுங்க இல்லையே எப்போதும் போல உங்க  மரம் வளர வாழ்த்துக்கள் காதல் மரம் செளிக்க வாழ்த்து  என்று என் வானொலியில் எந்த பாடல் போட உங்க விரோதி தனிமரம் சினேஹா பாட்டு போட்டாள் நாளை எனக்கு தனிமெயில் வரும் உள்குத்தாக ஆனாலும் நீங்க தேட காதல் கவிதை பேச என் வானோலியில் இன்னொரு நிகழ்ச்சி செய்ய ஆசையுண்டு!





தொடர்ந்து தேடலாம்.......


விரைந்து முகம் காணலாம்[[[[[

5 comments :

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! விரைவில் முகம் காண எனக்கும் ஆசையுண்டு! சில படங்கள் பயங்கரத்தை மனிதநேயம் மறந்ததை மரித்ததை
படிக்க படிக்க வேதனையும் கோபமும் வருகிறது! பொதுவில் பேச தயங்கும் எல்லோர் மீதும்!
தொடர்கின்றேன் சகோ!

”தளிர் சுரேஷ்” said...

வேதனை நிகழ்வுகள்! தொடர்கிறேன்!

KILLERGEE Devakottai said...

மன வேதனை நண்பரே
தமிழ் மணம் 2

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் தோழர்...

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான் நண்பரே
தம +1