04 August 2016

என் கதையில் ஒரு வழி இருக்கும் !!!

பொருளாதார தேவைகளுக்காக முந்திய தலைமுறையினர் பலர் இலங்கை/ஈழம் என்று நாடோடிய கதை பல!


வியாபாரம் தொழில்வாய்ப்பு ,இன்னும் பல நிலைகளுக்காக  உள்நாட்டுக்குள் விரும்பியோ,விரும்பம்மின்றியோ இடம்பெயர்ந்தார்கள் தம் வாழ்வியலை நிலைநிறுத்தலுக்காக !




பின் வந்த தலைமுறைக்கு இனவாத யுத்தம் விரும்பம் இன்றியே !இடம்பெயர்வைக்கொடுத்து, பல ஊர்களை தாண்டிச்செல்ல வைத்ததும் நிதர்சனமான நிஜம்!


உள்நாட்டு இனவெறிச்செயல்பாடு பலரின் உயிரைக்காக்க என்று புலம்பெயர்ந்தவர்கள் கதை பல ஏக்கங்களையும் ஆறாத மனவலிகளையும் சுமந்து கொண்டு இன்றும் வாழ்பவர்கள் பலர் .!!




கோடைகால விடுமுறை என்றால்! எங்கே சுற்றுலா செல்வது என்று ,அடுத்த தலைமுறையினரின் கேள்விக்கு பதில் கொடுக்கமுடியாத நம்தலைமுறையினரின் பொருளாதார சிக்கல் ஒருபுறம் என்றால் !




இன்னும் போர்முடிந்து நல்லாட்சி இது என்ற கோஷம் மாயநதி போல இன்னும் இனவாத புலனாய்வு கைதுகளும் சிறைப்படுத்தல் சித்திரவதைகளும் தொடர்கதை  நல்லாட்சியிலும்!

இதை ஏனோ பலர்பொதுவெளிகளில் எழுதி  இப்போதைய ஆட்சியாளர்களுக்கு சங்கடம் கொடுக்க விரும்பாத நிலையை என்ன சொல்வது?



என்றாலும் விடிவு வரும் என்ற கனவுடன் பலரின் இதயவீணை இந்த பாடலாக இருக்கும்!!

.பாடல் எழுதிய கவிஞர் மாவை வரோதயன் இவ்வுலகில் இல்லாத போதிலும்!!

 இன்னும் பாடலில் வாழ்கின்றார் .


இசைமீட்டியவர் ரொக்சாமி பாடியவர் ஜோசப் ராஜேந்திரன் இந்தப்பாடல் கேட்கும் போது உங்களின் நினைவலைகள் என்ன??? பாடல்  ரசிக்க!


--------------------------------------



 நம்மவர்களின் பாடல்களை ஒரே இடத்தில் தொகுக்கும் அருமையான செயலை காலத்தின் தேவையுணர்ந்து செய்து வரும் முன்னால் பதிவர் சமூகத்தளத்தில் நீங்கள் விரும்பும் பாடலை இங்கும் ரசிக்கலாம்! அதன் லிங்கு இங்கே-https://www.youtube.com/playlist?list=PLwluC43O-7eU2-YzqaS0L-h4DrpUJPaOf

5 comments :

ஆத்மா said...

வடுக்கள் ஆற நாட்கள் தேவைப்படும்...

நம்மவர்கள் பாடலென்றாலே நினைவுகள்தான் மனதிலோடும்

KILLERGEE Devakottai said...

நானும் இதேபோன்று நூல் ஒன்று படித்துக்கொண்டு இருக்கன்றேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இதோ இணைப்பிற்குச் செய்கின்றேன் நண்பரே
நன்றி

வலிப்போக்கன் said...

வடுக்கள் பாடினால் ஆறுமோ...????

Thulasidharan V Thillaiakathu said...

ஆறாத வடுதான் இல்லையா...வேதனைதான்...

பாடல்..சொல்கிறது பல அர்த்தங்கள்..நேசன்...