01 November 2012

urugum franchu kathali ;;;; "30

இனவாத யுத்தம் தந்த பல கற்றுக்கொண்ட பாடங்களில் ஊர் பிரிந்து வந்தாலும் உலகில் பல திக்கிலும் நடக்கும் விடயங்களை கவனிக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைத்து இருக்கின்றது.

அப்படித்தான் ஜீவனும் மலேசியாவின் ஊடகம் மற்றும் கலையுலகைப் பற்றிய புதியவிடயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது சிவதாஸ் குடியிருத்தியிருந்த தொடர்மாடி வீட்டில் உற்ற நண்பன் போல கூட இருந்தது வானொலியாகும்.!

செவியை வானொலிக்கும் சிந்தனையை புலம்பெயரும் நினைவுகளுடன் இருந்தாலும் வானொலிகள் மீது எப்போதும் அதிக ஈர்ப்பு இருகும் ஜீவனுக்கு .அவனும் ஒரு அறிவிப்பாளர் ஆகவேண்டும் என்று கனவில் இருந்தவனை யுத்தம் மாற்றுப்பாதையில் போகவைத்துவிட்டது.!

மலேசியாவின் பொருளாதாரம் ,மக்களின் வாழ்வாதாரவிடயங்கள் ,குடும்பங்களில் நடக்கும் சீரழிவு ,வழிதவறிய காதல் அதன் சீரழிவு பிள்ளைகளின் குழு வன்முறைச் சம்பவங்கள்,போதைவஸ்த்துப் பாவனை,பள்ளியில் நடக்கும் பாகுபாட்டுச் செயல் கலைஞர்களின் வெற்றிப்பயணம் என இன்னும் பல விடயங்களை மலேசியாவின் தனியார் வானொலியான THR ராகாவில் அன்புடன் மாறன் வந்தால் அந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.!

தினமும் அதிகாலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் அன்நாட்களில்2001 இல் இப்போது 2012 தமிழ் அருவி இணைய வானொலி முல்லை மண்ணில் இருந்து புலம்பெயர் ஊறவுகளுக்கும்
வானொலி நேயர்களாக பாலம் போடுவதைப்போலத்தான் .

மாறனின் அன்புடன் மாறன் நிகழ்ச்சி சிங்கப்பூர் வரையும் காற்றலையில் கலக்கும்.அந்தநாட்களில் மாறனுடன் THR ராகாவில் ஆரம்பத்தில் பங்கி சங்கர் இருந்தார்! இவரின் கணீர் குரல் பல மலேசியா வானொலி நேயர்களை அரச சேவையில்நேயர்களாக இருந்தவர்களையும் தனியார் வானொலிப்பக்கம் திசை திருப்பியதில் முக்கியமானவர் !


இலங்கையில் சூரியன் fm இல் வெள்ளையன், முகுந்தன் ,வியாசாகல்யான சுந்தரம் போல !

.THR மாறனோடு ராம் அறிவிப்பாளினி புன்னகைப்பூவே கீதா ,ஆனந்து, காயத்திரி என இன்னும் சிலர் சேர்ந்து செய்த வானொலி நிகழ்ச்சிகள் பல நேயர்களை பாடல் கேட்பது மட்டுமல்லாது பல ஆலோசனையை கல்வித் தேடலில் தெளிவு பெறும் ஊடகமாகவும் மக்களின் நிறைகுறைகளைப் பகிரும் ஊடகமாகவும் இருந்தது. இருக்கின்றது எனலாம்.


இதில் இருந்த அறிவிப்பாளினி புன்னகைப்பூவே கீதா பின் நாட்களில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானது ."அறிந்தும் அறியாமலும் "படம் மூலம் என்பதும் இப்போதும் தென்னிந்தியாவில் படவேலைப்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பது வரலாற்றில் பதியப்படவேண்டிய தகவல் .விஸ்ணுவர்தன் இவரின் ஆஸ்தான இயக்குனர் எனலாம்.!

THR ராகாவின் சேவை முடிய சிங்கப்பூர் வானொலி ஒலி 96.5 .

மலேசிய நேயர்களையும் ஈர்க்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் காற்றலையில் கனிவாக வரும் .

அதுபோல மலேசிய அரசவானொலி அருமையாக24 மணிநேரமும் சேவையில் இருக்கும். அதிகமான நேயர்களின் கவிதை ,கட்டுரை ,விருப்பங்கள் என தன் பாணியில் பல அறிவிப்பாளர்கள் ,அறிவிப்பாளிகளுடன் சேவையில் இருக்கும் வானொலி 6 என அடிக்கடி விளபரம் செய்ய்யும் குரலில் S.R.பாலசுப்பிரமணியம் குரலில் !

நம்மவர் தேசத்தில் தேசிய சேவை,வர்த்தகசேவை என இரண்டிலும் நல்ல அறிவிப்பாளராகவும் நல்ல கவிஞருமான ,நல்ல பாடல் தெரிவுகளுடன் இனிய கவிதை தரும் A.C.M கலீயூர் ரகுமான் குரலினைப் போலத்தான் இவரும் இவர் நிகழ்ச்சிகளைக் கேட்பதையே பொழுது போக்காக தொடரும் நிலையை ஜீவனுக்கு சிவதாஸ் தந்து விட்டுச் சென்றார் இரண்டு மாதமாக !

நாளை மறுதினம் வருவேன் என்றவர் வந்தது 65 நாட்களின் பின்!

தொடரும்!

9 comments :

தமிழ்வாசி பிரகாஷ் said...

நேசன் எப்படி இருக்கீங்க?

Anonymous said...

நலமா நேசரே?

சந்தித்து நாளாயிற்று....இன்று மாலை பால் கொப்பியோடு சந்திப்போம்
...

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் அருமையான பாடல்...

தொடர்கிறேன்...

நன்றி...
tm3

தனிமரம் said...

நேசன் எப்படி இருக்கீங்க? //வாங்க தமிழ்வாசி சார் நலமா ?முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ !நான் நலம்சார் நீங்கள் குடும்ப உறவுகள் எல்லாம் நலம் தானே ?? நன்றி நலம் விசாரிப்புக்கும் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நலமா நேசரே?// வாங்க ரெவெரி அண்ணா நான் நலம்!

சந்தித்து நாளாயிற்று....இன்று மாலை பால் கொப்பியோடு சந்திப்போம்/ம்ம்ம் எப்போதும் சந்திக்கலாம் :))) நன்றி வருகைக்கும் கருத்துரைகும்!

தனிமரம் said...

முடிவில் அருமையான பாடல்...

தொடர்கிறேன்...

நன்றி...
tm3 // நன்றி தன்பாலன் சார்!

முற்றும் அறிந்த அதிரா said...

ம்ம்ம் அசத்தலாகப் போகுது. நல்ல வீடியோக்கள்.

சுதா SJ said...

30 ????
வாழ்த்துக்கள் நேசன் அண்ணா ...

பாடல் அருமையா இருக்கு... எங்கிருந்துதான் இப்படியான பாடல்களை தேடி தேடி பிடிக்குறீன்களோ... சூப்பர் ரசனை உங்களுக்கு :))

Seeni said...

mmm...

thodarungal sonthame...