14 April 2014

கிறுக்கலும் கீதமும்-3

தனிமரத்தின் அன்பு உறவுகள்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!

உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
 இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!



//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ  இருந்தாலும்!
உதித்த  நிலவாக
எப்போதும் உன்  நடைப்பாதை
 கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
 நீயும் ஒரு பூவோ !!


//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
 இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!

8 comments :

Seeni said...

பிரமாதம் சகோ...

தனிமரம் said...

பிரமாதம் சகோ//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

// அருகில் இருக்கும் மரத்திடம் கேள்...
அதுவும் தனிமரமோ கவிதை பேச....! //

அதானே...

Unknown said...

நன்று!///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

ருகில் இருக்கும் மரத்திடம் கேள்...
அதுவும் தனிமரமோ கவிதை பேச....! //

அதானே.../ஹீ ஏன் இந்த கொலவெறி தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்று!///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்!//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா எம் வாழ்த்துக்களும் இனிதே தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் யோகா ஐயா.

காற்றில் எந்தன் கீதம் said...

வித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...

தனிமரம் said...

வித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...//நன்றி தோழி வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தாருக்கு.