16 February 2011

Ullasampoovomaa-1

இலங்கையில் மிகபிரபல்யமான பூங்கா பேராதனைப்பூங்கா.இது எழில் கொஞ்சும் மலையகத்தின் தலைநகராம் கண்டியில் அமைந்துள்ளது.கங்கையாழ் மகாவலியின் இயற்கை அருவியின் நீர்பரவிச்செல்லும் தேசமாக இருப்பதால் தொடர்ந்து செழிப்பான தாவரம்,மலர்கள்,கொடிகள் வருடம் முழுவதும் பச்சை பூமியாக பார்பவர்களை கொள்ளையடிக்கிறது.இயற்கை அழகை ரசிப்பவர்கள்,குடும்பத்துடன் செல்ல சிறப்பாண இடம், சித்திரை வெய்யிலுக்கு இதமான சிலிப்பான சுற்றுலா போகக்குடியது இந்தப்பூங்கா.எப்போதும் பேராதனிய பல்கலைக்கழக காதலர்களின் செர்க்கபூமி இது என்று கூறுமளவுக்கு அவர்கள் நிறைந்து இருப்பார்கள்,அழகான தொங்குபாலம் அருவியை ஊடறுத்துச்செல்கிறது.இங்கு பல திரைப்படக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசின் சுற்றுலாமையத்தின் பிரதானமான பூங்கா இது.நீண்ட சுற்றளவு கொண்ட பேராதனைப்பூங்கா அழகிய பல மலர்த்தோட்டங்களை  தன்னகத்தே கொண்டுள்ளது.நீண்ட பாக்குமரச்சோலைகள்,கமுகு மரக்காற்று மனதிற்கு மகிழ்ச்சிதரவல்லது.கோடையில் போக சிறப்பான இடம் .

No comments :