18 October 2015

கிறுக்கலும் கீதமும்!

முகம் தேடி உன்னைக் காண
முகம் இல்லாத ஏதிலி போல
முன்னம் நேசித்தவன் இன்னும்
முகாம்கள் எல்லாம் அலைகின்றேன்!
மூச்சு வாங்க !

முகவரி கிகைக்குமா,,??
முகம் பார்த்த காதலில்
முன்னால்  வருவாய் என
முயன்று பார்க்கின்றேன்!
முழுமதிபோல மீண்டும்
முன்னால் வந்தால்
முடிந்து போகும்
மூச்சு உன் மடியில்!
முடிவை நாடி ஓடி நானும்
முன்னால் அதிகாரி!
முகம் தேடி!

 
 
 
 
முன்னம்  கிறுக்கல் இங்கே-
 
 
 
 
 

7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு நாள்
முன்னாள் வருவார்

நன்றி நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

பொறுமை வேண்டும் தோழர்...

கரூர்பூபகீதன் said...

ஆமாம் முன்னால் வருவார் சகோ!

எப்படி அனைத்து வரிகளும் "மு "விலே ஆரம்பிக்கிறது நல்லாயிருக்கிறது சகோ!?
கிறுக்கல் போல தெரியவில்லையே ???

putthan said...

முத்தம்மாவா,முனசிங்கியா தேடுகிறீர்கள்

செந்தழல் செ சேதுபதி said...

நன்று!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல வரிகள்!

சசிகலா said...

மு..மு..முன்னாடி வருவாங்க.ஹஹ