02 March 2011
Kirukkalgal-3
ஓ நண்பனே உன் சிறப்புக்குரிய நாள் இன்று காலச்சக்கரத்தில் நீ விதைத்த காதல் ஏதோ ஓரு இதய மூளையில் முகாரி வாசிக்கிறது.முடிவெடுக்க முதுகெலும்பு இல்லாத உன் சம்பிரதாயச் சந்தையில் நான் கலியாணமாகி கடல்கடந்தேன்.நீயோ நினைவுகளை மீட்டி என்னை தினமும் கழுவேற்றுகிறாய். நாம் சேர்ந்து கண்ணாடி வீட்டுக்குள் விவாகரத்தாகி பிரியாமல் தனிபாதையில் போனதால் இன்று சந்தோஸமாக கைபிடித்தவர் நல்ல நண்பனாக வழித்துனையாக வருவது என்பூர்வ ஜென்ம புண்ணியம்.உனக்கும் நல்லமனைவி கிடைப்பாள் என வலை நண்பர்கள் கூறுகிறார்கள் மீண்டும் நண்பர்கள் என்ற பயணத்தில் உன்னுடன் கூடவந்து நெறுங்கிய உன் இதயத்தை மீண்டும் உடைக்க நாம் ஒன்றும் சினிமாக்காதலர் இல்லை வாழ்க்கை சதுரங்கத்தில் திசைமாறிய சாமானியர்.நல்ல நாளில் நானும் முகம் தெரியாத ஓரு நண்றியுள்ள ஜீவனாக உன்னை வாழ்த்துகிறேன்.விதியின் விளையாட்டில் நாம் ஓருபோதும் சந்திக்கக்கூடாது என் பிரியமான தேவனே.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment