17 March 2011

என் பார்வையில்  தபூ சங்கர்

புதுக்கவிதை எழுதும் கவிஞர்வரிசையில் என்னைக்கவர்ந்தவர் தபூ சங்கர் இவர் மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் தொகுப்பு எவ்வாறு புதிய அலையை உருவாக்கியதோ !அதே போல் இவரின் தொகுப்புக்கள் அதிக பதிப்புக்களை கானுகின்றது சிறந்த சொற்கோவையை அழகிய நயத்துடன் காதலை பாடுபொருளாக மிக சுவையாக எழுதுவதால் பிடிக்கிறது அதிகமாக காதலை,அன்பை புதிய பார்வையில் எழுத்தோவியமாக்கிறார்.இவரின் நூல்கள் மழைக்கால இரவு,அடுத்த பெண்கள் கல்லூரி 5km,பட்டாம்பூச்சி விற்பவன்,இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கு,தேவதைகள் வரும்பாதை, என இன்னும் பல காதலை இப்படியும் பாடலாமா என வியக்கவைக்கும் எழுத்துக்கள் என்பதால்தான் அதிக இளையதலை முறையினர் இவரின் கவிதைப்புத்தகங்களை தம்புத்தகங்களுடன் சேர்த்து சுமக்கின்றனர்.சுவாரசியமாக காதல்கடிதங்கள்  வரைவதற்கு இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவி செய்கின்றது.வெக்கத்தை கடன் கேட்டல் நூல் இனிய காதல் நூனுக்கங்களை பாடுகிறது காதல் வந்தால் வலயல்கள் சத்தம் ,முகம்பார்க்கும் கண்ணாடியில் அவர்களின் ஓத்திகைகள் புதிய சிந்தனையை பதியவிடும் லாவகம் அதிகமாக இருப்பதால்தானோ இவரின் சில கவிதைகளையே பதிப்பகத்தார் பல அட்டைகளை போட்டு காசு பார்க்கிறார்கள். நீ உடைக்கும் வலையலாக நானிருந்தால் என்ற ஏக்கமாகட்டும்,நான் படித்த பாடசாலையில் நீ மதிலுக்கு அப்பால் உன் சைக்கிளில் வைத்துவிட்டுப்போன புத்தகங்களை திருடி விட்டு நீ படும் அவஸ்தையை ஓளிந்திருந்து பார்ப்பேன் என்ற வசணக்கவிதையாகட்டும் நெஞ்சுக்குள் இப்படி எல்லாம் காதலியுடன் ஊடல் செய்யமுடியவில்லையே என்ற ஓரு தவிப்பு ஏற்படுகிறது.நல்ல கவிதையை படைக்கும் தபூசங்கர் சினிமாவிலும் இப்போது சில பாடல்கள் எழுதுகிறார் மரியாதை படத்தில்( தேவதை தேசத்தில் காதல் கண்ணாம்பூச்சியாடும்") தொடர்ந்து நல்ல கருத்தாளமிக்க பாடலை தரட்டும் ரசிகர்களுக்கு .சிலகவிதை தொகுப்புக்கள் புதுப்பதிப்பு பெறும்போது அட்டையை மாற்றி தன்னிச்சையாக செயல்படும் பதிப்பாசிரியர்களின்  தில்லுமுள்ளுகளையும் கவனிக்க வேண்டும் நம்கவிஞர்.

No comments :