06 March 2011

Karakattam.

      ______        ....,. நமது கலைகளில்  ஓன்றான கரகாட்டத்தைப் பற்றி தமிழ்சினிமாவில் அதிகம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது என் அபிப்பிராயம் நான் பார்த்த சினிமாவில் கங்கைஅமரன் கரகாட்டக்காரன் படத்தில் மிகவும் திறம்பட கரகத்தின் நடனவகையை ஆபாசம் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை சோகம்களை,துயரங்களை மிகவும் ரசிக்க கூடியவாறு கலையை மற்றவர்கள் புரியும் வண்ணம் இயக்கியிருந்தார்.ராமராஜான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தகலையை கஸ்ரப்பட்டு கற்று ஆடி நடித்ததும் மக்கள் கலையை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்ததாலும் மிகவும் அடித்தட்டு மக்களுக்கு ஜனரஞ்சப்படுத்தப்பட்டதாலும் என்பேன்.பின் கஸ்தூரிராஜா சிலபடங்கள் செய்தார் குஸ்பு நடித்த நாட்டுப்புறப்பாட்டு,சிவாஜி ,முரளி நடித்த என் ஆசை ராசாவே, படங்கள் ஓரளவு கரகம்பற்றி  தமிழ்சினிமாவிற்கு புதிய கதைக்களத்தை திறந்தது. பின் இக்கரகம் குத்தாட்டக்காட்சியாகவே தினிக்கப்பட்டு எமது கலை ஜனரஞ்சகம் என்ற போர்வையில் சீரலிகப்படுகிறது.புரதானகலைகளில்  இதுவும் ஓன்று பரதம் பற்றி சிலப்பதிகாரத்தில்  மாதவியை அறிமுகம் செய்யும் போது அழகாக இலங்கோ அடிகள்  விளக்கியுள்ளார்  (நாட்டுக். -கூத்து   முனைவர் -மொனகுரு).இன்று இக்கலை மறக்கப்பட்டு வருகிறது.சின்னத்திரையின் வருகை நம்கலைகளை நூதசாலைக்கும் ஆய்வு செய்யப்படுவதற்கும் என சீரலித்துவிட்டது. இன்னும் சிலகலைஞர்கள் இதை சேவையாகவும்,மூச்சாகவும்,கருதுவதால்தான் சென்னைச் சங்கமம் மூலமாகவோ,கிராமங்களில் கோயில் திருவிழாக்களிலும் சரி கானக்கூடியதாக இருக்கிறது.புரதான நம்கரகம் சரி மற்றைய கலைகள் சரி குளிர் அறையில் இருந்து கொள்கைவகுப்பர்களால் சீரலிக்கப்படுகிறது. பிரென்ஞ்சு மக்கள் தம்கலை கலாச்சாரத்திற்கு கொடுக்கும் மதிப்பும்,மரியாதையும் பார்க்கும் போது நம்சீரலிவை எப்படி பதியவைக்கப் போறோம் எதிர்கால சந்ததிக்கு!

No comments :