08 March 2011

காற்றில் லங்காசிறி fm

உலகெங்கும் இனையத்தில் தமிழ்வளர்க்கும் லங்காசிறி fm இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இது லண்டனை தளமாகக்கொண்டு உலகெங்கும் கைபேசியில் நேயர்கள் கேட்டு மகிழும்வண்ணம் வசதியுடன்,இனையத்தளமூலமும் சேவைபுரிகின்றது  சிறப்பாண அறிவிப்பாளர்கள் ஆகாஸ்,தினேஸ்,நாகா,மயூரன்,ரோபேட்,பெண் அறிவிப்பாளர்களான பாரதி,உமா,தாட்சாயினி ஆகியோர் சிறப்பாக வானொலியில் நேயர்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து  வழங்குகிறார்கள் .காலைப்பொழுதில் ஓலிக்கும் வணக்கம் லங்காசிறி பல்சுவை அம்சத்துடன் வலம்வருகிறது.சமய அறிவுரைகள் நீதிக்கதைகள் என்பதுடன் காதுக்கு இனிய காணங்களுடன் ரோபேட் தொகுத்தளிக்கிறார் காலையில் ஐரோப்பிய நேயர்களுக்கு இது காலைத்தேனீர்  என்பது என்கருத்து.அதனைத்தொடர்ந்து பலநிகழ்ச்சிகள் வலம்வருகிறது தொலைபேசி மூலம்பாடல் கேட்கும் வண்ணம் இனைப்புக்கள் உள்வாங்கப்படுகிறது,அறிவிப்பாளருடன் இரண்டு நிமிடம் தூயதமிழில் உரையாடி விரும்பும் பாடலை பரிசாக பெறும் நிகழ்ச்சியை ஆகாஸ்,பாரதி,சிறப்பாக குதுகலத்துடன் நடத்துகிறார்கள்,வாரநாட்களில்  இரவில் தினேஸ் தொகுத்தளிக்கும் இமையும் இசையும் இனிய கவிதைகளுடனும் அமைதியான பாடல்களுடன் எம்மை தாலாட்டுகிறார்.செவ்வாய்க்கிழமை இமையும் இசையும் நேயர்களின் காட்சியும் காணமும் பிரதியாக எழுதியனுப்பப்பட்ட வற்றில் சிறப்பானவை தினேஸ்சின் இனிய குரலில் வானொலியில் காற்றில் வருகிறது.வார இறுதியில் மொனம் பேசுகிறது  நேயர்களின் இதயத்தில்  உறங்கும் இன்பதுன்பங்களை காற்றில் கரையவைக்கிறது.மாலையில் ஓலிக்கும் பார்ட்டி டையிம் நிகழ்ச்சி நேயர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றுவருகிறது என்பதற்கு  நேயர்கள் அதிகமான இனைப்பை மேற்கொள்கிறார்கள் அறிவிப்பாளர்களுடன் ஜாலியாக உரையாடுவதை செவிமடுக்கும் என்னால் அறுதியிட்டுக்குறமுடியும்,மயூரன்,ஆகாஸ்,பாரதி,உமா ,சுவைபட நேயர்களுடன் அறிவிப்பு செய்கிறார்கள்,சனிக்கிழமையில் தினேஸ்,பாரதி தொகுத்தளிக்கும் top15  அண்மையில் வெளியான புதிய பாடல்களை தரவரிசைப்படுத்தும் நிகழ்ச்சி புதியபாடல்பிரியர்களுக்கு செவிக்கு இனியது.சனிகாலையில் தாட்சாயினி தொகுத்தளிக்கும் வணக்கம் லங்காசிறி கதம்பமாலை மிகவும் பாராட்டக்கூடிய பயனுள்ள தகவல்களை தாங்கி வானொலியில் வலம் வருகிறது. வாரஇறுதியில்  சினிமா கிசுகிசு நிகழ்ச்சி சினிமா தகவல்களை பகிருகிறது நேயர்களுடன்.போக்குவரத்தில் இதனுடன் இனைந்திருக்க முடியும் வண்ணம் கைபேசியில் வானொலி ஓலிபது லங்காசிறியாகத்தான் இருக்கும் காற்றில் தமிழ் வழக்கும் வானொலியை இன்னும் பலசுவையான நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி நேயர்களை சென்றடைய வாழ்த்துகிறேன். இனிய தமிழில் காற்றில் காதோடு கவிபாடும் வானொலியே நீ நீண்ட ஆயிலுடன் வாழ வாழ்த்துகிறேன்.

No comments :