23 March 2011

படித்ததில் பிடித்தது.

எனக்குப் பிடித்த ஆய்வுநூல்களில்  தம்பிஜயா தேவராஜா எழுதிய இலங்கை தமிழ் சினிமாவின் கதை  முக்கிய ஓரு ஆவணம் இலங்கையில் வெளியான படங்களை பட்டியல் இடுகிறது சமுதாயம் தொடக்கம் சார்மிளாவின் இதயராகம் வரையான அருமையான தகவல்களை திரட்டிய முழுமையான நூல் இது.அழகு தமிழில் சுவையான எழுத்து நடையில்  யாவருக்கும் விளங்கும் வண்ணம் சிரத்தை எடுத்து இந்த தமிழ் ஊடகவியளார் வெளிக்கொண்டந்தது காலத்தின் தேவையே இலங்கையில் முண்ணனி நாளிதல்கள் இந்த நூலை பல விமர்சனம் செய்து அதிக வாசகர்களை சென்றடைய காரணமாக இருந்ததை மறுப்பதற்கு இல்லை.அருமையான புகைப்படங்கள்,படவிளம்பரங்கள்,எங்கெல்லாம் அதிகமாக வசூல்லானது.ஆசிரியரின் விமர்சனம்.எல்லாம் சேகரிக்கப்பட்டு ஓரு காலப்பெட்டகம் இன்நூல்.இலங்கை சினிமாவை தெரிந்துகொள்வதற்கு தாய்மொழியில் வெளியான முதல்நூல் என்று சொல்லமுடியும்.ஆசிரியரின் சினிமா ஆர்வத்தை இன்நூல் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.ஒரு வாசகனாக அவரின் திறமையை ஈழத்து தியேட்டர்பாஸ்கரன் என்பேன்.இன்நூல் புலம்பெயர்தேசத்தில் இன்னொருவர் முகப்பு அட்டையை மாற்றம் செய்து தன் பெயரை இட்டு புகழை அடைவதாக நினைத்து சேற்றை பூசுக்கொண்டதும் மறக்கமுடியாது.பாலுமகேந்திராவின் முன்னுரையுடன் காந்தளகம் பதிப்பாக இன்நூல் வெளிவந்துள்ளது.

No comments :