12 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-20


பொருளாதார முன்னேற்றம் காணும் தலைநகரில் இருக்கும் புறநகர்கள் பலவற்றில்  !புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் டாலர்களும் .பிராங்குகளும். பவுன்ஸ்களும். சும்மா இருக்கும் நிலத்தையும் பவுணுக்கு ஏற்ப விலையேற்றுவதில் இடம்பெயர்ந்து வந்த யாழ்பாணத்தவர்களின் பங்கினை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மட்டக்குளி நகரில் தெருவோர வடைவிற்பவன் வாய்க்க்கு ஒரு அவல் போல என்ன மஹாத்தயா இந்தப்பக்கம் இருக்க ஒரு வாடகைக்கு அறைகிடைக்குமோ?
 என்று பேச்சுக்கொடுத்தால்!


நீயா ,?நானா ?போல அவன் கொடுக்கும் பதில்கள் கேட்டால் இந்த மட்டக்குளியில் இருந்து வத்தளை வரையும் ஒரு கதை.

மட்டக்குளியில் காக்கதீவுப்பகுதியின் கந்தள்கதையும் கனக்க எழுதலாம் தேசியநாளிதளில் மறுபக்கம் கோக்கர்ணன் என்ற போர்வையில் !


குடுவும் ,கசிப்பும் ,இங்கு பல ஆண்களை மட்டுமா ?பெண்களையும் வீதியில் விழியிழந்து ,வேட்டியிழந்து ,சேலை கிழிந்து கண் எதிரே கிடந்தாளும் விலத்திப்போவது வந்து விழும் அநாகரிகமான வக்கிர வார்த்தைகளை கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்றாள் மிகையில்லை .!

முதலில் இந்த ஊருக்கு வருபவர்களை முழித்துக்கொண்டு இருக்கச்செய்யும் பல ஊர்களில் மட்டக்குளியும்  ஒன்று என்றாலும் மட்டக்குளியில் குட்டிக் கவுனுடன் பெட்டை ஒருத்தியை பார்த்தேன் என்று ஈழத்து பாப் பாடல் பாடுவதில் இந்த புறநகரம்மும் புகழ்பெற்றது .

மட்டக்குளி காக்கைதீவுப்பக்கம் பல தையலகங்கள் முன்னம் இருந்தாலும் ,காலப்போக்கில் இங்கு வந்த வெளியிடத்தவர் பலரை அரபுலகத்து  அடிமைகளாக பணிப்பெண்கள் என்ற போர்வையில் இடம்பெயரச்செய்தது இந்த அம்மையாரின் ஆட்சியின் பொருளாதார சீர்கேட்டின் இன்னொரு வடிவம் என்றால் மிகையில்லை.


பிற ஊரில் தையல் தொழில் தெரிந்து கொண்டு கொழும்பை அண்டிய பகுதியில் பிழைக்க வந்த தென்பகுதிக் கிராமங்களில் இருந்த அப்புஹாமியின் பேர்த்திகளும் ,மூக்கையாவின் வாரிசுகளும் ,சரளமாக சொல்லுவார்கள் நம்நாட்டின் அரசியல் சீரழிவை சிரச தொறதொற நிகழ்ச்சியில் ஒலி/ஒளிபரப்பினால் .!


நேற்று தொறத்தொற நிகழ்ச்சி பார்த்தீர்களா ?என்றுகேட்டான் சேகர் ஆட்டோசாரதி அமரவிடம்.

இல்லைத் தம்பி சேகர் நேற்று ஒரு பார்ட்டியில் இருந்தேன் என்றான் அவனை நன்கு அறிந்த அமர .

சிரச வானொலி நிகழ்ச்சியோடு ஒன்றிய வண்ணம் வந்து சேர்ந்தது இடம்  மட்டக்குளியில் இருக்கும் சாந்தா மேரி சேர்ச்!

அதன்  முன்பகுதியில் இறங்கப்போறன் மச்சான் நிற்பாட்டு ஆட்டோவை அமர!

மீண்டும் சந்திப்போம் என்று ஆட்டோ நண்பனுக்கு காசுகொடுத்துவிட்டு கைபேசியில் மிரூனாவுக்கு அழைப்பு எடுத்தான் சேகர் .

மறுமுனையில் சேகரின் அழைப்பினை உள்வாங்கிய  மிரூனா

ஹாலோ சொல்லுங்க சேகர் அண்ணா.எப்படி அண்ணா இருக்கின்றீங்க ?என்ன இந்த நேரம் !!
இல்லை நீ இருக்கும் மகளீர்விடுதிக்கு முன்னால் தான் நான் இப்போது நிற்கின்றேன் .கொஞ்சம் வெளியாள வருவீயா?

உன்னுடன் பேசணும்!!

 இருங்க இப்பவே காவலாளியிடம் சொல்லிவிட்டுவாரன் என்று அழைப்பைத்துண்டித்தாள்அப்போது இரவு   8 மணி !!அதுவரை  சக்தியின் பண்பலை இரவுச் செய்தி இன்னும் ஒலிக்கவில்லை என்பதை அருகில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் இருந்த வானொலியின் நிகழ்ச்சி எதிர்வு கூறியது சேகருக்கு !!


தன் கைப்பையில் இருந்த பாம்பராக்கினை போட்ட வண்ணம் மிரூனாவின் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தான் .இரவு என்றாலும் இந்த வீதியில் வரும் வாகனங்களின் வெளிச்சமும்  சேர்ச்சில் இருந்து ஒளிரும் பிரகாசமான வெளிச்சமும் வருவோரை சினிமா நடிகை வெளியில் வர மின்னும் கமரா ஒளிபோல வீதியில் வருவோரை துல்லியமாக காட்டும் !எதிரே கோகுலம் பட பாணுப்பிரியா போல தலையை விரித்த வண்ணம் சுடிதாரில் வந்தாள் மிரூனா !



என்ன சேகர் அண்ணா திடீர் என்று ,என்ன நீ இருந்த வவுனியா எல்லாம் ஓரே பிரச்சனையாமே ?ஒரு கோல்கூட எடுக்காமல் இப்படி வந்து நிற்கின்றீங்க? அத விடு நான் உன்னைப்பார்க்க வந்தது வேற விடயமாக.

 எப்படி போகின்றது வேலை ,படிப்பு ;எல்லாம் !

நல்லா இருக்கு அண்ணா .உது என்ன பாப்பராக் எல்லாம் போடுறீங்களா ?

சும்மா போட்டுப்பார்த்தேன் என்ன செய்து என்று பார்க்க மிரூனா .

ஆமா ஊரில் பாட்டி பேசிச்சா?

ஆமா அண்ணாச்சி!

 செளக்கியமாக இருக்கின்றாங்க எல்லாம் .

ஏன் அண்ணா நம் ஊர் எல்லாம் வரமாட்டீங்களா ?

இனி வருவேன் என்றாவது ஒருநாள் !

நாளை இரவு பக்கத்து ஊர் போறன் .

எங்க பசரையா ?
இல்லை பண்டாரவெல !

ஏன் ஐராங்கனி ஒன்றுகூடல் என்று  போனதாளோ?
 என்ன சொல்லுகின்றாய்?  ஐராங்கனி பண்டாரவளையிலா???
இப்பத்தான் என் கூட பேசினாள் என் பிரெண்டு!.,,,


தொடரும்......


// பின் குறிப்பு!

தொறதொற -சிரச சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி 1999 காலத்தில்!
மட்டக்குளியில் குட்டைக்கவுன் பாடல்  இலங்கை பாப் சோங்/!விரும்பினால் புரட்சி எப் எம் நிகழ்ச்சியில் நம் நிரூபனிட்ம் கேட்டால் அந்தப் பாடல் தனிப்பதிவாக என்றாவது வரலாம் நாற்று வலையில்! அந்தப்பாடல் என் விருப்பமும் கூட!

10 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் ஐயா

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

Unknown said...

நன்றாகப் போகிறது.சுவாரஸ்யமாகவும்!தொடரட்டும்!!!

செங்கோவி said...

நில விலையை உயர்த்துவதில் வெளியூர் பணத்தின் பங்கு அதிகம் தான்.

செங்கோவி said...

ஓ..தொறதொற-ன்னா நிகழ்ச்சியா?....நல்லவேளை!!

தனிமரம் said...

தொடர்கிறேன் ஐயா//வாங்க கரந்தை ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

12 August 2013 19:30 Delete//நன்றிகள்§

தனிமரம் said...

நன்றாகப் போகிறது.சுவாரஸ்யமாகவும்!தொடரட்டும்!!!

12 August 2013 23:19 Delete//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

நில விலையை உயர்த்துவதில் வெளியூர் பணத்தின் பங்கு அதிகம் தான்.

14 August 2013 04:23 Delete//ம்ம் நிஜம் தான் செங்கோவி ஐயா!

தனிமரம் said...

ஓ..தொறதொற-ன்னா நிகழ்ச்சியா?.//ம்ம் அது ஒரு டீவி சோ/ம்ம் ...நல்லவேளை!! அது இப்ப இல்லை இலங்கை நாட்டில்!ஹீ நீயா நானா வர முன்னே வந்து நிகழ்ச்சி ஐயா!ம்ம்

14 August 2013 04:24 Delete