31 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-32

தோல்வியின் போது தோள் கொடுக்காத 
தேர் போன்ற உலகம் வெற்றியின் பின்னே வரவேற்பு என்று
 வெற்றியுடன் மீண்டும் வரும்போது 
வெற்றிக்களிப்பை பங்கிட்டு தனதாக்கின்றது. 
தோல்வியின் போது துவண்டுபோகாமல் இருக்க நம்பிக்கையுடன் 
தோளைத்தட்டிக்கொடுத்த உறவுகள் 
தொலைவில் நின்று நிறைவான சந்தோஸம் காணும் 
இதுதான் இந்த உலக நியதி மச்சான் !

நீ இலங்கை மீண்டும் போகும் இன்றைய நாள் உன் வாழ்வில் மீண்டும் ஒளிபிறக்கப்போகுது மச்சான் , இன்னும் சில மணித்தியாளத்தில் கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறிதுடன் வெளியார் வரவேற்புப்பகுதியில் பாரு எல்லாம் தெரியும் மச்சான் பாபு .

என்னடா சொல்லுகின்றாய் சேகர் ?மூன்று வருடகள் கடந்த பின்  நீயே நேரில் பார்க்கப்போறாய் எனக்கு வேலைக்கு போக நேரமாச்சு .உனக்குத் தான்  இப்ப வெளிநாட்டு வாழ்க்கை நன்கு புரியுமே இங்கு வயிற்றுவலி என்றாலும் வாய்விட்டுச் சொல்லாம வேலைக்குப் போனால் தான் அன்றாடம் நம் பிழைப்பு நல்லா இருக்கும் .

அக்கரையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஜாலி என்று சொல்லுவோருக்கு எங்க புரியும் நாம் இழக்கும் வாழ்க்கையும். வாலிபமும் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தான் சேகர் .

ம்ம்ம் ..சரிடா சேகர் கொழும்பு போனதும் தொடர்பில் வாரன்!

சிந்தனையைக் கிளறிவிடுவதில் இந்த நினைப்பு அதிகம் தொல்லை தருமாம் அதுபோல 
மூன்றுவருடம் அரபுலகத்தில் தனியார் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவிட்டு நாடு செல்லக்காத்து இருக்கும் நண்பன் பாபுவுக்கு ஸ்கைப்பில் சொன்னான் சேகர் !

மேற்பார்வையாளராக வேலை ,நான் பார்த்தவேலை என்னவோ குளிர்சாதனம் பூட்டிய பல்பொருள் அங்காடிக்கடையில்தான் வெளியில் தான் உடலை கருவாடு போல காயப்போடும் வெப்பம் புதிய மொழி ,புதிய, புதிய நண்பர்கள் .இறுக்கமான கட்டுப்பாடுகள் இந்த நாட்டில் .நம்நாட்டில் உடன் பிறந்தவார்களுக்கு சுபகாரியம் என்றாலும் ,உறவுகளுக்கு அவமங்களகாரியம் என்றாலும், தொலைபேசி அழைப்பில் தான் நம்உலகம். இன்பம் ,துன்பம் எல்லாம் இந்த் தொலைபேசி இப்போது ,ஸ்கைப் அத்துடன் .முகநூல் என இன்னும் ,சிலதை  பகிரமுடியும் அதுக்கும் இணைப்பு கிடைத்தால் தான் சாத்தியம்.

 இந்த ஊருக்கும் நம் ஊருக்கு வித்தியாசங்கள் பல .என்னதான் குவைத்நாட்டு டினார்  பெறுமதி நம் தேசத்தில் அதிகம் என்றாலும் அதுக்காக நாம் இழக்கும் ஆசாபாசங்கள் அதனைவிடப் பெரிது.

 என்ன செய்வது இனவாதநாட்டில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப்பெற முடியும் என்ற நிலை .

மூன்றுவருட அரபுலக வாழ்க்கை பல விடயத்தை சுயமாக சிந்திக்க  கற்றுத்தந்து இருக்கின்றது இனி வெளிநாடு என்று வெளிக்கிடுவது இல்லை.

 நம்மூரில்  என் உழைப்பிலும், நண்பனின் தயவிலும் ,நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்.

 என்னை நம்பி என் உறவுகள்கூட ஆயிரம் ரூபாய் கூடத்தராத நிலையில் லட்சங்களைக்கொடுத்து  நான் உடனே அரபுலகம் போகும் வரை தொடர்பில் இருந்தானே ?எப்போதும் தொலைவில் இருந்தானே சேகர் அவன் பெறுமதி என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேன் .

இனி அவனின் கடனை ஈரோவில் கொடுத்து அடைத்தாலும் அந்த நம்பிக்கையான நட்புக்கு என்ன கைமாறு செய்வேன்.

 நான் உயிரோடு உயிராக படம் போல காதலித்தவளே என்னை விட்டு பிரிந்த போதும் .



என் கூட இருந்து என்னை வழிநடத்திய வழிப்போக்கன் சேகர் விற்பனைப்பிரதிநிதி என்றாலும் எனக்கு அவனும் ஒரு குருதான்!

அவன் போகும் ஆன்மீக பாதையில் அவனோடு என்றாவது ஒருநாள் அடிபணிந்து போகணும் இது நட்பு என்பதைக்கடந்து குருசிஸ்யன் போல.

 ஆனால் என்னால் அவன் போல கோபத்தில் திட்டவும் ,பிடிவாதம் பிடிக்கவும் ,முக்கிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தனை பெரிய முகநூல் குழுமம் என்றாலும் எதிர்த்துவிட்டு விலகிச் செல்லும் தனி ஒருவன் போல  இருக்க முடியாது அது என் பலவீனம்.

அவனை விட்டுப்போகமுடியாது .இதுவும் ஒரு ஜால்ரா கருணாநிதியை விட்டுப்பிரியாத அன்பழகன் போலத்தான் !

என்றாலும் இந்த சேகரின் பின்னே அரபுலகம் வந்த பின் என் பல நண்பர்களையும் ,தலைவர் சொல்லிவிட்டார் கட்சியைவிட்டு வெளியேறுங்கள்  கட்சி உறவுகளே என் கருத்தில் உடன்பாடு இல்லாத கழக கண்மணிகளே இனி உங்கள் முடிவு  என்றாலும் என்ற  அது எனக்கு வருத்தம் இல்லை நான் மலையும் கடப்பேன் எந்தநிலையிலும் என்று அதிகாரதொனியில் அவ்ன் க்ருத்து இட்டால்  அவன் சிலமுகநூலில் என்னை வம்பில் மாட்டிவிட்டாலும் இன்றும் சேகரின் , நேசிப்புக்கு முன் இந்த புதிய நட்புக்கள் முகத்துடன் கிட்ட நெருங்க முடியாது !சிந்தனை மீள் கட்டுநாயக்கா அண்மித்துவிட்ட நிலையில் இன்னும் சில நிமிடத்தில் தரையிறங்கும் சிறிலாங்கா ஏர்லைன்ஸ் அறிவிப்பு கேட்டு நிஜய உலகுக்கு வந்தான் பாபு! சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது ராஜா இசை சேகருக்கு எப்போதும் ஒரு போதைதான் வாசிப்பு போல  அவன் தந்த பல ஒலிநாடக்கள்  இப்ப வீட்டில் இருக்கோ தெரியாது!`ம்ம்ம்




தொடரும்...

5 comments :

கவியாழி said...

நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்//சரியான சிந்தனை வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்க்கை என்பதே ஒரு வட்டம் தான்!

தனிமரம் said...

நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்//சரியான சிந்தனை வாழ்த்துக்கள்

31 August 2013 18:23 Delete//வாங்க கவியாழி சார் நன்றி முதல் வருகைக்கு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி பதிவர் மாநாட்டு வேலையிலும் வந்து கருத்துக்கூறிமைக்கு!

தனிமரம் said...

வாழ்க்கை என்பதே ஒரு வட்டம் தான்!

1 September 2013 01:05 Delete//ம்ம் நிஜம் தான் போலும் யோகா ஐயா தங்களின் அனுபவம் சொல்லுது! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

நெற்கொழுதாசன் said...

ம்ம் கதை இனி சூடாகும் போல

////////என்ன செய்வது இனவாதநாட்டில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப்பெற முடியும்/////

ஒன்றையும் பெறவில்லையே நாங்க .....