23 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-26

மக்களுக்காக .மக்களின் அபிவிருத்திக்காக தாய்நிலத்திற்காக சேவை செய்கின்றோம் என்று மாகாணசபைத்தேர்தலிலும் ,பாராளமன்றத்திலும் வேட்டிகட்டியும் கேட்டுப்போட்டும் கதிரையில் குந்தியிருக்க கூப்பாடு போட்டும் கோமாளிகள் எல்லாம் .

குறிப்பிட மறந்த ஒருவிடயம் தேசியத்துக்காக தோள்கொடுத்தோரம் இனவாத சந்தேகத்தில் சங்கிலிப்பிணைப்பாக விலங்கிட்டு, விசாரணையில்லாமலும் ,விடுதலையில்லாமலும் ,விதியையையும் ,சதியையும் ,எண்ணி வாழ்வு இழந்து .வாலிபம் இழந்து ,வாடியிருக்கும் சிறைக்கைதிகளின் சந்தோஸ விடுதலையை சற்று ஓங்கி உரைக்காமல்!

 இந்தியாவுக்கு உடுக்கடிக்கின்றோம். கனடாவில் கொடிபிடிக்கின்றோம் என்று ஊடகத்துக்கு ஊறுகாய் போட்டும் கூட்டம் .

நம் தேசத்திற்கு கிடைத்த சாபம் !!


சட்டம் தெரிந்தவர்கள்,சாமாதான வேடத்தில் சர்வதேசம் பார்த்தவர்கள் எல்லாம் பார்க்க மறந்தது. இலங்கையில் பல சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை இந்த பயங்கரவாதம் என்ற சொல்லின் பின்.

 சிங்கள் இனவாதம் சீரழித்த தமிழர்களின் இரத்தவாடையில் இறந்து போன யுவதிகள் ,ஆடவர்கள் ,குடும்பத்தலைவர்கள் ,தலைவிகள் பற்றி எல்லாம் பரபரப்பாக எழுதவேண்டிய ஊடகம் எழுதியது எல்லாம் அயல்தேசத்து நடிகர் வருகையையும் ,நடிகை வருகையையும் ,கேட்டாள் சினிமா சூட்டிங்க தான் இங்கே இப்ப முக்கியசெய்தி என்று  சொல்வார்கள் கேட்டாள் அனுபவஸ்தர்களாம்!


 முன்னம் எழுதிய விதியோ ?இல்லை ஊடக ஆசையோ ?முந்திச் செல்ல சேகரும் ,நண்பணுடன் சேர்ந்து  பிந்துணுவெவ சென்றநிலையில் ஊடங்கள் என்று படம்பிடிக்க வருவோர்களுக்கு .காடையர்களும் ,இனவாத இராணுவமும் ,உதைகொடுத்துக்கொண்டு இருந்தார்கள் இதுதான்  அன்று நடந்த நிஜம் .

அதை படம்பிடித்த என் நண்பன் ராஜுவும்  தாக்கப்பட்டான்.உள்ளூரில் இருந்த பொலிஸ் சட்டத்தை பாதுகாக்கவேண்டியவர்கள் காத்துக் கொண்டு இருந்து காடையர்களின் அட்டுழியம் கைமீறி எங்கே தங்கள் பதவி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அன்றி வேறில்லை.


. நீண்ட நேர கலவரம் முடிந்துவிட்டது என்று ஊடரங்கு சட்டம் போட்டுச் சொன்னாலும் பலர் வீதியில் அடிபட்டும் .உயிர் பிரிந்தும் போன நிலையில் உதவிக்கு பதுளையில் இருந்து வந்த இராணுவமும் ,பொலிசும் வீதியில் பலரை கேள்வி இன்றி தமிழர் என்ற காரணத்தாள் கைது செய்து கொண்டுபோனது .

பதுளைச்சிறைக்கும் ,கண்டியில் இருக்கும் போகம்பரை சிறைக்கும் விடுப்புப் பார்க்கப் போன சேகருக்கும் வேலியில் போன ஓண்னை வேட்டியில் பிடித்துவிட்ட கதை போல விடுதலைப்புலிகள் உளவாளி என்ற பட்டத்துடன் விலங்கிட்டது .

இனவாத இராணுவம் எத்தனை  தரம்  சேகர் விசாரணையில் நான் ஒரு விற்பனைப்பிரதிநிதி பல்தேசியக்கம்பனியின் ஒரு ஊழியன் இது நிஜம் என்று சொன்னாலும் ஏறாது இராணுவத்துக்கு இருப்பது அதிகம் போதையில் தானே !இனவாத காற்றில் இருந்து கொள் சில மாதம் விசாரணை இன்றி என்று அனுப்பிய இடம்தான் போகப்பரைச்சிறை .

விசாரணைக்கு கூப்பிடவும் இல்லை .விடியல்காலை பேப்பரும்  வரவில்லை வெளியார் பார்வையாளர்களாக வருகையும் பதிவு இல்லாமல் இருந்தான் சிறையில் சேகர்!

.தொடரும்.....

10 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

/////முன்னம் எழுதிய விதியோ ?இல்லை ஊடக ஆசையோ ?////
சொல்லவந்த செய்தியை இதைவிட ஏற்ற வார்த்தைகள் போட்டு
சொல்லிவிட முடியாது ..
அருமை அருமை..
வரலாற்றை தொடர்கிறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை... அருமை... வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

இந்தியாவுக்கு உடுக்கடிக்கின்றோம். கனடாவில் கொடிபிடிக்கின்றோம் என்று ஊடகத்துக்கு ஊறுகாய் போட்டும் கூட்டம் .

நம் தேசத்திற்கு கிடைத்த சாபம் !!//

நம் மக்களை நினைத்து கதறி அழுவதை தவிர ஏதும் செய்ய இயலா நிலையை நினைக்கும் போது கண்ணில் ரத்தம்தான் வருகிறது.

K said...

வலியுடன் நகர்கிறது தொடர்..!! தொடருங்கள் அண்ணா!!

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

/////முன்னம் எழுதிய விதியோ ?இல்லை ஊடக ஆசையோ ?////
சொல்லவந்த செய்தியை இதைவிட ஏற்ற வார்த்தைகள் போட்டு
சொல்லிவிட முடியாது ..
அருமை அருமை..
வரலாற்றை தொடர்கிறேன்//இனிய வண்ணம் மகி அண்ணாச்சி.நன்றி வருகைக்கும் பாராட்டுக் கருத்துக்களுக்கும்.

தனிமரம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை... அருமை... வாழ்த்துக்கள்...

23 August 2013 19:11 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இந்தியாவுக்கு உடுக்கடிக்கின்றோம். கனடாவில் கொடிபிடிக்கின்றோம் என்று ஊடகத்துக்கு ஊறுகாய் போட்டும் கூட்டம் .

நம் தேசத்திற்கு கிடைத்த சாபம் !!//

நம் மக்களை நினைத்து கதறி அழுவதை தவிர ஏதும் செய்ய இயலா நிலையை நினைக்கும் போது கண்ணில் ரத்தம்தான் வருகிறது.

23 August 2013 20:37 Delete//ம்ம் என்ன செய்வது இயலாமை நிலை மனோ அண்ணாச்சி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வலியுடன் நகர்கிறது தொடர்..!! தொடருங்கள் அண்ணா!!

24 August 2013 03:58 Delete//நன்றி ஜீவன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Unknown said...

இன்று வரை இதே நிலை தானே தொடர்கிறது நேசன்?ஊடகவியலாளர்களுக்கும்,மற்றும் புலிக்கு தீப்பெட்டி வாங்கிக் கொடுத்தாய் என்று கைதாகி சிறையில் ஆண்டுக் கணக்கில் வாடும் உறவுகளுக்கும்?///இன்று வரை,'சண்டே லீடரை' முடக்க பகீரதப் பிரயத்தனம் நடக்கிறது!

தனிமரம் said...

இன்று வரை இதே நிலை தானே தொடர்கிறது நேசன்?ஊடகவியலாளர்களுக்கும்,மற்றும் புலிக்கு தீப்பெட்டி வாங்கிக் கொடுத்தாய் என்று கைதாகி சிறையில் ஆண்டுக் கணக்கில் வாடும் உறவுகளுக்கும்?///இன்று வரை,'சண்டே லீடரை' முடக்க பகீரதப் பிரயத்தனம் நடக்கிறது!//நிஜம் தான் யோகா ஐயா.ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.