17 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-81


பூக்களைத்தான் பறிக்காதீங்க என்ற T.ராஜோந்திரன் ஒரு புறம் ,இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள் வைரமுத்துவும் எழுதிய வார்த்தைகள் எல்லாம். 

காதல் என்ற குளம் ஓடி கலியாணம் என்ற கடலில் கலக்கும் போது கடலில் மீன்கள் ,திமிங்கிலங்கள் ,சுறாக்கள் நண்டுகள் எல்லாம் வந்து சேரும் சமூகக்கட்டுப்பாடு என்ற வடிவில்!


 வர்க்க வர்ணாசிரமம் தலை எடுக்கும் .என்று தினேசிற்கு சொன்னபோது . "இல்லை மச்சான் பிரியா நல்ல பிள்ளை எங்க காதல் தோற்காது என்று .இரண்டு வருடம் இருவரும் பேசியகாதல் மொழிகள் அதிகம் வெளியில் தெரியாது .


. ஒரே பஸ்ஸில் 15 மைல் தொலைவில் இருந்து தினேஸ் வந்து பிரியாவுக்காக பஸ்சில் சீட் பிடித்த கதை பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த அன்புப்பரிசு காதல் கடிதம் என நீண்ட சூழ்நிலையில் .ராகுல் அப்போது படிச்சுப்படிச்சு சொல்லியது பிரியா உன்னை காய் வெட்டி விட்டுப் போய்விடுவாள் என்று.


 "இல்ல ராகுல் நீ தப்பாக புரிந்துகொண்டு இருக்கின்றாய் என்றான் " பிரியாவுக்கு ஆதரவாக பலர் மததீயை கலைத்தாயில் ஏற்றிய போதே தெரியும் இந்தக்காதல் வெற்றிகரமாக எடுத்த ஒரு திரைப்படம் தியேட்டரில் வந்தால் ஊத்திக்கொள்ளும் கதை சரியில்லை என்று அதுபோலவே பிரியா கடைசி நேரத்தில் பரீட்சைக்கு தனிவகுப்பு ஒரே பாடத்திற்கு இருவரிடம் போனால் தினேஸின் காதலை நிராகரித்துவிட்டு



 . ".பள்ளிக்கூட காதல் படலைவரைக்கும் என்று பஞ்சு டயலாக் பேசும் குமரன் சேருக்கும் தெரியும் இது தேறாத காதல் பொருளாதார உட்பிரிவுகள் என்று.


" பிரியா வெற்றிபெற்ற அறிவுச் சோலை மாணவி என்ற விளம்பரத்தின் பின்னே ஒரு முகம் தொலைந்தவன் தினேஸ் பற்றியாரும் பேசமாட்டார்கள். கடைசி நேரத்தில் அவன் ஒரு தலை ராகம் சங்கர் போல இருந்த நிலையை எந்த அறிவுச் சோலைப் பெண்கள் அறிவார்கள் ?


பரீட்சை நேரத்தில் மத்தீ எரிகின்ற நிலையில் மாணவர்கள் வரவு குறைந்துவிட்டது . நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து படிப்போம் என்ற போது ஏற்றிவைத்த தீ எரிந்துகொண்டு கலைக்கல்லூரி மூடிய போது தினேஸ் ஒரு மனநோயாளி போல ஆனான் . 


பிரியா பிரியா என்று அவன் விழியில் அருவி ஓடிய போது ராகுல் ."சொன்னான் அப்போதே இதைத் தானே சொன்னேன் ஆண்டாள் பாசுரம் படிக்கும் எனக்குத் தெரியும்டா நாரணன் நம்பி நீ இல்லைடா அவளுக்கு நம்பாத என்று 


" பரீட்சை எழுதாமல் தோற்றுப் போய் தொலைந்தவன் தினேஸ் நட்பு வட்டத்தில் இருந்து ஒதுங்கி முகம் பார்க்க வரவில்லை ராகுல் பதுளையை விட்டு வெளியேறும் போது.


 தினேஸ் விவகாரம் எல்லாம் தயாளன் அறிவான் .

அவன் விமலா பின் தொடர்ந்த காதல் வீட்டில் அவன் தாய் ராகுலிடம் அழுத சங்கதி எல்லாம் பலர் வெளியில் சொல்லாத நிஜம். வீட்டில் இரு சகோதரிகள் இருக்க தனிப்பிள்ளையாக இருந்து குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டியவன் விமலா பின்னால் எத்தனை தூரம் போனான் பஸ்சில் என்று சேர்ந்து போன ராகுல் அறிவான் !


.எடுத்துச் சொல்லியும் விமலா புரிந்துகொள்ளவில்லை. தயாளன் தந்தையின் உடல் நிலை வீட்டில் ஒரு மகனான தயாளனின் அவனின் பொறுப்பினை தன் காதல் முக்கியம் என்று விமலா அழுத சங்கதி எல்லாம் சொல்ல முடியாது .அவன் தாயிடம் என்பதால் தான் ராகுல் தயாளன் வீட்டுக்கு கடைசி நேரத்தில் சொல்லாமல் வந்த பயணம் 


. அவனின் கடமையை சரியாக செய்தவிடாத ஒரு மருமகள் எப்படி வீட்டுக்கு விளக்கேற்றும் மதினி ஆனால் தயாளன் தங்கைக்கு.? 


காலம் சில விட்டுக்கொடுப்பை புரட்சி என்றும் தனுக்குடித்தனம் என்று போகின்ற போது பேர்த்தி உறவு பாசம் தேடுகின்றது பாட்டி வீட்ட வா என்று ஒளிந்து கொண்டு பார்க்கும் போது காதலுக்கு கண் இல்லைத்தான் போலும்! 


விமலா ஆட்டோக்கிராப் போடுங்க ராகுல் என்ற போது இருந்த கோபம் அவன் கேட்டான் ? நீங்க கூட அவனின் தங்கைகள் பற்றி ஒரு சிந்தனையும் செய்யவில்லையே? அவர்களின் எதிர்காலம் எல்லாம் உங்க காதல் வலையில் சிக்குப்படும் என்று.


 நான் இதில் எழுதும் அளவுக்கு நட்பை யாசிக்கும் நண்பன் இல்லை. என்ற போது விமலா கேட்டால் ? உங்க பெரிய மச்சாள் எல்லாம் ஆட்டோக்கிராப் போட்டு இருக்கின்றாங்க. நீங்க மட்டும் பிகு பண்ணுவது ஏன்? அப்போது தயாளன் வந்தான் மச்சான் போடுடா எனக்காக நம் நட்புக்காக இது கூடச் செய்ய் மாட்டியா ?

 மததீ எரிகின்ற போது படிப்பு எல்லாம் பாழாப்போச்சு! எல்லாரும் குமரன் சேரிடம் போக ராகுலுக்கும் கல்பனாவுக்கும் வீட்டில் படிப்பித்தா வசந்தா டீச்சர்


. யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும் என்று பாடிய கவிஞன் யுத்தம் என்ற ஒன்று யாரும் இல்லை துணையாக அகதிகளுக்கு என்று எழுதாமல் போனான்!

 அப்படித்தான் சுகுமார் குமரன் சேரிடம் போக கல்பனாவும் ராகுலும் தான் இருவராக வசந்தா டீச்சரிடம் இறுதிவரை படித்தது. 

"தம்பி நீங்க போகும் போது கல்பனாவை வீட்டில் விட்டுப் போகங்க. தனியாக கல்பனா போகும் சூழ்நிலை இப்ப இல்லை எல்லாக்காடையர்களும் எங்க அறிவிச்சோலைப்பூக்கள் மீது புழுதிவாரியிறைக்கும் வார்த்தைகள் காதில் கேட்க கூச்சமாக இருக்கு என்ற போதுதான்"

 ராகுல் சரி டீச்சர் கூட்டிக்கொண்டு போய் விடுகின்றேன் என்றான். 

ஒரு வார்த்தை பேசமுடியாது இருந்தவனுக்கு பல வார்த்தைகள் பேச கலைமகள் நாவில் கீறிய நவராத்திரி சிவாஜி போல கல்பனாவோடு மாலை நேரத்தில் மலையக வீதியில் நடந்தான் ராகுல். 

மனதில் அவள் ஒரு ஜோடிபோல நினைத்தான் .ஆனால் சொல்லவில்லை. என்ன ராகுல் புத்தகம் மட்டும் தான் படிப்பீங்களா ? மற்றவர்கள் முகம் படிக்க மாட்டீர்களா? 

அப்படி இல்லை கல்பனா ஊருக்குப் போகணும் இங்க வந்து அதிகம் படிச்சாச்சு வாழ்க்கையை. என்ன உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது குழப்பமா? விரும்பினால் சொல்லுங்க கல்பனா இல்லை ராகுல் வீட்டில் ஒரு பிரச்சனை. தம்பி இன்னும் சாதரண தரம் பரீட்சைக்கூட முடிக்கவில்லை அதுக்குள் ஒரு காதல் புறா பிடிச்சிருக்கின்றார். அதுவும் கிறிஸ்தவக்குயில் படிச்சு ஒரு வேலை தேடணும் .வீட்டில் மூத்தவன் பொறுப்பை மறந்து திரியிறான் நான் சொன்னால் கேட்கின்றான் இல்லை. எனக்காக நீங்க பேசுவீங்களா அவனிடம் .

.உங்களிடம் அவன் கொஞ்சம் மரியாதை வச்சிருக்கின்றான். சரி பேசுகின்றேன் மனதில் தேவி சொன்னால் தேவன் என்ன செய்வது பாவம் எல்லாம் பலிபீடத்தில் போகும் வில்லன் பாத்திரம் கிடைக்குது. விரும்பிப்போகும் வீட்டில் ம்ம் வாங்க வீட்டை ஒரு கோப்பி குடித்துவிட்டுப் போகலாம் இல்லை கல்பனா?

தொடரும்.....

4 comments :

Seeni said...

pokattum thoothu.....

Unknown said...

ம்ம்ம் அருமை முடிய போகிறது என நினைக்க கவலைதான்...

தனிமரம் said...

pokattum thoothu.....//நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

ம்ம்ம் அருமை முடிய போகிறது என நினைக்க கவலைதான்...//ம்ம் நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.