16 April 2011

காற்றலையில் தேடுகிறேன்....-1

அதிகமான சினிமாப்பாடல்களை செவிமடுப்பதாலும் இலங்கை வானொலி கற்றுத்தந்த பாடல் ஆசிரியரே முதன்மையானவர்கள் என்பதாலும் பாடல் ஆசிரியர்கள் யார் என்று தேடுவது என் ஆர்வம் .
தமிழ்சினிமாப்பாடல் சமுத்திரத்தில் வாலி,வைரமுத்து முதலைகளைத் தாண்டி 1992முற்பகுதியில் இருந்து பலமீண்கள் படையாக கிளம்பியது தமிழ்சினிமாவிற்கு 
பாட்டு எழுதுவதற்கு .
இப்படியானவர்களில் இன்று அதிகம்பேர் நிலையை தேடினால் முகவரியில்லாமலும் ,அரிதாகவும் எழுதுகிறார்கள்!
பழனிபாரதி: இவர் 1995,96,97,இல் அதிக பாடல்கள் எழுதியவர் தமிழில் வைரமுத்துவின் அரியாசனையை அசைத்துப் பார்த்தவர் ஆங்கிலக்கலப்பை முன்னிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் உண்டு" அழகிய லைலா .."யாரது யாரது அங்கே"" ""மார்த்தாடு மார்த்தாடு"" என ரஜனி முதல் விஜய் என அதிகமானவர்களுக்கு பாடல் இயற்றியவர்.சினிமாவிற்கு வந்தாலும் சிற்றிதல்களில் பணிசெய்து கொண்டிருந்தவர் இப்போது இவரின் பாடல்கள் குறைந்து அடையாளம் இல்லாமல் போய்விட்டாரோ ! 
என எண்ணத்தோன்றுகிறது. முன்னர் பாடல் பேழைகளில் இயற்றியவர் பெயர் பதிவு செய்யப்படும் இப்போது இனையத்தில் அவ்வாறு வருவது அரிதாகியுள்ளது.
புதிய இசை அமைப்பாளர்கள் இவரைப்பயன் படுத்துவதில்லையா?
குறுந்தாடி பழனிபாரதி ஓதுங்கிவிட்டாரா?
அறிந்தவர்கள் கூறுங்கள்.
இவரின் கவிதைகள் நூல்களாகவும்,வாரப்பத்திரிகைகளிலும் வருகிறது.""காதலின் பின்கதவு "இவரின் புதியவரவு என நான் செல்லும் புத்தக்கடை நண்பர் நேற்று என்னிடம் தந்தார்.
இன்னும் படிக்கவில்லை.அவரின் பாடல்கள் நினைவில் வருகின்றது பதிவு  இடுவதற்கு
மீளமுடியவில்லை.பெரும்புள்ளி படத்தில் விக்ரமின் அறிமுகத்தால் திரையுலகில் நுழைந்தாலும் சுந்தர்.c இன் உள்ளத்தை அள்ளித்தா படமே இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபல்யப்படுத்தியது .
பலபடங்களுக்கு முழுப்பாடலும் எழுதியவர்
இன்று சோபிக்க முடியாமல் இருப்பது எதனாள்!
!தொலைவினிலே வாணம் தரை மேல் நானும்"" கோடிஸ்வரன் படப்பாடல் இன்னும் ஓலிக்கிறது!
தேவா,இசையானி,யுவன் இவரை அதிகம் பயன்படுத்தியவர்கள்.
அரவிந்தன் படத்தில் "ஆல்த பெஸ்ட்" பாடல் கவித்துவமானது ஆங்கிலம் கலந்தாலும்.
தான் காலத்திற்கு தேவையான மாதிரி பாடல் இயற்றுகின்றேன் என்று ஓரு பேட்டியில் கூறியிருந்தார்!   
                   ........-----தொடரும் 

.

No comments :