25 April 2011

யாழ்தேவியும் என் பயணங்களும்-1

  வாழ்க்கைப் பயணத்தில் நான் அதிகம் பிரயாணம் செய்வது புகையிரதத்தில் முன்னர் தாயகத்தில் ரயில் பயணம் என்றாள் அது தனிக்கதை!  சுவாரசியத்திற்கு குறைசல் இல்லை ரஜனி படத்தைப்போல!
  கொழும்பில் இருந்து பணி நிமிர்த்தம் வவுனியா போவது யாழ் தேவியில் தான்!..
அப்பு ஆச்சிகள் காங்கேசந்துறைவரை பயணம் போன யாழ்தேவி  யுத்த சாரதி பாதை மாற்றியதால் 1990 இன் பின் வவுனியாவுடன் தரையிறங்கி மக்களை மற்ற இடங்களுக்கு நடக்க விட்டது விதி எழுதிய சாசனம்!...
..
இரவுப்பயணங்களையே  அதிகம் நாடுவேன் கொழும்பில் இருந்து இரவு 10மணியலவில் புறப்படும் யாழ்தேவி என்ற கணீர் அறிவிப்புடன் ஆரம்பித்தால் அதிகாலை 5மணி 25 நிமிடம் அளவில். வவுனியா வந்தடையும்.ஞாயிறு இரவு அதிகமானவர்கள் அரசபணிகள்,தனியார் பணியாளர்கள் ,வைத்திய சேவைகாரணமாக கொழும்பு வந்தவர்கள் மீண்டும்  இருப்பிடம் செல்வதும் திரும்புவதுமாக களைகட்டும் .
..
வவுனியா இரானுவக்கட்டுப்பாட்டில் இருந்தது அங்கே தங்குவதற்கு அனுமதிப்பத்திரம் என்ற ஒன்று நடைமுறையில் இருந்தது அதுதான் உயிர்காக்கும் தோழன் நிரந்தர,தற்காலிக,3மாதம்,ஒரு வாரம்,ஒரு நாள்,  என்ற  அட்டவணைக்கு ஏற்ப இரானுவம் செயல்படுத்தும் அனுமதிப்பத்திரத்திற்கு  வரிசையில் காத்திருக்கனும் அதிகாலையில் நித்திரை ஒருபுறம் இவர்களின் இம்சை ஒருபுறம் கொடுமை.ரயில் பயணத்தின் களைப்பு மற்றொருபுறம் எவ்வளவு துயரமான நாட்கள் எனினும்....
        என்னுடன் மூவின நண்பர்களும் சிலவேளைகளில் கூடவருவினம் கூத்தும் கலகலப்பாகவும் இரவுப்பயணம்  வவுனியா வரை  கொண்டாட்டம்தான்!
..குருனாகல் இறங்கும் ஒரு நண்பன் எங்களுக்கு தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து அவர் தந்தை கொண்டு வந்து காத்திருந்து தரும் செவ்விளனீர் குழையை  வெட்டித்தந்து அருந்தும் வரை யாழ்தேவி காத்திருக்கும் இதமான அந்த இரவுப்பொழுதில் மறுநாள் வயிறுப்போக்கு சுலபமாக்குவதில் அந்த வெவ்விளனீர் பங்கு அதிகமாக இருக்கும்!'!

  கொழும்பில் இருந்து பணி நிமித்தம் வவுனியா போவது யாழ் தேவியில் தான்!..
அப்பு ஆச்சிகள் காங்கேசந்துறைவரை பயணம் போன யாழ்தேவி  யுத்த சாரதி பாதை மாற்றியதால் 1990 இன் பின் வவுனியாவுடன் தரையிறங்கி மக்களை மற்ற இடங்களுக்கு நடக்க விட்டது விதி எழுதிய சாசனம்!...
.
..
வவுனியா இரானுவக்கட்டுப்பாட்டில் இருந்தது அங்கே தங்குவதற்கு அனுமதிப்பத்திரம் என்ற ஒன்று நடைமுறையில் இருந்தது அதுதான் உயிர்காக்கும் தோழன் நிரந்தர,தற்காலிக,3மாதம்,ஒரு வாரம்,ஒரு நாள்,  
        என்னுடன் மூவின நண்பர்களும் சிலவேளைகளில் கூடவருவினம் கூத்தும் கலகலப்பாகவும் இரவுப்பயணம்  வவுனியா வரை  கொண்டாட்டம்தான்!
..குருனாகல் இறங்கும் ஒரு நண்பன் எங்களுக்கு தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து அவர் தந்தை கொண்டு வந்து காத்திருந்து தரும் செவ்விள்னீர் குழையை  வெட்டித்தந்து அருந்தும் வரை யாழ்தேவி காத்திருக்கும் இதமான அந்த இரவுப்பொழுதில் மறுநாள் வயிறுப்போக்கு சுலபமாக்குவதில் அந்த வெவ்விளனீர் பங்கு அதிகமாக இருக்கும்!'!
இரவுப்பயணம் எப்போதும் ஒவ்வொரு கதைகளையும்  . பல மெளனம் சித்திரங்களையும் விதைத்துச் செல்கிறது.
..பொல்காவெல இது யாழ்தேவியும் உடரட்டமெனிக்கேயும் கைகுழுக்கும் சாமாதான ஒப்பந்தம் இங்கு கூவிவிற்கும் சூடான கோப்பியும் சுண்டல் .சோளம் மெரினாச் சுண்டலுக்கு ஈடாகாது!வழிப்பறி கொள்ளையர் கைவரிசை காட்டும் இந்த நிறுத்தம் கல்லுண்டாய் வெளி ஞாபகம் வரும் கூடவே! 
பெருண்பான்மை வெறியர்கள் தமிழர் நித்திரையில் இருக்கும்போது  நகைகள்,பணம்கள்.பறித்துக்கொண்டு ஓடுவதையும் ,ஒன்றும் செய்யமுடியாத கையாலகாத நிலையை என்னி குமுறுவதைத் தவர நானும் தமிழன் என்ன செய்யமுடியும்! இங்கே விற்கப்படும் கோப்பியுள் யாராவது முகம் தெரியாதவர்கள் நித்திரைகுழுசை,மயக்க
மருந்து கலந்து கொடுத்து தமது கைவரிசையை காட்டிவிடுவார்கள்!நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!யாழ்தேவியின் தடம் கல்கமுவ இடத்தில் தரைதட்டினால் அங்கே கமகமவாசத்துடன் விற்கப்படும் தொதல்(இதற்கு தமிழ்ப்பெயர் சக்கரை கழி என நினைக்கிறேன் நிச்சயம் இல்லை) நல்ல சுவையானது!கல்கமுவ தாவடிப்புகையிலையை அழகான சுருட்டு சுற்றி அழகாய் பெட்டியில் அடைத்து பெட்டிச்சுருட்டாக தென்பகுதியில் விற்கப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன் இப்படி அடிவரும் யாழ்தேவி தலாவ  ஊடாக அனுதாபுரம் வந்தால் அதிகமானவர்கள் இறங்கினால் இந்த இராட்சியம் வரை பெருன்பான்மை போய்விடுவார்கள்  பின் வருபவர்கள் நம்மவர் ரயில் ஆசனத்தில் நீண்ட  


இடத்தைப்பிடித்து நித்திரை கொள்ளமுடியும்!இவையாவும் இரண்டாம் பெட்டியில் பயணம் செய்பவர்களின்  அன்றாட நிகழ்வுகள். அப்படியாடிவரும் யாழ்தேவி மதவாச்சி தாண்டி  பூனாவ ஊடாக இரைட்டப் பெரியகுளம்தாண்டி வவுனியா அடையும்போது என் வானொலி  பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை கேட்கதயாராகிவிடும்!
கதைகளையும்  . பல மொனமான சித்திரங்களையும் விதைத்துச் செல்கிறது.
..பொல்காவெல இது யாழ்தேவியும் உடரட்டமெனிக்கேயும் கைகுழுக்கும் சாமாதான ஒப்பந்தம் இங்கு கூவிவிற்கும் சூடான கோப்பியும் சுண்டல் .சோளம் மெரினாச் சுண்டலுக்கு ஈடாகாது!வழிப்பறி கொள்ளையர் கைவரிசை காட்டும் இந்த நிறுத்தம் கல்லுண்டாய் வெளி ஞாபகம் வரும் கூடவே! 
பெருண்பான்மை வெறியர்கள் தமிழர் நித்திரையில் இருக்கும்போது  நகைகள்,பணம்கள்.பறித்துக்கொண்டு ஓடுவதையும் ,ஒன்றும் செய்யமுடியாத கையாலகாத நிலையை என்னி குமுறுவதைத் தவர நானும் தமிழன் என்ன செய்யமுடியும்! இங்கே விற்கப்படும் கோப்பியுள் யாராவது முகம் தெரியாதவர்கள் நித்திரைகுழுசை,மயக்க
மருந்து கலந்து கொடுத்து தமது கைவரிசையை காட்டிவிடுவார்கள்!நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!யாழ்தேவியின் தடம் கல்கமுவ இடத்தில் தரைதட்டினால் அங்கே கமகமவாசத்துடன் விற்கப்படும் தொதல்(இதற்கு தமிழ்ப்பெயர் சக்கரை கழி என நினைக்கிரேன் நிச்சயம் இல்லை) நல்ல சுவையானது!கல்கமுவ தாவடிப்புகையிலையை அழகான சுருட்டு சுற்றி அழகாய் பெட்டியில் அடைத்து பெட்டிச்சுருட்டாக தென்பகுதியில் விற்கப்படுவதை நேரில் பார்த்திருக்கிரேன்!இப்படி அடிவரும் யாழ்தேவி தலாவ  ஊடாக அனுதாபுரம் வந்தால் அதிகமானவர்கள் இறங்கினால் இந்த இராட்சியம் வரை பெருன்பான்மை போய்விடுவார்கள்  பின் வருபவர்கள் நம்மவர் ரயில் ஆசனத்தில் நீண்ட இடத்தைப்பிடித்து நித்திரை கொள்ளமுடியும்!இவையாவும் இரண்டாம் பெட்டியில் பயணம் செய்பவர்களின்  அன்றாட நிகழ்வுகள். அப்படியாடிவரும் யாழ்தேவி மதவாச்சி தாண்டி  பூனாவ ஊடாக இரைட்டப் பெரியகுளம்தாண்டி வவுனியா அடையும்போது என் வானொலி  பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை கேட்கதயாராகிவிடும்!

2 comments :

ஹேமா said...

மனதை விட்டகலாத நீண்ட பயணம்.அனுபவித்த எழுத்து.
எப்போதுமே பாதுகாப்பில்லாத பயணம் தமிழரைப் பொறுத்தமட்டில்.
கோண்டாவில் புகயிரத நிலையம் எரிக்கப்பட்ட பின்னர்தானே இடைநிறுத்தப்பட்டது பயணங்கள்.இன்னும் அந்தப் பயணங்கள் அகதி வாழ்வு வரை !

தனிமரம் said...

நன்றி தோழி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்.  சிரமம் பாராமல் ஊக்கிவிற்பதற்கு நன்றி.