கிராமங்களில் இருக்கும் இயல்பை .நகரத்தில் காணுவது மிகவும் கடினம் .
இப்படியான இயற்கைத்தாய் வாழும் கிராமம் .எல்லாம் யுத்த அரங்கில் கிழித்தெறியப்பட்ட மேடைகளைப்போலகாட்சி கொடுத்தது எங்கள் கிராமம் !
அதிகமானவர்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த பூமி. குட்டி போட்ட வாழையைப்போல பிரித்து எடுக்கப்பட்டு பல திக்கில் .
பலர் வன்னியில் அப்படி இருந்தும் பாட்டி வீட்டை இழந்து வேற வீட்டில் இருந்தா !
மூன்று தலைமுறையாக வாழ்ந்த வீடு கல்லும் மண்ணும் கலந்து கட்டினாலும் அதில் பேரம்பலத்தாரின் கண்ணீரும் வியர்வையும் முக்கியமாக கட்டிய மனைவியை ஊரில் விட்டுட்டு பலமைல் தூரம் போய் வியாபாரம் செய்து சேர்த்த பணம் .
.அந்தப்பணம் இருந்தும் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துக் கணவன்களுக்குத் தான் புரியும் கட்டிய மனைவியைப் பிரிந்து வாழும் வலிகள்!
இதைப்போல பொருள் ஈட்டச்சென்று இருக்கும் வெளிநாட்டுக் கணவன்கள் தவிப்புக்கள் போல செல்லன் மாமாவும் இருந்தார் பல காலம் இந்த வீட்டில் சரோஜா மாமியைப் விட்டுப் பிரிந்து பதுளையில்.இரண்டாவது தலைமுறையாக
மூன்று தலைமுறையின் சுகதுக்கங்கள் கண்ட எங்கள் வீடு
.குண்டு போட்டு அழித்ததால் அடியோடு பெயர்க்கப்பட்டு அத்திவாரம் மட்டும் இருந்திச்சு .
அதைப் பார்த்தவர்கள் இன்றுவரை அந்த பங்கஜம் பாட்டியும் ,செல்வம் மாமா மற்றும் ராகுலும் தான் .அந்தக்குடும்பத்தில் !
மற்றவர்கள் மறந்தும் ஊருக்குப் போகவில்லை ,இடம்பெயர்ந்தும் ,புலம் பெயர்ந்தும் விட்டதால்!
பாட்டி ஓடிவரும் போது பேர்த்திமாருக்கு என சேர்த்து வைத்த நகைகள் எல்லாம் கொண்டுவர முடியாத நிலையில் .
தங்கமணிமாமாவின் மகள்களுக்கும் செல்வன் மாமாவின் மகளுக்கும் அனோமாயை அந்தப்பாட்டி அகிலா என்று தான் அப்போது அழைத்து வந்தா .
.எப்போதும் ஒருநாள் ஊர் கோயில் தேருக்கு வருவினம் என்ற ஆசையில் சேர்த்து வைத்த பல ஜோடிக்காப்பு ,மல்லிகை மொட்டுச் சங்கிலிகள் ,அட்டியல்கள் ,காதணிகள் எல்லாம் செம்பில் செய்த தூக்குச்சட்டியில் போட்டு .
அதனை ஒரு தண்ணி அள்ளும் வாளியில் போட்டு .
அதை ஒரு சாக்கினில் போட்டு .
சாக்கினுல் வளவுக்கு மதில் கட்ட வைத்திருந்த அரிகல் உள்ளே போட்டு .
எல்லாத்தையும் போட்டு வைத்த இடம் தான் .
சின்னவர்கள் முதல் பெரியவர்கள் எல்லாரையும் தன் ஊற்றினால் .
ஊத்தை போக்கிய கிணற்றில்.
இலங்கையில் வடக்கில் இருக்கும் தீவுகள் கிணறுகள் ஆய்வு செய்தால் பலது உப்புத்தண்ணீரும் நல்ல தண்ணீரும் தான் இருக்கும் .
சிலது ஆழம் அதிகம் நிலாவரைக்கிணறு போல!
எங்கள் ஊர் கிணற்றுக்கும் சில வழக்குகளும் ,மோதல்களும் வழிவழியாக நடந்து வந்தது .
அப்போது எங்கள் ஊரில் ஒரு தீர்ப்புச்சொல்லியவர் தியாகி திலீபன்.
.வரலாற்றில் விலக்குத் தீர்த்தவர் வரலாறு நேர்மையில்' எழுதும் எழுத்தாளர்கள் எழுதினால் .
அதில் ஒரு புள்ளியாக எங்கள் ஊர் கிணறு எப்போதும் இருக்கும் .
அதை நேர்மையில் எழுதனும். நடுவன் அரசுக்கு வாக்காளத்து வாங்க வரலாற்றை மாற்றி எழுதும் விஸ்ணுபுரத்தவர் போல இருக்கக்கூடாது !
முழுச்சோற்றில் பூசனிக்காயைப் புதைக்க நினைத்தாலும் !
முகம் தெரிந்தவர்கள் மறந்து போவார்கள் என்று எண்ணுவது செவிலிக்கதை வாழும் காலத்திலும் பலர் பேரன்களாக வந்தவர்கள் ,பார்த்தவர்கள் ,வளர்ந்தவர்கள் பிற் காலத்தில் நாகரிக வளர்ச்சியில் இணையத்திலும் கிறுக்குவார்கள் என்பதைப் போலத்தான்
. அப்படித்தான் ராகுலும் சின்னத்தாத்தாவும் பங்கஜம் பாட்டியின் சொத்தை எல்லாம் வீட்டுக்கிணற்றில் போட்டுவிட்டு.
அதற்கு மேல் மாட்டுக்கொட்டகையில் கிடந்த உரிக்காத தேங்காய் எல்லாம் போட்டுவிட்டு காத்திருந்தோம்
!.நேவிக்காரன் வெளிக்கிட்ட போது!
அதன் மேல் பூவரசம் சருகையும் ,தென்னோலையையும் போட்டு விட்டு ஓடிவந்தோம்
அது ரகசியம் மூவருக்குத் தான் தெரியும் கிணற்றைப்பார்க்கும் வெளியிடத்தவர்கள் பாழடைந்த கிணறு என்று விட்டு விடுவார்கள் .
வீட்டில் இருக்கும் பொருட்ளை சூறையாடும் கூட்டங்கள் .எரிகிறவீட்டில் பிடுங்குவது இலாபம் !!என எடுத்துக்கொண்டு போவோர் .
கிணற்றைத் தோண்டமாட்டார்கள் என்று பங்கஜம் பாட்டி கணித்து இருந்தா .
தான் நெல்லுவித்தும் ,ஆடுகள் ,மாடுகள் வித்துக் கஸ்ரப்பட்டுச் சேர்த்த காசில் தன் பேர்த்திகளுக்குச் செய்த நகைகள் களவு போகாது .
எங்கள் குலதெய்வம் அம்மன் காக்கும் என்ற ஆதங்கத்தோடுதான் முதல்நாள் இரவு கிணற்றுக்குள் போட்டுவிட்டோம் .
ஒவ்வொரு திக்கில் யாராவது உயிரோடு இருந்தால்!
இதை மறக்க வேண்டாம் என்றுதான் பங்கஜம் பாட்டி பேரன் ராகுலையும் இதில் ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லி வைத்ததை .
பதுளை வந்து சென்ற சின்னத்தாத்தா சொல்லியது செல்லன் மாமாவுக்கு .
.அதனை எடுத்துக் கொண்டு வரவழி தெரியாது நின்ற போதுதான் ! பாட்டி மறந்து போயிருக்கலாம்
சந்திரிக்கா அரசில் பலர் வன்னியில் இருந்து ஊருக்கு விரும்பினால் போகலாம் என்ற நிலையில் .
முத்தாச்சிப்பாட்டி வெளிக்கிட்டதை சாட்டாக வைத்து.பாட்டி மறந்து போயிருக்கலாம் என்றுதான் செல்லன் மாமா ஓம் என்றது. அதன் பின்புதான்
மூவரும் ஊருக்குப் போனது .போனகாரியம் தெய்வ அருளினால் ஒன்றும் களவு போகவில்லை .
போட்டது சில வருடம் என்றாலும் யாரும் கிணற்றுக்குள் பார்க்கவில்லை .
ராகுல் நீந்தும் அளவுக்கு ஆற்றில் பழகியிருந்த படியால் .செல்லன் மாமாவோடு இறங்கித் தேடியதில் கிடைத்தது. நகைகள் .
அதை பாட்டி செல்லன் மாமாவிடமே எல்லாத்தையும் இரவு கொடுத்தா .
அடுத்த நாள் அங்கிருந்து பாட்டியைப் பிரிந்து வர இருந்த. முதல்நாள் இரவின் போதுதான் .!
பாட்டியிடம் செல்லன் மாமா சொன்னது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான் ராகுல்.
புலம்பெயர்ந்து போன செல்வன் மாமா மகள் அனோமா ராகுலுக்குப் போட்ட கடிதங்களையும் , விளம்பர தபால் அட்டைகளையும் அவனிடம் கொடுக்கவில்லை என்றும்.
படிக்கின்றவயதில் அவன் போக்கில் விடமுடியாது மச்சான் என்னிடம் பொறுப்புத் தந்தவர் என்று சொல்லிய போதுதான் தெரியும் .
தன் அறியாமையால் மீண்டும் அனோமாவைப் பற்றி தவறாக எண்ணி விட்டோமே! என்று.
எப்படியும் அனோமாவை பாட்டியோடு சேர்க்க வழி கிடைக்கும்
என்ற நினைவில் உறங்கியவனை !
.
அதிகாலையில் எழுப்பிவிட்டா பங்கஜம் பாட்டி . எழுப்பியதும் சொல்லியது தான் கோப்பியைவிட சுட்டது வாயில் இல்லை மனசில்!
..தொடரும்!
/////////////////////////////////
நிலாவரை கிணறு -யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கிணறு!
இப்படியான இயற்கைத்தாய் வாழும் கிராமம் .எல்லாம் யுத்த அரங்கில் கிழித்தெறியப்பட்ட மேடைகளைப்போலகாட்சி கொடுத்தது எங்கள் கிராமம் !
அதிகமானவர்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த பூமி. குட்டி போட்ட வாழையைப்போல பிரித்து எடுக்கப்பட்டு பல திக்கில் .
பலர் வன்னியில் அப்படி இருந்தும் பாட்டி வீட்டை இழந்து வேற வீட்டில் இருந்தா !
மூன்று தலைமுறையாக வாழ்ந்த வீடு கல்லும் மண்ணும் கலந்து கட்டினாலும் அதில் பேரம்பலத்தாரின் கண்ணீரும் வியர்வையும் முக்கியமாக கட்டிய மனைவியை ஊரில் விட்டுட்டு பலமைல் தூரம் போய் வியாபாரம் செய்து சேர்த்த பணம் .
.அந்தப்பணம் இருந்தும் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துக் கணவன்களுக்குத் தான் புரியும் கட்டிய மனைவியைப் பிரிந்து வாழும் வலிகள்!
இதைப்போல பொருள் ஈட்டச்சென்று இருக்கும் வெளிநாட்டுக் கணவன்கள் தவிப்புக்கள் போல செல்லன் மாமாவும் இருந்தார் பல காலம் இந்த வீட்டில் சரோஜா மாமியைப் விட்டுப் பிரிந்து பதுளையில்.இரண்டாவது தலைமுறையாக
மூன்று தலைமுறையின் சுகதுக்கங்கள் கண்ட எங்கள் வீடு
.குண்டு போட்டு அழித்ததால் அடியோடு பெயர்க்கப்பட்டு அத்திவாரம் மட்டும் இருந்திச்சு .
அதைப் பார்த்தவர்கள் இன்றுவரை அந்த பங்கஜம் பாட்டியும் ,செல்வம் மாமா மற்றும் ராகுலும் தான் .அந்தக்குடும்பத்தில் !
மற்றவர்கள் மறந்தும் ஊருக்குப் போகவில்லை ,இடம்பெயர்ந்தும் ,புலம் பெயர்ந்தும் விட்டதால்!
பாட்டி ஓடிவரும் போது பேர்த்திமாருக்கு என சேர்த்து வைத்த நகைகள் எல்லாம் கொண்டுவர முடியாத நிலையில் .
தங்கமணிமாமாவின் மகள்களுக்கும் செல்வன் மாமாவின் மகளுக்கும் அனோமாயை அந்தப்பாட்டி அகிலா என்று தான் அப்போது அழைத்து வந்தா .
.எப்போதும் ஒருநாள் ஊர் கோயில் தேருக்கு வருவினம் என்ற ஆசையில் சேர்த்து வைத்த பல ஜோடிக்காப்பு ,மல்லிகை மொட்டுச் சங்கிலிகள் ,அட்டியல்கள் ,காதணிகள் எல்லாம் செம்பில் செய்த தூக்குச்சட்டியில் போட்டு .
அதனை ஒரு தண்ணி அள்ளும் வாளியில் போட்டு .
அதை ஒரு சாக்கினில் போட்டு .
சாக்கினுல் வளவுக்கு மதில் கட்ட வைத்திருந்த அரிகல் உள்ளே போட்டு .
எல்லாத்தையும் போட்டு வைத்த இடம் தான் .
சின்னவர்கள் முதல் பெரியவர்கள் எல்லாரையும் தன் ஊற்றினால் .
ஊத்தை போக்கிய கிணற்றில்.
இலங்கையில் வடக்கில் இருக்கும் தீவுகள் கிணறுகள் ஆய்வு செய்தால் பலது உப்புத்தண்ணீரும் நல்ல தண்ணீரும் தான் இருக்கும் .
சிலது ஆழம் அதிகம் நிலாவரைக்கிணறு போல!
எங்கள் ஊர் கிணற்றுக்கும் சில வழக்குகளும் ,மோதல்களும் வழிவழியாக நடந்து வந்தது .
அப்போது எங்கள் ஊரில் ஒரு தீர்ப்புச்சொல்லியவர் தியாகி திலீபன்.
.வரலாற்றில் விலக்குத் தீர்த்தவர் வரலாறு நேர்மையில்' எழுதும் எழுத்தாளர்கள் எழுதினால் .
அதில் ஒரு புள்ளியாக எங்கள் ஊர் கிணறு எப்போதும் இருக்கும் .
அதை நேர்மையில் எழுதனும். நடுவன் அரசுக்கு வாக்காளத்து வாங்க வரலாற்றை மாற்றி எழுதும் விஸ்ணுபுரத்தவர் போல இருக்கக்கூடாது !
முழுச்சோற்றில் பூசனிக்காயைப் புதைக்க நினைத்தாலும் !
முகம் தெரிந்தவர்கள் மறந்து போவார்கள் என்று எண்ணுவது செவிலிக்கதை வாழும் காலத்திலும் பலர் பேரன்களாக வந்தவர்கள் ,பார்த்தவர்கள் ,வளர்ந்தவர்கள் பிற் காலத்தில் நாகரிக வளர்ச்சியில் இணையத்திலும் கிறுக்குவார்கள் என்பதைப் போலத்தான்
. அப்படித்தான் ராகுலும் சின்னத்தாத்தாவும் பங்கஜம் பாட்டியின் சொத்தை எல்லாம் வீட்டுக்கிணற்றில் போட்டுவிட்டு.
அதற்கு மேல் மாட்டுக்கொட்டகையில் கிடந்த உரிக்காத தேங்காய் எல்லாம் போட்டுவிட்டு காத்திருந்தோம்
!.நேவிக்காரன் வெளிக்கிட்ட போது!
அதன் மேல் பூவரசம் சருகையும் ,தென்னோலையையும் போட்டு விட்டு ஓடிவந்தோம்
அது ரகசியம் மூவருக்குத் தான் தெரியும் கிணற்றைப்பார்க்கும் வெளியிடத்தவர்கள் பாழடைந்த கிணறு என்று விட்டு விடுவார்கள் .
வீட்டில் இருக்கும் பொருட்ளை சூறையாடும் கூட்டங்கள் .எரிகிறவீட்டில் பிடுங்குவது இலாபம் !!என எடுத்துக்கொண்டு போவோர் .
கிணற்றைத் தோண்டமாட்டார்கள் என்று பங்கஜம் பாட்டி கணித்து இருந்தா .
தான் நெல்லுவித்தும் ,ஆடுகள் ,மாடுகள் வித்துக் கஸ்ரப்பட்டுச் சேர்த்த காசில் தன் பேர்த்திகளுக்குச் செய்த நகைகள் களவு போகாது .
எங்கள் குலதெய்வம் அம்மன் காக்கும் என்ற ஆதங்கத்தோடுதான் முதல்நாள் இரவு கிணற்றுக்குள் போட்டுவிட்டோம் .
ஒவ்வொரு திக்கில் யாராவது உயிரோடு இருந்தால்!
இதை மறக்க வேண்டாம் என்றுதான் பங்கஜம் பாட்டி பேரன் ராகுலையும் இதில் ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லி வைத்ததை .
பதுளை வந்து சென்ற சின்னத்தாத்தா சொல்லியது செல்லன் மாமாவுக்கு .
.அதனை எடுத்துக் கொண்டு வரவழி தெரியாது நின்ற போதுதான் ! பாட்டி மறந்து போயிருக்கலாம்
சந்திரிக்கா அரசில் பலர் வன்னியில் இருந்து ஊருக்கு விரும்பினால் போகலாம் என்ற நிலையில் .
முத்தாச்சிப்பாட்டி வெளிக்கிட்டதை சாட்டாக வைத்து.பாட்டி மறந்து போயிருக்கலாம் என்றுதான் செல்லன் மாமா ஓம் என்றது. அதன் பின்புதான்
மூவரும் ஊருக்குப் போனது .போனகாரியம் தெய்வ அருளினால் ஒன்றும் களவு போகவில்லை .
போட்டது சில வருடம் என்றாலும் யாரும் கிணற்றுக்குள் பார்க்கவில்லை .
ராகுல் நீந்தும் அளவுக்கு ஆற்றில் பழகியிருந்த படியால் .செல்லன் மாமாவோடு இறங்கித் தேடியதில் கிடைத்தது. நகைகள் .
அதை பாட்டி செல்லன் மாமாவிடமே எல்லாத்தையும் இரவு கொடுத்தா .
அடுத்த நாள் அங்கிருந்து பாட்டியைப் பிரிந்து வர இருந்த. முதல்நாள் இரவின் போதுதான் .!
பாட்டியிடம் செல்லன் மாமா சொன்னது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான் ராகுல்.
புலம்பெயர்ந்து போன செல்வன் மாமா மகள் அனோமா ராகுலுக்குப் போட்ட கடிதங்களையும் , விளம்பர தபால் அட்டைகளையும் அவனிடம் கொடுக்கவில்லை என்றும்.
படிக்கின்றவயதில் அவன் போக்கில் விடமுடியாது மச்சான் என்னிடம் பொறுப்புத் தந்தவர் என்று சொல்லிய போதுதான் தெரியும் .
தன் அறியாமையால் மீண்டும் அனோமாவைப் பற்றி தவறாக எண்ணி விட்டோமே! என்று.
எப்படியும் அனோமாவை பாட்டியோடு சேர்க்க வழி கிடைக்கும்
என்ற நினைவில் உறங்கியவனை !
.
அதிகாலையில் எழுப்பிவிட்டா பங்கஜம் பாட்டி . எழுப்பியதும் சொல்லியது தான் கோப்பியைவிட சுட்டது வாயில் இல்லை மனசில்!
..தொடரும்!
/////////////////////////////////
நிலாவரை கிணறு -யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கிணறு!
126 comments :
இரவு வணக்கம்,நேசன்!படித்து விட்டு.................."உப்புமடச் சந்தி"யிலும் பதிவு!
இரவு வணக்கம் யோகா ஐயா! நலம் தானே! ம்ம் வாரேன்!
கனக்கிறது.எப்படித் தாங்கிக் கொள்கிறீர்களோ?
வாழ்க்கையில் பலவிடயத்தை தாண்டினால்தானே ஆன்மீகப்பக்கம் போகலாம் என்று சொல்லுவார் என் குரு!
ஆன்மீகப் பக்கம் போவது கட்டங்கள் பல தாண்ட வேண்டும் தான்!இன்னும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகு(இருந்தால்)நான் போகலாம்!
ஆன்மீகப் பக்கம் போவது கட்டங்கள் பல தாண்ட வேண்டும் தான்!இன்னும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகு(இருந்தால்)நான் போகலாம்!
25 May 2012 11:17 // ஹீ நான் 27 வயதில் போக வெளிக்கிட்டாச்சு!
ஒருவரையும் காணவில்லையே?அந்தப் பாடல்,யேசுதாசின் கணீரென்ற குரல்.இன்றைக்கும்,என்றைக்கும் கேட்கலாம்!
உண்மையில் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்றால் பலருக்கு முடியாது.ஆசா பாசங்கள் இருந்தால் சிரமமே!
ஒருவரையும் காணவில்லையே?அந்தப் பாடல்,யேசுதாசின் கணீரென்ற குரல்.இன்றைக்கும்,என்றைக்கும் கேட்கலாம்!
25 May 2012 11:19 //ம்ம் அவர் குரல் எப்போதும் கேட்களாம்
ஒருவரையும் காணவில்லையே?// எல்லாரும் பிஸியா இருக்கும் போல!
உண்மையில் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்றால் பலருக்கு முடியாது.ஆசா பாசங்கள் இருந்தால் சிரமமே!
25 May 2012 11:21 //உண்மைதான் என்ன செய்வது எல்லாருக்கும் அது முடியாது!ம்ம்ம் விதி/வினை விடாது.
கலை அங்கே நின்றாவே?
ரெவரி லீவில் போயிருக்கிறார்.கவிதாயினி பதினோரு மணி ஆகும்!
கலை அங்கே நின்றாவே?// நான் போனேன் கானவில்லை தூக்கம் வந்து இருக்கும் வேலைகடிணம் தானே ஐயா!
இரவு வணக்கம்,மருமகளே!என்ன,அண்ணி பொலம்பினாங்களா?ஹி!ஹி!ஹி!!!!நான் கவனிக்கிறேல்லயாம்.மகள்,மருமகளுன்னா உசிரை வுட்டுடுவேனாம்,பாத்தீங்களா?
ரெவரி லீவில் போயிருக்கிறார்.கவிதாயினி பதினோரு மணி ஆகும்!// ஓம் ரெவெரி சொன்னார் க்விதாயினி வ்ரும் போது நான் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நாளை இரண்டு பால்க்கோப்பி கொடுக்கலாம் என இருக்கின்றேன் கொஞ்சம் மாத முடிவில் புது வேலை பொறுப்பு ஏற்கோணும் ஐயா!
இரவு வணக்கம் மாமா அண்ணா ...
வலி புரிகிறது அண்ணா
Yoga.S. said...
இரவு வணக்கம்,மருமகளே!என்ன,அண்ணி பொலம்பினாங்களா?ஹி!ஹி!ஹி!!!!நான் கவனிக்கிறேல்லயாம்.மகள்,மருமகளுன்னா உசிரை வுட்டுடுவேனாம்,பாத்தீங்களா?///
பார்த்தேன் மாமா .....அது தானே உண்மையும் ....
இங்க எத்தினை பால்கோப்பி குடுத்தாலும் குடிக்கிறதுக்கு ஆளிருக்கு!
வாங்கோ இளவரசியாரே நலமா! என்னது வலியா அடியாத்தி நாத்தனார் கலா வருவா கறுப்புப்பட்டியோடு!ஹீஈஈஈஈஈஈஈ
சரி அத(கலா அண்ணி)விடுங்க!சாப்பிட்டாச்சா?இன்னைக்கு என்ன வெள்ளி ஸ்பெஷல்?
தமிழ் மண வோட்டில்
No Such Post எண்டு வருதே ....என்னாச்சி எனக்கு தன் பிரச்சனையா
இங்க எத்தினை பால்கோப்பி குடுத்தாலும் குடிக்கிறதுக்கு ஆளிருக்கு!
25 May 2012 11:36 // ஆஹா நன்றி முதல் பால்க்கோப்பி பாரிஸ் நேரம் 11 மணிக்கு அடுத்தது கலை பொறுப்பாக வாத்து மேய்க்கும் மாலை5.00மணியில் இருந்து அண்ணா அடுப்படியில் வாத்து மேய்க்கணும் நாளை இரவு!ஹீஈஈஈஈஈஈ
மாமா இண்டைக்கு பீர்க்கங்காய் சாம்பார் வைத்து கீரை போரியல் செய்தேன் ....
நீங்க சாப்டீங்களா மாமா ,,,
அண்ணா நீங்க சாப்டாச்சா...
தமிழ் மண வோட்டில்
No Such Post எண்டு வருதே ....என்னாச்சி எனக்கு தன் பிரச்சனையா
25 May 2012 11:38 // பார்க்கின்றேன் கலை அதில் இணைத்தேன் சில நேரம் காத்து இருக்கனும்!ம்ம்
என்னால் பல நாட்களாக ஓட்டுப் போட முடியவே இல்லை.தவறான பெயர்/கடவுச் சொல் என்றே வருகிறது.மினக்கெட பிடிக்காமல் விட்டு விட்டேன்.
ஆஹா நன்றி முதல் பால்க்கோப்பி பாரிஸ் நேரம் 11 மணிக்கு அடுத்தது கலை பொறுப்பாக வாத்து மேய்க்கும் மாலை5.00மணியில் இருந்து அண்ணா அடுப்படியில் வாத்து மேய்க்கணும் நாளை இரவு!ஹீஈஈஈஈஈஈ
///
நன்றி அண்ணா பால்க் காப்பிக்கு
வைத்து கீரை போரியல் செய்தேன் // நான் மதியம் சாப்பிட்டாச்சு என்னது கீரைப்பொறியலா!அப்படி இருக்கா!..
கீரையில் பொரியலா?அது எப்படிச் செய்வது????
என்னவென்று சொல்லுவது....:(
மாமா நல்ல சுகமா இருக்கீங்களா .....
என்னமோ மாறி இருக்கு மாமா இண்டைக்கு ...அக்கா இல்லாமல் ....
அக்கா இல்லாத நாளும் நல்லப் போகும் ..ஆனால் இண்டைக்கு என்னோமோ வெறுமையா பீல் பண்ணுறேன் ....
செம கூத்தா இருக்கிறீங்க அப்படியே இருங்க நான் தூங்கப் போறன்...
இரவுக்கு நான் இடியாப்பம் செய்திருக்கிறேன்சம்பல்/சட்னி அப்புறம்,பகல் செய்த காய்கறிக் குழம்பு இருக்கிறது.பருப்பு இருக்கிறது.பத்து மணிக்குத் தான் டின்னர்!
என்னால் பல நாட்களாக ஓட்டுப் போட முடியவே இல்லை.தவறான பெயர்/கடவுச் சொல் என்றே வருகிறது.மினக்கெட பிடிக்காமல் விட்டு விட்டேன்.// சில மாற்றங்கள் அங்கே ஐயா! அல்லக்கைகள் போராட்டம் ம்ம்ம் இப்ப வழமையாக இருக்கு அதுவும் எத்தனைநாள்தான் !என்ன செய்வது எல்லாம் நன்மைக்கே!
நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துக்கும் குட் நைட்!
எனக்குப் புரிந்தது,நீங்கள் கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருப்பது.பேசுங்கள்,கலகலப்பாக!பறந்தோடி விடும்!
நன்றி அண்ணா பால்க் காப்பிக்கு// நான் தான் கலைக்கு நன்றி சொல்லணும் தொடர் முடிய சில விடயங்கள் பேசுவோம்!
Blogger சிட்டுக்குருவி said...
செம கூத்தா இருக்கிறீங்க அப்படியே இருங்க நான் தூங்கப் போறன்./////வணக்கம் சிட்டுக் குருவி!டைம் கிடைக்கிறப்ப பொறுமையா வாங்க,ஜாலியா இருக்கலாம்.GOOD NIGHT!
கீரையில் பொரியலா?அது எப்படிச் செய்வது????///
என்ன மாமா அண்ணனுக்கும் உங்களுக்கும் கீரைப் போரியல் செய்யத் தெரியாதா .....
கீரையை இலை மட்டும் எடுத்துக்கணும் மாமா ...அப்புறம் கடாயில் எண்ணெய் உத்தி கொஞ்சம் கடுகு ,சீரகம் ,வெங்காயம் போட்டுட்டு கீரை போட்டு வதக்கனும் ....கொஞ்சோண்டு உப்பு போடணும் ...அது தான் கீரைப் போரியல் ...
அப்புறம் தேங்காய் சேர்த்து வதக்கிய கீரையுடன் கிண்டி விட்டால் சூப்பரா இருக்கும் ...
இஞ்ச தேங்காய் தேடிப் பிடித்து வாங்கணும் மாமா ..அதனால் தேங்காய் உஸ் பண்ண மாடீணன் ...
அக்கா இல்லாத நாளும் நல்லப் போகும் ..ஆனால் இண்டைக்கு என்னோமோ வெறுமையா பீல் பண்ணுறேன் ....// அவாவும் தன் கடமை செய்ய வேணும் தானே கலை!
இஞ்ச தேங்காய் தேடிப் பிடித்து வாங்கணும் மாமா ..அதனால் தேங்காய் உஸ் பண்ண மாடீணன் ...
25 May 2012 11:52 // ஹீ அப்படியா நாங்க கீரைப்பால்க்கறி வைப்போம் அதேதான்! ம்ம்ம்
இஞ்ச தேங்காய் தேடிப் பிடித்து வாங்கணும் மாமா ..அதனால் தேங்காய் உஸ் பண்ண மாடீணன் ...
25 May 2012 11:52 // அதுதான் ரியஸ்லாண்ட் கடையில் பாக்கட்டில் இருக்குதே! கலை. கோக்கணட் மில்க்!
கீரைப் பொரியல்!!!!!!!!!!!அட இம்புட்டுத்தானா?நாங்க பொரியல் எல்லாம் கீரையில செய்ய மாட்டோம்.ஆனா,பொன்னாங்கண்ணிக் கீரை இருக்கில்லையா?அது நீங்க சொன்ன மாதிரி செய்வோம்!சாதா கீரை மூடாம பால்(பசுப்பால்)விட்டு அவிச்சுடுவோம்!
தேங்காய் கிடைக்காதா?
கீரைப் பொரியல்!!!!!!!!!!!அட இம்புட்டுத்தானா?நாங்க பொரியல் எல்லாம் கீரையில செய்ய மாட்டோம்.ஆனா,பொன்னாங்கண்ணிக் கீரை இருக்கில்லையா?அது நீங்க சொன்ன மாதிரி செய்வோம்!சாதா கீரை மூடாம பால்(பசுப்பால்)விட்டு அவிச்சுடுவோம்!//நான் கொஞ்சம் பால்க்கலவை மஸ்கப்போன் போட்டு செய்து விடுவேன் ஐயா!
25 May 2012 12:00
தனிமரம் said...
நான் கொஞ்சம் பால்க்கலவை மஸ்கப்போன் போட்டு செய்து விடுவேன் ஐயா!////அந்தக் க..................ம் எல்லாம் எனக்குப் புடிக்காது!
நான் கொஞ்சம் பால்க்கலவை மஸ்கப்போன் போட்டு செய்து விடுவேன் ஐயா!////அந்தக் க..................ம் எல்லாம் எனக்குப் புடிக்காது!
25 May 2012 12:05//ம்ம் பசும் பால் இறுகாது! நேரம் முக்கியம் தானே! வேலையில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தேங்காய் கிடைக்கும் மாமா ஆனால் அதுக்கு ஊருக்குள்ள போகணும் ..ஆனால் நான் இருக்கும் கிராமத்தில் கிடைக்காது .....ஊருக்குள்ள போகனுமேண்டல் ஆட்டோ தான்...பஸ் வசதி கூட கிடையாது மாமா ....இந்த ஊர்க காரங்க தேங்காய் எல்லாம் சேர்க்க மாட்டாங்கள் ....
கீரைப் போரியல் ரொம்ப டேஸ்ட் இருக்கும் மாமா கீரை குழம்பை விட ...
என்னைக்காவது செய்து பாருங்கள் ...உப்பு மட்டும் கொஞ்சமா போடுங்க மாமா
சாதா கீரை மூடாம பால்(பசுப்பால்)விட்டு அவிச்சுடுவோம்!//
வித்தியாசமா இருக்கு மாமா ...
எனக்கு பால் என்றாலே அலர்ஜி ...
பால் சேர்த்த பொருள் எதுவுமே சாப்பிட மாட்டேன்
அதுதான் ரியஸ்லாண்ட் கடையில் பாக்கட்டில் இருக்குதே! கலை. கோக்கணட் மில்க்!///
ஹ ஹ ஹாஆஆஆஆ எங்க ஊரில் பொட்டிக் கடை தான் அண்ணா இருக்கு ...அங்க எல்லாம் அதுக கிடைக்காது
அயயோஓ நான் மட்டும் தனியா புலம்புறேனா ...
மாமா எங்க போய்டீங்க ....
அண்ணா
தேங்காய் கிடைக்கும் மாமா ஆனால் அதுக்கு ஊருக்குள்ள போகணும் ..ஆனால் நான் இருக்கும் கிராமத்தில் கிடைக்காது .....ஊருக்குள்ள போகனுமேண்டல் ஆட்டோ தான்...பஸ் வசதி கூட கிடையாது மாமா ....இந்த ஊர்க காரங்க தேங்காய் எல்லாம் சேர்க்க மாட்டாங்கள் ....
25 May 2012 12:10 // ஆஹா சந்தோஸம் கலை இளவரசி கிராமத்தில் பத்திராமக இருக்குது அதைவிட என்ன தேங்காய் வேணும்!ம்ம்!நாங்க எல்லாம் கிராமத்துக்காரங்கள்! ஈஈ கிராமத்து மின்னல் படம் பாடல் வரும் பாருங்கோ அக்காள் கொடி பிடிப்பா கலை/!அவ்வ்வ்வ்வ்
கலை said...
கீரைப் போரியல் ரொம்ப டேஸ்ட் இருக்கும் மாமா கீரை குழம்பை விட ...
என்னைக்காவது செய்து பாருங்கள் ...உப்பு மட்டும் கொஞ்சமா போடுங்க மாமா.////உப்பும் போடணுமாம்,நேசன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹ ஹ ஹாஆஆஆஆ எங்க ஊரில் பொட்டிக் கடை தான் அண்ணா இருக்கு ...அங்க எல்லாம் அதுக கிடைக்காது
25 May 2012 12:14 // நான் சென்னையை /கேரளாவை வைத்துச் சொன்னேன் தாயி வேறஇடம் போகவில்லை !ஹீ
கலை said...
எனக்கு பால் என்றாலே அலர்ஜி ...
பால் சேர்த்த பொருள் எதுவுமே சாப்பிட மாட்டேன்.///நீங்க "கலரா" இருந்தப்பவே நினைச்சேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈஈ கிராமத்து மின்னல் படம் பாடல் வரும் பாருங்கோ அக்காள் கொடி பிடிப்பா கலை/!அவ்வ்வ்வ்வ்///
ஹ ஹ ஹா அது ஹேமா அக்கவின்ற செல்லக் கோபம .... ராமராஜன் அயித்தன் மேல
என்னைக்காவது செய்து பாருங்கள் ...உப்பு மட்டும் கொஞ்சமா போடுங்க மாமா.////உப்பும் போடணுமாம்,நேசன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
25 May 2012 12:17 // ஹீ போடுறம் வாயில் வைக்க முன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
நீங்க "கலரா" இருந்தப்பவே நினைச்சேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!///
மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நீங்களுமா ...போங்க மாமா ....
இந்தக் கலர்ஏ ஜாஸ்தி தான் உங்கட மகனுக்கு .....இருக்கிறது போதும் மாமா ...
ஹ ஹ ஹா அது ஹேமா அக்கவின்ற செல்லக் கோபம .... ராமராஜன் அயித்தன் மேல
25 May 2012 12:20 // காட்சிக்கு கானம் தந்தவன் அவன் என் நண்பன் அக்காள் கோபித்தாலும் அவனும் என் நண்பன் தானே கலை!
கலை said...
ஹ!ஹ!ஹா!!!அது ஹேமா அக்கவின்ற செல்லக் கோபம .... ராமராஜன் அயித்தன் மேல./////Please Stop This Topic!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தனிமரம் said...
என்னைக்காவது செய்து பாருங்கள் ...உப்பு மட்டும் கொஞ்சமா போடுங்க மாமா.////உப்பும் போடணுமாம்,நேசன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
25 May 2012 12:17 // ஹீ போடுறம் வாயில் வைக்க முன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
25 May 2012 12:20///
அயயோஓ இன்னொன்னும் சொல்ல மறந்துட்டிணன் ...
கீரை இலையை அப்புடியே போடக் கூடாது ...அதை வெட்டி தான் கடாயில் இருக்கும் எண்ணையில் போடணும் .....
அசச்ஹோஒ ...பச்ச மிளகா வும் சேர்க்கணும் உரைப்புக்கு ....அதுவும் சொல்ல மறந்திட்டேன் மாமா ....
இந்தக் கலர்ஏ ஜாஸ்தி தான் உங்கட மகனுக்கு .....இருக்கிறது போதும் மாமா ...
25 May 2012 12:22 // ஆஹா என் மச்சாள் சொன்னதையே என் தங்கை கலையும் சொல்லுதே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மாமா சும்மா கலாய்ய்க்குறதுக்கா சொன்னேம்மா!
காட்சிக்கு கானம் தந்தவன் அவன் என் நண்பன் அக்காள் கோபித்தாலும் அவனும் என் நண்பன் தானே கலை!///
நான் வரல அண்ணா நீங்களாவது ஹேமா அக்கலாவது ....மீ எஸ்கேப் ...மீ பாட்டுப் போட்டால் ரசிப்பேன் ...டௌன் லோட பண்ணுவேன் ...
ஹேமா அக்காள் கருக்கு மட்டை தூக்கினால் நான் ஒண்டும செய்ய மாட்டினான்
அசச்ஹோஒ ...பச்ச மிளகா வும் சேர்க்கணும் உரைப்புக்கு ....அதுவும் சொல்ல மறந்திட்டேன் மாமா ....
25 May 2012 12:25 //ஆஹா இது தான் நம் கீரைக்கறிக்கு செய்முறை!
தனிமரம் said...
இந்தக் கலர்ஏ ஜாஸ்தி தான் உங்கட மகனுக்கு .....இருக்கிறது போதும் மாமா ...
// ஆஹா என் மச்சாள் சொன்னதையே என் தங்கை கலையும் சொல்லுதே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////அட,சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா பல அயிட்டம் வெளிய வருதே,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!
மாமா சும்மா கலாய்ய்க்குறதுக்கா சொன்னேம்மா!///
ஹ ஹா ஹா //....தெரியும் மாமா ...நீங்கள் சொல்லுறதை போய் நான் தவறாலம் எடுத்துக்க மாட்டினான் மாமா ....
அங்க மட்டும் என்னவாம் நீங்களும் என்னை மாறி தானே ...
நல்ல வேலை உங்கட செல்ல மகள் இருக்கும் போது சொல்லல ...
ஹேமா அக்காள் கருக்கு மட்டை தூக்கினால் நான் ஒண்டும செய்ய மாட்டினான்
25 May 2012 12:27 //அதுவும் கவிதாயினியோடு சண்டை போட என்னால் முடியாது நான் தனிமரம்!
இந்தக் கலர்ஏ ஜாஸ்தி தான் உங்கட மகனுக்கு .....இருக்கிறது போதும் மாமா ...
// ஆஹா என் மச்சாள் சொன்னதையே என் தங்கை கலையும் சொல்லுதே! ///
எல்லாரும் ஒரேக் குட்டையில் ஊறிய கருக்கு மட்டைகள் தான் அண்ணா முற்காலத்தில் ....
அக்கா சும்மா எல்லாம் கருக்குமட்டை தூக்க மாட்டா!ஒங்க குரு கிட்ட கேட்டா,பாட்டு போட்டு விடுவாங்களே?
அட,சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா பல அயிட்டம் வெளிய வருதே,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!////
ஹ ஹ ஹா ஹா .....போட்டு வாங்குதல் நல்லாத்தான் போயிட்டு இருக்கு ....
அட,சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா பல அயிட்டம் வெளிய வருதே,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!
25 May 2012 12:29 //ஹீ மச்சாள் என்னைவிட் அழகு யோகா ஐயா உண்மையில் நேரில் பார்க்கத்தானே போரிங்கள் அம்பலத்தார் கூட சேர்ந்து!
அக்கா சும்மா எல்லாம் கருக்குமட்டை தூக்க மாட்டா!ஒங்க குரு கிட்ட கேட்டா,பாட்டு போட்டு விடுவாங்களே?
///
ஹும்ம்ம் எங்க குரு தான் ஜூப்பர் ஆ பாட்டு போடுவாங்களே ஒவ்வொரு பதிவிளையும் ...
அடுத்த தரம் குருவை ராமராஜன் பாட்டு போட சொல்லப் போறேன் மாமா ...இது ஆருக்க்காகவும் நான் போடச் சொல்லுறேன் எண்டு தவர்கா என்ன வேண்டாம் ....மீ லைக்ஸ் மாமா ...
மேதை படம் விமர்சனம் படிச்சதிளிருந்து நான் ராமராஜன் விசிறி ஆகினேன் ....
கலை said.......அங்க மட்டும் என்னவாம் நீங்களும் என்னை மாறி தானே ...
நல்ல வேளை உங்கட செல்ல மகள் இருக்கும் போது சொல்லல.///நான் வந்து ரோஸ் தெரியுமா ரோஸ்?அப்புடி இருப்பேன்.எம்.ஜி.ஆர் பாத்திருக்கீங்களா?நான் அவர் கலரு!///அக்கா வந்து "எல்லாம்" பார்ப்பா!
நல்ல வேலை உங்கட செல்ல மகள் இருக்கும் போது சொல்லல ...// ஹீ அவா எல்லா பின்னூட்டமும் படித்த பின் தான் என் வலையில் பின்னூட்டம் போடுவது கலை கவனம் !அவ்வ்வ்வ்வ்
மேதை படம் விமர்சனம் படிச்சதிளிருந்து நான் ராமராஜன் விசிறி ஆகினேன் ....
25 May 2012 12:36 // நான் அதுவும் படிக்க வில்லை இவன் ராகுல் செயலால்!ம்ம்ம்
கலை said...
மேதை படம் விமர்சனம் படிச்சதிளிருந்து நான் ராமராஜன் விசிறி ஆகினேன்.////ஐயோ (ராமராஜன்)பாவம்!!!!!//////மக்குப் பொண்ணே,விமர்சனம் எல்லாம் குப்பை!
நான் வந்து ரோஸ் தெரியுமா ரோஸ்?அப்புடி இருப்பேன்.எம்.ஜி.ஆர் பாத்திருக்கீங்களா?நான் அவர் கலரு!///அக்கா வந்து "எல்லாம்" பார்ப்பா!////
ஹ ஹ ஹா ஹா ....என்னாது ரோசாப்பூ கலரா நீங்க ....ஹும்ம்ம்ம்ம்ம் ...சரிங்க என் மாமாவே நீங்க ரோசு கலரு தான் ....உங்கட செல்ல மகள் ரோசின்ர ரோசா கலரையும் தாண்டியவங்கள் தான் .......
உங்கட செல்ல மகள் பார்ப்பதுக்குள் எல்லாத்தையும் கிழிச்சி போட்டுவிடுவேனே....
/நான் வந்து ரோஸ் தெரியுமா // நான் யார் நான் யார் குடியிருந்த கோயில் தானே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கலை said...
உங்கட செல்ல மகள் ரோசின்ர ரோசா கலரையும் தாண்டியவங்கள் தான் .......
உங்கட செல்ல மகள் பார்ப்பதுக்குள் எல்லாத்தையும் கிழிச்சி போட்டு விடுவேனே.////இண்டைக்கு கருக்குமட்டை அடி நிச்சயம்!
உங்கட செல்ல மகள் பார்ப்பதுக்குள் எல்லாத்தையும் கிழிச்சி போட்டுவிடுவேனே....// ஆஹா அப்படி எல்லாம் கவிதாயினியை ஏமாத்த முடியாது
Yoga.S. said...
கலை said...
மேதை படம் விமர்சனம் படிச்சதிளிருந்து நான் ராமராஜன் விசிறி ஆகினேன்.///ஐயோ (ராமராஜன்)பாவம்!!!!!//////மக்குப் பொண்ணே,விமர்சனம் எல்லாம் குப்பை!////
இல்லை மாமா செம காமெடி அது .
ப்லோக்ஸ் ல ஒருத்தங்க மேதை படம் விமர்சநம் எழுதி இருந்தாங்க மாமா ....அசோஒ அந்த மாறி லாம் படிச்சதே இல்லை ..நான் பதிவுலகத்தில் (நான்கு மாதம் முன்னாடி ) வந்த புதுசு ...
விழுந்து விழுந்து சிரிச்சேன் மாமா ...
ராமராஜனை அவ்வளவு கொமேடியன் ஆக்கி எழுதி இருந்தாங்க ....
தனிமரம் said...
/நான் வந்து ரோஸ் தெரியுமா // நான் யார் நான் யார் குடியிருந்த கோயில் தானே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////CORRECT!!!!
கலை said...
....அசோஒ அந்த மாறி லாம் படிச்சதே இல்லை ..நான் பதிவுலகத்தில் (நான்கு மாதம் முன்னாடி ) வந்த புதுசு ...
விழுந்து விழுந்து சிரிச்சேன் மாமா ...
ராமராஜனை அவ்வளவு கொமேடியன் ஆக்கி எழுதி இருந்தாங்க.///அது ப.ரா எழுதினது(ஸ்டார்ட் மியூசிக்!) தானே???
சரி,இப்போ மணி என்ன?????
http://anjaasingam.blogspot.com/2012/01/blog-post.html
மாமா இந்த பதிவர் ஆறேண்டுலம் தெரியாது ...ஆனால் செம சிரிப்பு இந்த பதிவு ....
ரீ ரீ அண்ணா கருக்கு மட்டை தூகதிங்கோ ...
ராமராஜனை அவ்வளவு கொமேடியன் ஆக்கி எழுதி இருந்தாங்க ....
25 May 2012 12:44 // அவனுங்கள் விசில் குஞ்சுகள் கலை !உண்மையில் பல நல்ல படத்தை இப்படி நாதாரிகள் தரம் தாழ்த்துவது நான் கண்ட உண்மை!
ரீ ரீ அண்ணா கருக்கு மட்டை தூகதிங்கோ ...// தாயி நான் அங்கே இதுநாள் வரை போனது இல்லை சிங்கம் ஆவது புலியாவது எனக்கு பிடித்தால் போவேன் தாயி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சரி,இப்போ மணி என்ன?????///
சரி சரி இதோ கிளம்பிட்டேன் மாமா ....
அக்காள் வந்தால் என் அன்பு வணக்கம் சொல்லிடுங்கோ ...
குட் நைட் மாமா டாட்டா
அண்ணா டாட்டா ,குட் நைட் ...
ரே ரீ அண்ணா ( டெலிபதி சேர்த்திடும் ) வணக்கம் அண்ட் டாட்டா
மகி அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா
அந்தத் தளம் எனக்கு தடுமாறுகிறது.தெரியும்,படித்திருக்கிறேன்.இப்போது "கொம்" மாற்றியதால் எனக்கு சில தளங்கள் பார்க்க முடியவில்லை.
அண்ணா தம்பி தங்கை எல்லாருக்கும் வயக்கம் ச்சே ச்சே வணக்கம்
இன்று எங்க வீட்ல மசாலா தோசை /தோசை வெங்காய கோசு/
மகள் சர்ச் போயிருக்கா வர நேரம் .அதுக்குள்ளே எல்லாரையும் பார்த்து விட்டு செல்ல வந்தேன்
அண்ணா டாட்டா ,குட் நைட் ...// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் குட் நைட் நாளை சந்திப்போம் பால்க்கோப்பியுடன்!
இப்புடித்தான் புள்ளைன்னா இருக்கணும்.இரவு வணக்கம் மருமகளே!ரிலாக்ஸா தூங்குங்க.நாளைக்கி பாக்கலாம்!குட் நைட்!
பயந்துகொண்டே படிச்சேன் எங்கே கஷ்ட பட்டு சேர்த்த பொருள் கயவர் கைக்கு போய் விடுமோன்னு ...நல்ல வேளை உரியவரிடமே சேர்ந்தது நிம்மதி
வாங்கோ அஞ்சலின் அக்காள் நல்ல தோசை சாப்பிட நான் ரெடி!
angelin said...
அண்ணா தம்பி தங்கை எல்லாருக்கும் வயக்கம் ச்சே ச்சே வணக்கம்
இன்று எங்க வீட்ல மசாலா தோசை /தோசை வெங்காய கோசு/
மகள் சர்ச் போயிருக்கா வர நேரம் .அதுக்குள்ளே எல்லாரையும் பார்த்து விட்டு செல்ல வந்தேன்.////வணக்கம்,வாங்க சகோதரி,அஞ்சலின்!நலமா?பகல்ல தோசையா?
கற்பூர முல்லை படம்ப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
ஜேசுதாசின் குரல் உயிர் வரை பாயும் அவ்வளோ அருமை
பயந்துகொண்டே படிச்சேன் எங்கே கஷ்ட பட்டு சேர்த்த பொருள் கயவர் கைக்கு போய் விடுமோன்னு ...நல்ல வேளை உரியவரிடமே சேர்ந்தது நிம்மதி
25 May 2012 12:58 // கடவுள் கைவிடமாட்டார்தானே கஸ்ரப்பட்டு சேர்த்த பொக்கிசம் போகுமா அதுவும் கடவுள் கைவிடமாட்டார் என்று எண்ணும் ஒரு பாட்டி மனசு!ம்ம்ம் என்க்கு இல்லை!
இல்லை மாலை .இரவு உணவு
நாங்க டிபன் மாதிரி சாப்பிடுவோம் ,இன்னிக்கு சப்பாதிக்கு ரெஸ்ட் :))
சகோதரி அஞ்சலின் மன்னிக்கவும்,வேறு யோசனையில்..........................
மீண்டும் சந்திப்போம் .கலை ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டாங்க
கீரை கூட்டு செய்யுமுன் அடுப்பை பற்ற வைக்கணும் .அண்ணா உங்க மருமகளுக்கு சொல்லிடுங்க .
சரி அண்ணா நானும் விடை பெறுகிறேன் .மகள் ப்ராக்டிசுக்கு போயிருக்கா வரும் நேரம் /.மீண்டும் சந்திப்போம் .நல்லிரவு வணக்கம் .
நேசன் மற்றும் அண்ணா எல்லாருக்கும் குட்நைட்
Blogger angelin said...
இல்லை மாலை .இரவு உணவு
நாங்க டிபன் மாதிரி சாப்பிடுவோம் ,இன்னிக்கு சப்பாதிக்கு ரெஸ்ட் :))////சப்பாத்தி தப்பிச்சிச்சுன்னு சொல்லுறீங்க,ஹ!ஹ!ஹா!!!!!
கற்பூர முல்லை படம்ப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
ஜேசுதாசின் குரல் உயிர் வரை பாயும் அவ்வளோ அருமை
25 May 2012 13:00 // நன்றி அக்காள் நான் போடும் பாடல் எல்லாம் முகநூலில் மூக்கில் குத்து வாங்கினாலும் நீங்கள் ஹேமா/ கலை/ கலா பாராட்டும் போது நமக்குள் ஏதோ ஒரு மெல்லிய உணர்வு ஒன்றா இனைக்கின்றது அதுவும் கணேஸ் அண்ணா சொல்வது போல முற்பிறப்பாக இருக்கலாம்! நன்றி!
angelin,மீண்டும் சந்திப்போம் .நல்லிரவு வணக்கம்.
சரி அண்ணா நானும் விடை பெறுகிறேன் .மகள் ப்ராக்டிசுக்கு போயிருக்கா வரும் நேரம் /.மீண்டும் சந்திப்போம் .நல்லிரவு வணக்கம் .
நேசன் மற்றும் அண்ணா எல்லாருக்கும் குட்நைட்
25 May 2012 13:06 //நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் இணைவுக்கும் குட் நைட்!
சரி,நேசன்,இரவு உணவு அழைக்கிறது!நல்லிரவு உங்களுக்கும்!சாப்பாடு முடிய வந்து பார்ப்பேன்!செல்ல.............................GOOD NIGHT!!!!
நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நாளை சந்திப்போம் நன்றி குட் நைட்!
வந்திட்டன்.....இங்க 100 தாண்டிப்போச்சு.இனி எதுக்கு நான் இங்க.கோப்பியும் கிடைக்காது.வடையும் கிடைக்காது.சரி இனி மெல்ல மெல்ல பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிப்பன்.
அப்பா...நேசன்....கருவாச்சி....உலாத்தப்போன ரெவரி....எல்லாரும் சுகமெண்டு நினைக்கிறன்.நானும் சுகம் சுகம் !
வாங்க,மகளே!நாங்கள் எல்லோரும் சுகம்!தங்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு........................மாமா கலைத்து விட்டேன்,நேரம் பிந்திப் போய் விட்டது என்று!
நல்லிரவு மகளே!நான் உறக்கத்துக்குச் செல்லப் போகிறேன்!நாளை இரண்டு பதிவுகளாம்!காலையில்(பதினோரு மணி) கோப்பிக்கு பஞ்சமில்லை,ஹ!ஹ!ஹா!!!!
அப்பா...வந்திட்டுப் போனீங்களோ.ஆருமில்லயெண்டு கொஞ்சம் அங்கால பாத்துக்கொண்டு நிண்டுபோனன்.சரி முடிஞ்சால் கவிதையும் நாளைக்கு இருக்கு.ஆனால் கவிதைப் பக்கத்தில வரவேற்பு மட்டும்தான்.ஹாஹாஹா !
அப்பா....மனசில ஒண்டும் இல்லாம சந்தோஷமா இருங்கோ.நான் நல்ல பிள்ளை உங்களைப்போலவே. வெடுக்கெண்டு மனசில உள்ளதை ....அது நல்லதும் கெட்டதும்தான் சொல்லிப்போடுவன்.அதுதான் பிரச்சனை !
நேசன்...எப்பவும்போல பாட்டுப் பதிவைப் பறிச்சுப்போட்டுது.பதிவைப்பற்றி எதுவும் சொல்லமாட்டன் உண்மையா.3-4 தரம் கேட்டிட்டன்.அதுவும் ஜேசுதாஸ் குரலும் ஒரு சந்தோஷம்தான்.சோகமோ சந்தோஷமோ ஒத்துழைக்கும் குர.அருமையான பாட்டு நேசன் !
அந்த ராமராஜனை கலாய்க்கிறதே வேலையாப்போஒசு காக்காவுக்கு.கருவாச்சி அக்காவுக்கு நாளைக்கு லீஈஈஈஈஈஈஈவு.சந்தோஷமோ !
இப்ப குறட்டை விடுவா வாத்துக்காரி.கனவில நான் போய் மூக்கைக் கடிச்சிட்டு வருவன்.மாமா....எண்டுதான் அப்பவும் அழுவா எண்டு நினைக்கிரன்.அச்சோ....கருவாச்சியாவது அழுகிறதாவது......என்னைக் கடிச்சுப்போடும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
சரி குட்டீஸ்....நாதஸ்வரம் நாடகம் பாக்கப்போறன்.பிறகு கவிதை இருக்கு.அதுக்குப் படமில்லை தேடவேணும்.குறட்டை விடுங்கோ சத்தம்போடமல்.போய்ட்டு வாறன்.நாளைக்குப் பதிவுகளோட சந்திப்பம் !
இந்த முறை உங்கள் எழுத்தைப் பத்தி எதுவும் நான் சொல்லப் போறதில்ல. ஏன்னா, ஹேமா சொன்ன மாதிரி எழுத்தை பாட்ட தூக்கிச் சாப்ட்ருச்சு. மனதின் அடியாழத்தில் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற சக்தி இந்தப் பாடலில் ஏசுதாஸின் குரலுக்கும், இசைக்கும் உண்டு. இப்போவும் ரசிச்சுக் கேட்டேன். அருமை.
வணக்கம் நேசன்,
கிராமத்து எழில் கொஞ்சும் அழகுக்கு முன்
நகரத்தை நினைக்கையில்
" கானமயிலாட கண்டிருந்த வான்கோழி....."
என்பது தான் நினைவுக்கு வருகிறது....
பிரிவு என்ற சொல்லை நினைக்கையிலேயே
மனம் பதறுகிறது...
அதன் வழியை ரணத்தை விவரிக்க
எத்தனை காவியங்கள் எழுதினாலும்
ஆறாது..
நேசன் இன்றைய பதிவு நெஞ்சை பிசைந்தாலும்
பதிவிட்ட பாடல் அதற்கான மயிலிறகு ஒத்தடம்
கொடுக்கிறது...
அனைத்து உறவுகளுக்கும் என் அன்பார்ந்த இனிய காலை
வணக்கம்.
காலை வணக்கம்,நேசன்!நலமா?நான் நலம்!
ஹேமா said...
உங்களைப்போலவே. வெடுக்கெண்டு மனசில உள்ளதை ....அது நல்லதும் கெட்டதும்தான் சொல்லிப்போடுவன்.அதுதான் பிரச்சனை !/////அதனால் தான் ஒத்துப் போகிறதோ,என்னமோ???????
வணக்கம் பாஸ் ஒரு தொடரை எப்படி எழுதவேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாம் உண்மைச்சம்பவங்களை பதிவிடும் போது பல சிக்கல்கள் இருக்கும் ஆனால் அதை சிறப்பாக கையாண்டு இந்த தொடரில் நகர்த்தி செல்கின்றீர்கள் பாராட்டுக்கள்.
வாங்க,மகளே!நாங்கள் எல்லோரும் சுகம்!தங்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு........................மாமா கலைத்து விட்டேன்,நேரம் பிந்திப் போய் விட்டது என்று!///
ஹ ஹ ஹா ..மாமா நீங்கள் பேசிட்டு இருப்பது உங்கட மருமகள் கிட்ட இல்லை ...மகள் கிட்ட ...
எப்போதும் மருமகள் கிட்ட பேசுற நியாபகம் தான் மாமாவுக்கு ...ஹ ஹா ஹா ...
ஹேமா அக்கா ஹ ஹா ஹா ....
அந்த ராமராஜனை கலாய்க்கிறதே வேலையாப்போஒசு காக்காவுக்கு.கருவாச்சி அக்காவுக்கு நாளைக்கு லீஈஈஈஈஈஈஈவு.சந்தோஷமோ !
///
சரி அழதிங்கோ மேடம் ...இனிமேல் ஆரும் ஆயித்தனை சொர்ரி ராமராஜனை பகடி பண்ண மாட்டம் ....
இன்றைக்கு லீவ் ஆ ..enjoy pannunga மீ ஆபீஸ் தான் ...நடுவில் varen
காலை வணக்கம் அப்பா,நேசன்,கலை
என்னமோ தூக்கம்ம் கெட்டுப்போச்சு 7 மணிக்கே.அப்பா வணக்கம் சொல்லியிருந்தார்....அப்பா நல்லா நித்திரை கொண்டீங்களோ !
பின்னூட்டங்களை ரசிச்சு வாசிச்சன்.எல்லாரையும் தவறவிடுறன் நான்.
அப்பா...கருவாச்சி சொன்னது கீரை வறை.அதைத்தான் பொரியல் என்கிறார்கள்.கீரையை வதக்கி தேங்காய்ப்பூவாய்ப் போட்டு இறக்கிவிடுறது !
என்ர கலரைப் பற்றிக் கதைச்சிருக்கிறீங்கள்.நான் அப்பாபோல தெரியுமோ கருவாச்சி !
அப்பாவோ...கலையோ இப்ப இங்க இருக்கிறீங்கள்.மனம் சொல்லுது.நான் நல்ல பால் விட்டு டீ குடிக்கிறன்.தாறன் பிடியுங்கோ.கருவாச்சிக்குட்டிக்கு வேலையோ.அப்பா......இருக்கிறீங்களோ !
எத்தனை எத்தனை அழிவுகளை சந்தித்தோம் அவை எல்லாம் மறக்க முடியுமா அண்ணா?????
Post a Comment