இப்படி அழைக்க முடியாது !
இன்னொருத்தியின் கைபிடித்தவன் நீண்ட வருடங்கள் கழித்து நேற்று உன்னைப் பார்த்தேன்.
தனிமரமாக!
உனக்காக காத்திருந்தேன்!
ஒரு தலையாக காதல் கொண்டு நெஞ்சனையில் பூட்டி பஞ்சனையில் பள்ளிகொள்ள .
அதுக்காக விட்டேன் ஒரு தூது பெண் கேட்டு
உன்ற மோனுக்கு என்ன தகுதியிருக்கு ?அவன் என்ன என்ஜினியரோ! ?
எடுத்தெறிந்து பேசினாளாம் உன் அன்னை .இது எல்லாம் உனக்கு தெரியுமா ?
என்று நானும் கேட்க காத்திருந்தேன். உன்னிடம்.
சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !
நீ மேல் படிப்பு என்று ஊரைவிட்டுப் போனாய் !
நான் புலம்பெயர்ந்தேன் அகதியாக!
என் ஆசைக் காதல் வருடங்கள் சில தாண்டும் வரை உன் மேல் காதல் உண்மையாகத்தான் .
இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!
ஊரில் என்னைப் பலபேர் உனக்கு கலியாணம் பேசலையோ?
என்று போகும் இடமெல்லாம் கேட்கினம் என்று நச்சரிக்கும் ஆத்தாவிற்கு வதிவிட அனுமதி கிடைக்கட்டும் என்று சாட்டுச் சொல்லியே போனது தலைமுடியும் வாலிபவயசும்!
உன் ஆத்தா இறங்கிவராத இலங்கை பாதுகாப்புச் சட்டம் விசாரனையில்லை தூக்கிப் போடு என்பது போல் என்னையும் குறிப்பையும் .
கடவுள் துணைக்கு வந்தார் வதிவிட அனுமதி தந்து.
தட்டுங்கள் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வேதாளம் போல் 7 வருட என் காதல் சொல்லி கைபிடிக்க என்னியதும் உண்மை.
உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.
உன் இதயத்தில் இடம் பிடிக்க காத்திருந்து காலத்தில் உன்னிடம் சொல்ல நினைத்தவை எல்லாம் என் நாட்குறிப்பேட்டில் பதிந்தேன்.
படித்தால் கொஞ்சம் சாருவின் சாட்டிங்கும் ஒத்துப்போகும்.
பொறுமையாக இருந்தாலும் இந்தக் குளத்தில் கல் எறிந்தார்கள்.
இந்த வருடம் கலியாணம் கட்டாவிட்டால் இனி உனக்கு
பிள்ளையார் கெதியேன சாஸ்த்திரி சொன்னார் என்று.
உணவுமேசையில் உள்நாட்டுப் போர் !திட்டல்கள், அறிவுரைகள், கிண்டல்கள் ,குத்தல்கள்,
எல்லாம் சேர
உன்மீதான காதலுக்கு ஒரு போத்தல் மெண்டிஸ் ஒரு இரவு போதவில்லை !என்றாளும் முடுவுரையாக்கினேன் குடியுக்கும்!
கிட்டாத உன் காதலுக்கும்!
என்னைக் கரம்பிடித்த குலமகள் ராதையின் காதலில் கரைந்து.
கலந்து!
இரு பிள்ளைச் செல்வங்கள் என் தோழில் !
நீ இன்னும் காத்திருப்பது என்னைவிட ஒரு நல்ல என்ஜினியருக்கு!
எங்கிருந்தாலும் நலமாக வாழனும் நீ ஆசைப்பட்டவள் அனாதையாக போகக்கூடாது!
(இது ஒரு நண்பனின் குமுறல் அவன் என்னிடம் கேட்டான் நல்ல குனமா ? நல்ல தொழிலா? கலியாணத்திற்கு தேவை பதில் எனக்கும் தெரியாது)
No comments :
Post a Comment