20 May 2013

.என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி! அறிமுகம்.


வலையில் தனிமரத்தை நாடி ,ஆக்கமும் ஊக்கமும் தந்து அரவணைக்கும் அன்பான உறவுகள் அனைவருக்கும் வழிப்போக்கன் தனிமரத்தின் முதற்கண் வண்ணத்தமிழ்


மீண்டும் ஒரு காதல் ராகம் மீட்டும் 


இந்த நீண்ட தொடர் பயணத்தை உங்கள் பார்வைக்கு வலையில் ஏற்றுகின்றேன் அடுத்த பகிர்வு முதல்.!

நல்ல நட்புக்களின் புரிதல் எப்போதும் நல்ல செயல்களை முன்னெடுக்க ஊக்கசக்தியாக அமையும். அப்படியான நட்புவட்டத்தில் இந்தக் காதல் என்ற கவ்வாத்துக்கத்தி பலநேரங்களில் உறவுகளின் ரத்தம் கேட்கும் கோபத்தில் குளிர்காய என்பதும் ,அதன் பின் நிதானிக்கும் போது மனச்சிறைக்கதவுகளின் பின்னே கண்ணீர்ப்பூக்கள் சிந்தும் .

இப்படி செய்யத் தூண்டிய அந்தக்கணங்கள் ஒரு நொடியில் சுயம் இழந்த மனிதம் பற்றிய விடயத்தோடு இந்தத்தொடர்.எனக்குப் பிடித்தமான பலநட்புக்களின் வட்டத்தில் ஒருசில மலையகநண்பர்களின் வாழ்வில் அவர்கள் சந்தித்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தின் காலத்தின் சுவடுகளை .எனக்குப் பிடித்த பாடல்களும் ,கவிதைகளும் சுமந்து.கதையாக தொடரும் இந்தத்தொடர். செல்லும் பூமித்தேசம் துங்கித்தைச் சாரலில் துள்ளிக்குதித்து காணாமல் போன ஒரு வழிப்போக்கன் நட்பு வாழ்வில் ஒரு சம்பவமே .


அவர்களை தனிமரமும் அறியும் விற்பனைப்பிரதிநிதியாக வலம் வந்த காலத்தில்  .!!அவர்களை மீண்டும் சந்திக்கும் காலம் வருமா என்றாள்??? எனினும் அந்த மலையகத்தின் இன்னொரு தோடி ராகம் இந்தத் தொடர்!



பதுளையில் தொடங்கி எங்கோ செல்லும் விதியின் பாதையில் தொலைந்த இந்த மாந்தர்கள்!சாமானியவர்கள் என்றாலும் ஏதோ ஒன்றைச் சாதித்தவர்கள் .அவர்களின் வாழ்க்கைப் பாதையில் அந்த அனுபவத்தை தனிமரத்துடன் பகிர்ந்த போது இலக்கிய ஆசையில்  தொடர்கின்றேன்.
இந்தத்தொடரும் தகுதியுள்ளதோ இந்த பதிவுலக மேடையில் நான் அறியேன்!


எப்போதும் படிக்காதவன் இவன் அதிகம் எழுத்துப்பிழைவிட்டாலும் ,என் நட்பில் தோள் கொடுக்கும் இந்த நண்பன் உதவியுடன் .

மீண்டும் மலையகவீதி வழியே பதிவுலக உறவுகள் உங்கள் பலரையும் அழைத்துச் செல்ல இருக்கின்றேன் .


இந்த பஸ்சில் ஏறிக்கொள்ள வாருங்கள் என் உயிரே என்னைப்பிரியும் ஒரு நொடியில் !


என்றும் நட்புடன்
தனிமரம் .


இந்தப்பாடல் கேட்ட வண்ணம்!

//கவ்வாத்துக்கத்தி-தேயிலைத்தோட்டத்தொழில் செய்வோரின் இன்னொரு ஆயுதம்!ம்ம்ம்ம்

19 comments :

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் புதிய கதை இனிதே தொடரட்டும் அன்புச் சகோதரரே !

MANO நாஞ்சில் மனோ said...

பயணம் தொடரட்டும் தொடரட்டும்...!

திண்டுக்கல் தனபாலன் said...

பயணத்தை தொடர்கிறோம்... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
இதோ உங்களுடன் நாங்களும்
பயணத்துக்கு தயாராகிவிட்டோம்...

சீனு said...

மலையகம் பற்றி அறிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகம்... உங்கள் தொடர் மூலம் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது நன்றி ....

குட்டன்ஜி said...

பயணிக்கக் காத்திருக்கிறேன்

இளமதி said...

இதோ... நானும் வந்து ஏறிக்கொண்டேன்...
தொடருங்கள் நேசன். முற்கூட்டிய வாழ்த்துக்கள்!!!

த ம 4

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இப்போதெல்லாம் முன்பு போல் இரவில் கண் விழிக்க முடியவில்லை.இருந்தாலும்,காலைகளில் தேடிப் பிடித்துப் படித்துப் பின்னூட்டி விடுவேன்.மன்னிக்கவும் .தொடரட்டும் தொடர்.................!

K.s.s.Rajh said...

கலக்குங்க பாஸ்

r.v.saravanan said...

மலையகம் பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்

தனிமரம் said...

வாழ்த்துக்கள் புதிய கதை இனிதே தொடரட்டும் அன்புச் சகோதரரே//வாங்க அம்பாளடியாள் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

பயணம் தொடரட்டும் தொடரட்டும்//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பயணத்தை தொடர்கிறோம்... வாழ்த்துக்கள்.//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மகேந்திரன் said...
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
இதோ உங்களுடன் நாங்களும்
பயணத்துக்கு தயாராகிவிட்டோம்...///நன்றி மகிஅண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மலையகம் பற்றி அறிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகம்... உங்கள் தொடர் மூலம் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது நன்றி ....

20 May 2013 20:28 //நன்றி சீனு வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

பயணிக்கக் காத்திருக்கிறேன்//நன்றி குட்டன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

இதோ... நானும் வந்து ஏறிக்கொண்டேன்...
தொடருங்கள் நேசன். முற்கூட்டிய வாழ்த்துக்கள்!!!
//நன்றி இளமதி வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இப்போதெல்லாம் முன்பு போல் இரவில் கண் விழிக்க முடியவில்லை.இருந்தாலும்,காலைகளில் தேடிப் பிடித்துப் படித்துப் பின்னூட்டி விடுவேன்.மன்னிக்கவும் .தொடரட்டும் தொடர்.................!

21 May 2013 02:34 //நன்றி யோகா ஐயா அன்பான ஊக்கிவிப்புக்கு.முடிந்தளவு வாருங்கள்§ம்ம்ம்

தனிமரம் said...

கலக்குங்க பாஸ்//நன்றி ராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும்.